MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • இந்தியா
  • காடு வளர்ப்பில் 9வது இடத்துக்கு முன்னேறிய இந்தியா.. வன அடர்த்தியில் பின்னடைவு!

காடு வளர்ப்பில் 9வது இடத்துக்கு முன்னேறிய இந்தியா.. வன அடர்த்தியில் பின்னடைவு!

ஐக்கிய நாடுகள் சபையின் உலகளாவிய வன வள மதிப்பீடு 2025-ன்படி, இந்தியா வனப்பரப்பில் 9-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. இந்திய மாநில வன அறிக்கையின்படி, நாட்டின் பசுமைப் பரப்பு அதிகரித்தாலும், அடர்ந்த காடுகளின் தரம் குறைந்து வருவது கவலையளிக்கிறது.

1 Min read
SG Balan
Published : Oct 22 2025, 05:07 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
காடு வளர்ப்பில் இந்தியாவின் முன்னேற்றம்
Image Credit : X

காடு வளர்ப்பில் இந்தியாவின் முன்னேற்றம்

ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பின் (FAO) உலகளாவிய வன வள மதிப்பீடு 2025 (Global Forest Resources Assessment 2025) அறிக்கையின்படி, இந்தியாவின் மொத்த வனப்பரப்பு அதிகரித்துள்ளது. இதன் மூலம் தரவரிசை 10-வது இடத்தில் இருந்த இந்தியா 9-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. மேலும், வனப்பரப்பை அதிகரிப்பதில் உலகளவில் இந்தியா 3-வது இடத்தைத் தக்கவைத்துக் கொண்டுள்ளது.

24
அதிக வனவளம் கொண்ட நாடுகள்
Image Credit : Getty

அதிக வனவளம் கொண்ட நாடுகள்

இந்த வன வள மதிப்பீடானது, தனிப்பட்ட நாடுகள் அளிக்கும் தகவல்களின் அடிப்படையிலும், உறுப்பு நாடுகளின் ஆய்வுக்குப் பின்னரும் வெளியிடப்படுகிறது. உலகளவில் அதிகபட்ச வனப்பரப்பைக் கொண்டுள்ள நாடுகளில் ரஷ்யா (832.6 மில்லியன் ஹெக்டேர்), பிரேசில் (486 மில்லியன் ஹெக்டேர்), கனடா (68.8 மில்லியன் ஹெக்டேர்), அமெரிக்கா (308.89 மில்லியன் ஹெக்டேர்) ஆகியவை முன்னணியில் உள்ளன.

இந்தியாவின் வரையறையின்படி, ஒரு ஹெக்டேருக்கு மேல் பரப்பளவில் அடர்த்தியான மரங்களைக் கொண்ட அனைத்து நிலங்களும் வனப்பகுதி ஆகும். இந்த நிலத்தில் ரப்பர், காபி, தேங்காய் உள்ளிட்ட தோட்டங்களும் அடங்கும்.

Related Articles

Related image1
மரங்கள் நடுவதால் காலநிலை மாற்றம் சரியாகுமா? காடுகள் வளர்ப்பின் உண்மையும் தவறான புரிதலும்!
Related image2
சென்னையில் மியாவாக்கி காடுகளை உருவாக்கும் பணி தீவிரம்... இனி குளு குளு காற்று, திரும்பிய பக்கமெல்லாம் பசுமை..!
34
அமைச்சர் பூபேந்தர் யாதவ் கருத்து
Image Credit : Getty

அமைச்சர் பூபேந்தர் யாதவ் கருத்து

மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பூபேந்தர் யாதவ், ஐ.நா. அமைப்பின் அறிக்கையில் இந்தியாவின் முன்னேற்றம் பற்றிக் கருத்து தெரிவித்துள்ளார். இது நிலையன வன மேலாண்மை மற்றும் சுற்றுச்சூழல் சமநிலை குறித்த நாட்டின் அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்துகிறது என்று அவர் கூறினார்.

இந்தத் தரவரிசையில் இந்தியா அடைந்துள்ள குறிப்பிடத்தக்க முன்னேற்றம் வனப் பாதுகாப்பு, காடு வளர்ப்பு மற்றும் சுற்றுச்சூழல் நடவடிக்கைகளில் அரசின் கொள்கைகள் மற்றும் திட்டங்களின் வெற்றிக் காட்டுவதாகவும் அவர் தெரிவித்தார்.

44
வனங்களின் அடர்த்தி குறைவு
Image Credit : Pixabay

வனங்களின் அடர்த்தி குறைவு

நாட்டின் பசுமைப் பரப்பளவு அதிகரித்துள்ளபோதிலும், வனங்களின் பெரும் பகுதிகள் சீரழிந்துள்ளதையும், தோட்டங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதையும் இந்திய மாநில வன அறிக்கை 2023 எடுத்துரைத்துள்ளது.

2011 முதல் 2021 வரை, பத்து ஆண்டுகளில் 40,709.28 சதுர கி.மீ பரப்பளவில் வன அடர்த்தி குறைந்துள்ளதாகவும், மிக அடர்ந்த காடுகள் மற்றும் மிதமான அடர்ந்த காடுகள் திறந்த காடுகளாக மாறியுள்ளதாகவும் அந்த அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.

About the Author

SB
SG Balan
முதுகலை பட்டதாரி. டிஜிட்டலுக்கு செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகள் அனுபவம் கொண்டவர். கடந்த 2 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் உதவி ஆசிரியராகப் பணிபுரிந்து வருகிறார். வணிகம், தொழில்நுட்பம், கல்வி, அரசியல் செய்திகளில் ஆர்வமுள்ளவர். இதற்கு முன்பு டைம்ஸ் இன்டர்நெட்டில் பணிபுரிந்தார்.
காலநிலை மாற்றம் (Kālanilai Māṟṟam)
இந்தியா
உலகம்
சுற்றுச்சூழல்

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved