MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • இந்தியா
  • முதல் முறையாக அங்கன்வாடியில் AI தொழில்நுட்பம்! அசத்தும் மகாராஷ்டிர கிராமம்!

முதல் முறையாக அங்கன்வாடியில் AI தொழில்நுட்பம்! அசத்தும் மகாராஷ்டிர கிராமம்!

நாக்பூர் அருகே உள்ள வாடாம்னா கிராமத்தில் நாட்டின் முதல் AI அங்கன்வாடி மையம் தொடங்கப்பட்டுள்ளது. VR ஹெட்செட்டுகள், AI ஸ்மார்ட்போர்டுகள் போன்ற தொழில்நுட்பக் கருவிகள் மூலம் குழந்தைகளுக்கு கல்வி அளிக்கப்படுகிறது. 

2 Min read
Author : SG Balan
| Updated : Aug 04 2025, 05:35 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
அங்கன்வாடியில் AI தொழில்நுட்பம்
Image Credit : x/@CivilLearning1

அங்கன்வாடியில் AI தொழில்நுட்பம்

மகாராஷ்டிராவின் நாக்பூர் அருகே உள்ள வாடாம்னா (Waddhamna) என்ற சிறிய கிராமத்தில், நாட்டிலேயே முதல் முறையாக செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் கல்வி கற்பிக்கப்படுகிறது. இந்த அங்கன்வாடி மையம், நாக்பூர் நகரத்திலிருந்து சுமார் 18 கி.மீ தொலைவில் உள்ள கிராமத்தில் இருக்கிறது. இங்கு இரண்டு முதல் ஆறு வயது வரையிலான குழந்தைகள் படிக்கிறார்கள். 

'மிஷன் பால் பாராரி' திட்டத்தின் கீழ் தொடங்கப்பட்டுள்ள இந்த அங்கன்வாடி மையம், வழக்கமான ரும்பலகைக்குப் பதிலாக நவீன டிஜிட்டல் போர்டைக் கொண்டுள்ளது. இதனால், கடந்த சில மாதங்களில், இந்த அங்கன்வாடியில் குழந்தைகளின் வருகை இருமடங்காக அதிகரித்துள்ளது. முன்னதாக சுமார் 10 குழந்தைகள் மட்டுமே இருந்த நிலையில், தற்போது 25-க்கும் மேற்பட்ட குழந்தைகள் தினமும் ஆர்வத்துடன் வந்து பயின்று வருகின்றனர்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
VR ஹெட்செட்டுகள், AI ஸ்மார்ட்போர்டுகள்
Image Credit : x/@CivilLearning1

VR ஹெட்செட்டுகள், AI ஸ்மார்ட்போர்டுகள்

இந்த அங்கன்வாடியில் விர்ச்சுவல் ரியாலிட்டி (VR) ஹெட்செட்டுகள், AI ஸ்மார்ட்போர்டுகள், டேப்லெட்டுகள் போன்ற நவீன சாதனங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இதன் மூலம் பாடங்கள் முன்பை விட மிகவும் சுவாரஸ்யமாக மாறியுள்ளன. மாவட்டத்தில் உள்ள 2,200-க்கும் மேற்பட்ட அங்கன்வாடி மையங்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட இந்த மையம், வைஃபை இணைப்பு மற்றும் சிசிடிவி கேமராக்கள் போன்ற நவீன உள்கட்டமைப்பு வசதிகளுடன் புதுப்பிக்கப்பட்டுள்ளது. அங்கன்வாடி ஊழியர்களுக்கும் தொழில்நுட்பத்தை எளிதாகப் பயன்படுத்தும் வகையில் பிரத்யேக பயிற்சி அளிக்கப்பட்டது.

34
புதிய கற்றல் முறை
Image Credit : x/@CivilLearning1

புதிய கற்றல் முறை

இந்த புதிய டிஜிட்டல் அங்கன்வாடியில், விளையாட்டான செயல்பாடுகள் மூலம் அடிப்படைப் பாடங்கள் கற்றுக்கொடுக்கப்படுகின்றன. மெய்நிகர் (Virtual) சுற்றுப்பயணங்கள் அல்லது டிஜிட்டல் போர்டுகள் மூலம் வடிவங்கள், விலங்குகள் மற்றும் பொருட்களை அடையாளம் காண கற்றுத்தரப்படுகிறது. மேலும், ஒவ்வொரு குழந்தையின் கற்றல் வேகத்திற்கு ஏற்ப பாடங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. இதனால், விரைவாகக் கற்கும் மாணவர்களும், நிதானமாக கற்கும் மாணவர்களும் சமமாகப் பயனடைகின்றனர்.

ஓவியம் வரைதல், பாட்டுப் பாடுதல் மற்றும் கவிதைகள் சொல்வது போன்ற செயல்பாடுகள் இப்போது தொழில்நுட்ப உதவியுடன் நடத்தப்படுகின்றன. குழந்தைகளின் முன்னேற்றத்தைக் கண்காணிக்க அவர்களது படைப்புகள் டிஜிட்டல் முறையில் சேமித்து வைக்கப்படுகின்றன.

44
சமூகத்தில் ஏற்பட்ட மாற்றம்
Image Credit : x/@CivilLearning1

சமூகத்தில் ஏற்பட்ட மாற்றம்

இந்த முயற்சி ஏற்படுத்தியுள்ள தாக்கம் உடனடியாகத் தெரியவந்துள்ளது. முன்பு தங்கள் குழந்தைகளை அங்கன்வாடிக்கு அனுப்பத் தயங்கிய பெற்றோர்கள், இப்போது தங்கள் குழந்தைகள் ஆர்வத்துடன் செல்வதைக் கண்டு மகிழ்ச்சியடைகின்றனர். அங்கன்வாடிக்கு செல்ல மறுத்த குழந்தைகள் கூட, இப்போது புதிய தொழில்நுட்பக் கருவிகளுடன் மகிழ்ச்சியாகப் பங்கேற்க ஆவலுடன் உள்ளனர்.

வாடாம்னா கிராமத்தில் வெற்றிகரமாகச் செயல்படுத்தப்பட்ட இந்த மாதிரி அங்கன்வாடி திட்டம், மாவட்டத்தில் உள்ள மேலும் 40 அங்கன்வாடிகளுக்கு விரிவுபடுத்தப்பட உள்ளது. கிராமப்புறங்களில் உள்ள குழந்தைகளும் நவீன முறையில் கல்வியை பெற முடியும் என்பதற்கு இந்த முன்னோடித் திட்டம் ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக உள்ளது.

About the Author

SB
SG Balan
முதுகலை பட்டதாரி. டிஜிட்டலுக்கு செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகள் அனுபவம் கொண்டவர். கடந்த 2 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் உதவி ஆசிரியராகப் பணிபுரிந்து வருகிறார். வணிகம், தொழில்நுட்பம், கல்வி, அரசியல் செய்திகளில் ஆர்வமுள்ளவர். இதற்கு முன்பு டைம்ஸ் இன்டர்நெட்டில் பணிபுரிந்தார்.
இந்தியா
கல்வி
செயற்கை நுண்ணறிவு
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
EPFO சம்பள வரம்பு உயர்வால் கைக்கு வரும் சம்பளம் குறையுமா? ஊழியர்கள் தெரிந்துகொள்ள வேண்டிய முழு விவரம்!
Recommended image2
Longest Train Journeys In India: 3 பகல், 3 இரவு... இந்தியாவையே கடக்கும் ரயில் பயணம்! 75 மணி நேரம் தொடரும் பிரம்மாண்ட Train Travel.!
Recommended image3
150 vs 151: மகனை ஜெயிக்க வைத்துவிட்டு மறைந்த தாய்... நெஞ்சை உருக்கும் தேர்தல் களம்!
Related Stories
Recommended image1
வேலை பார்த்து கொண்டே படிக்க ஆசையா? பெரியார் பல்கலைக்கழக தொலைதூரக் கல்வி அட்மிஷன் ஆரம்பம்!
Recommended image2
எல்லாம் AI தான் பாஸ்! இனி ஸ்கூலே இருக்காது! எதிர்காலக் கல்வி பற்றி சாம் ஆல்ட்மேன் பேட்டி
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved