MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • இந்தியா
  • விண்வெளியில் கடந்த 9 ஆண்டுகளில் இந்தியாவின் மறக்க முடியாத சாதனைகளும், சந்திரயான் - 3 பயணமும்!!

விண்வெளியில் கடந்த 9 ஆண்டுகளில் இந்தியாவின் மறக்க முடியாத சாதனைகளும், சந்திரயான் - 3 பயணமும்!!

இந்தியாவின் கடந்த 9 ஆண்டுகால விண்வெளி சாதனைகளுக்கு புதிய பரிமாணத்தை சேர்க்கும் சந்திரயான் 3-ன் வெற்றிப் பயணம் இந்தியாவின் விண்வெளி அதிசயங்களை அறிந்து கொள்ள உதவியாக இருந்தது என்று மத்திய அரசு டிவிட்டரில் பதிவிட்டுள்ளது. இந்த நிலையில்தான் மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பத்தில் இன்று சந்திரயான் 3 நிலவில் தரையிறங்குகிறது. இன்று மாலை 6.04 மணிக்கு தரையிறங்கும் என்று இஸ்ரோ அறிவித்துள்ளது. இந்த தருணத்தைக் காண இந்தியர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

2 Min read
Dhanalakshmi G
Published : Aug 23 2023, 11:58 AM IST| Updated : Aug 23 2023, 12:30 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
111
இஸ்ரோவின் சாதனை

இஸ்ரோவின் சாதனை

கடந்த 9 ஆண்டுகளில் 424 வெளிநாட்டு செயற்கைக்கோள்களில் 389-ஐ இஸ்ரோ விண்ணில் செலுத்தியது. விண்வெளி கண்டுபிடிப்புகளில் நமது திறமைக்கு ஒரு சான்றாக அமைந்துள்ளது. 

211
விண்வெளி பட்ஜெட் அதிகரிப்பு

விண்வெளி பட்ஜெட் அதிகரிப்பு

கடந்த பத்து ஆண்டுகளில் இந்தியாவின் விண்வெளி பட்ஜெட்டுக்கான செலவு ரூ. 5615 கோடியில் இருந்து ரூ. 12543 கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. 

311
சாட்டிலைட் வருமானம்

சாட்டிலைட் வருமானம்

கடந்த ஒன்பது ஆண்டுகளில் வெளிநாட்டைச் சேர்ந்த 389 சாட்டிலைட்டுகளை ஏவியதன் மூலம் நாட்டுக்கு ரூ. 3,300 கோடி வருமானம் கிடைத்துள்ளது. இது நாடுகளுக்கு இடையிலான விண்வெளி ஒப்பந்தத்திற்கு எடுத்துக்காட்டாகும்.

411
இஸ்ரோ சாட்டிலைட் எண்ணிக்கை

இஸ்ரோ சாட்டிலைட் எண்ணிக்கை

2014ஆம் ஆண்டுகளுக்கு முன்பு வரை ஆண்டுக்கு 1.2 என்ற விகிதத்தில் சாட்டிலைட்டுகள் ஏவப்பட்டு வந்தன. 2014ஆம் ஆண்டுக்குப் பின்னர் இந்த விகிதம் 5.7 ஆக அதிகரித்துள்ளது. 

511
இஸ்ரோ சாட்டிலைட்

இஸ்ரோ சாட்டிலைட்

இஸ்ரோவின் ஏவுகணை எண்ணிக்கை 2014-க்கு முன்பு 4-ல் இருந்து 2014-லிருந்து 11-ஆக உயர்ந்துள்ளது. இது இளைஞர்கள் இடையே விண்வெளி ஆய்வுக்கான உந்துதலை ஏற்படுத்தியுள்ளது.

611
சந்திரயான் ஆர்பிட்டர்

சந்திரயான் ஆர்பிட்டர்

ஆராய்ச்சியாளர்களுக்கு சந்திரயான் ஆர்பிட்டர் சிறந்த அறிவியல் புள்ளி விவரங்களை அளிக்கிறது. இதனால் இன்று நிலவில் காலடி வைக்கும் சந்திரயான் 3-ஐ உலக நாடுகள் உற்று நோக்கி வருகின்றன.

711
யுவிகா திட்டம்

யுவிகா திட்டம்

எதிர்கால விஞ்ஞானிகளை வடிவமைக்கும் வருடாந்திர சிறப்பு திட்டமாக யுவிகா கொண்டு வரப்பட்டுள்ளது. திருவனந்தபுரம், ஜம்மு மற்றும் அகர்தலா கல்வி நிறுவனங்களில் 100% வேலைவாய்ப்புகளுடன் 3 ஆண்டுகளில் 603 மாணவர்கள் கலந்து கொண்டனர்.

811
தனியார் ஏவுகணை தளம்

தனியார் ஏவுகணை தளம்

நவம்பர் 25, 2022 அன்று, முதல் தனியார் ஏவுதளம் மற்றும் பணிக் கட்டுப்பாட்டு மையம் நிறுவப்பட்டதுடன் வரலாறு படைக்கப்பட்டது. விண்வெளி ஆய்வின் புதிய சகாப்தத்திற்கு முன்னோடியாக இது அமைந்தது.

911
SSLV - D2 செயற்கைக்கோள்

SSLV - D2 செயற்கைக்கோள்

ஸ்பேஸ் கிட்ஸ் என்ற திட்டத்தின் மூலம் 750 மாணவிகளின் கூட்டு முயற்சியால், வரலாற்று சிறப்புமிக்க SSLV - D2 மூன்று செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்த வழிவகுத்தது.

1011
நாசாவுடன் இந்தியா கூட்டு

நாசாவுடன் இந்தியா கூட்டு

நாசாவுடன் இணைந்து அடுத்த கட்ட விண்வெளி ஆராய்ச்சிக்கு இந்தியா ஒப்பந்தம் செய்துள்ளது. சந்திரயான் 3 வெற்றி இந்த ஒப்பந்தத்திற்கு மேலும் வலு சேர்க்கும். அடுத்தகட்டமாக நிலவில் மனிதர்கள் இறங்குவதற்கான ஆர்டிமிஸ் திட்டத்திற்கு சந்திரயான் 3 வெற்றி உதவும். நிசார் சாட்டிலைட்டுக்கு ரூ. 470 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இஸ்ரோவும், நாசாவும் பல்வேறு திட்டங்களில் கைகோர்த்துள்ளன.

1111
140 ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள்

140 ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள்

140 ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் 2020 முதல் இந்தியாவின் விண்வெளிக்கு உதவி வருகின்றன. IN-SPACe ஆனது, தொழில்துறை, கல்வித்துறை மற்றும் புத்தாக்கம் ஆகியவற்றின் சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்கி, விண்வெளி ஆய்வை மீண்டும் எழுதுகிறது.

About the Author

DG
Dhanalakshmi G
செய்தித்தாள், டிஜிட்டல் என்று 25 ஆண்டுகளுக்கும் மேலாக பத்திரிக்கைத்துறையில் அனுபவம் பெற்றவர். தினமலர், தினமணி, டைம்ஸ் இன்டர்நெட் ஆகியவற்றில் பணியாற்றிய அனுபவம் பெற்றவர். கோயம்புத்தூரில் இருக்கும் பிஎஸ்ஜி கலை அறிவியல் கல்லூரியில் எம்.ஏ., இதழியல் பட்டம் பெற்றவர். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்ட தருணத்தில் மாணவ பத்திரிக்கையாளராக தினமலரில் இருந்து சென்று இருந்தார். இந்த சம்பவம் தொடர்பாக செய்திகளை சமர்ப்பித்தவர். தற்போது ஏஷியா நெட் நியூஸ் தமிழ் டிஜிட்டல் மீடியாவில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். Digital technology புரிந்து கொண்டு பணியாற்றுவதில் ஆர்வம் உள்ளவர். கடந்த 12 ஆண்டுகளுக்கும் மேலாக டிஜிட்டல் துறையில் பணியாற்றி வருகிறார். சமூக அக்கறை கொண்ட விழிப்புணர்வு சார்ந்த செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பவர். Explained, Opinion செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
இந்தியா
பிரதமர் மோடி

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved