MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • இந்தியா
  • குறைகிறது மதுபானம் விலை.! குடிமகன்களுக்கு குஷியான செய்தி சொன்ன அரசு

குறைகிறது மதுபானம் விலை.! குடிமகன்களுக்கு குஷியான செய்தி சொன்ன அரசு

மதுபானத்தின் விற்பனை நாடு முழுவதும் அதிகரித்து வருகிறது. ஒரே நாளில் 50 கோடி ரூபாய் வரை வருமானம் ஈட்டி வரும் நிலையில், குடிமகன்களுக்கு மகிழ்ச்சி அளிக்கக்கூடிய வகையில் மதுபான விலையை குறைத்து அறிவிக்கப்பட்டுள்ளது.  

2 Min read
Ajmal Khan
Published : Sep 19 2024, 03:01 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
tasmac

tasmac

மதுபானம் விலை- குடிமகன்கள் அதிர்ச்சி

மதுபானம் விற்பனையானது நாடு முழுவதும் அதிகரித்து வருகிறது. மதுபான கடைகளும், பார்களும் போட்டி போட்டி தொடங்கப்படுகிறது. ஆனால் மதுபான விலையை அந்த அந்த மாநில அரசே நிர்ணயிக்கிறது. அந்த வகையில் மின்சாரம்,பால் , பேருந்து கட்டணங்கள் சற்று உயர்த்தினாலும் அரசியல் கட்சிகள் முதல் பொதுமக்கள் வரை அரசை விமர்சிப்பது மட்டுமல்ல, சாலையில் இறங்கி போராட்டத்திலும் ஈடுபடுவார்கள். ஆனால் மதுபான விலையானது எவ்வளவு உயர்த்தினாலும் எந்தவித எதிர்ப்பும் இருக்காது. மதுபான கடையில் கூட்டம் தான் தொடர்ந்து அதிகரிக்கும். கிராமங்களில் மது குடித்தாலே ஊரை விட்டு ஒதுக்கி வைக்கும் நிலை மாறி, தற்போது மதுபானம் குடிப்பது பேஷனாகிவிட்டது. முகத்தை மறைத்துக்கொண்டு மதுகுடித்த காலம் மலையேறிவிட்டது.  

24

கோடிகணக்கணக்கில் பணம் கொட்டும் மது விற்பனை

ஆண்களுக்கு போட்டியாக பெண்களின் கைகளிலும் மதுபானம் அதிகளவு காட்சியளிக்கிறது. இரவு நேரத்தில் மது விருந்தோடு நடைபெறும் பார்ட்டிகளில் பல லட்சம் ரூபாய் செலவு செய்து உற்சாகத்தில் மிதந்து வருகிறார்கள் இன்றைய இளைஞர்கள்.அதே நேரத்தில் தமிழகத்தை பொறுத்தவரை அரசின் எந்த திட்டங்களை செயல்படுத்துவதாக இருந்தாலும் டாஸ்மாக் மூலம் வரும் வருவாய் மிகப்பெரிய உதவியாக இருந்து வருகிறது. அந்த அளவிற்கு மதுபானம் விற்பனை உள்ளது. சாதாரண நாட்களில் நாளொன்றுக்கு 40 முதல் 6 கோடிக்கு விற்பனையாகும் மதுபானம், இதுவே தீபாவளி, பொங்கல், புத்தாண்டு என்று சொன்னால் கேட்கவா வேண்டும் ஒரே நாளில் 150 முதல் 200 கோடி வரை மதுபானம் விற்பனை செய்யப்படுகிறது. 

34
Chandra Babu

Chandra Babu

குடிமகன்களுக்கு குட் நியூஸ்

மேலும் தமிழக அரசை பொறுத்தவரை மதுபானம் விலையானது அவ்வப்போது உயர்த்தப்பட்டு வருகிறது. பீர்களின் விலை கடந்த சில மாதங்களுக்கு முன்பு 10 ரூபாய் முதல் 20 ரூபாய் வரை உயர்த்தப்பட்டது. பிராந்தி மற்றும் விஸ்கியின் விலையும் ஒரு குவாட்டருக்உக 10 ருபாய் முதல் 30 ரூபாய் வரை உயர்ந்தது. இதனால் குடிமகன்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இந்த சூழ்நிலையில் குடிமகன்களுக்கு மகிழ்ச்சி தரக்கூடிய அறிவிப்பை ஆந்திரா அரசு அறிவித்துள்ளது. அந்தவகையில் ஆந்திராவில் வரும் 1ம் தேதி முதல் 99ரூபாய்க்கு 180மிலி மதுபானங்கள் விற்பனைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் புதிய மதுபான கொள்கைக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதன் படி, அனைத்து வகையான மதுபானங்களின் விலையையும் மாநில அரசு குறைத்து அறிவித்துள்ளது. 

44

மதுபான விலையை குறைத்த ஆந்திர அரசு

மேலும் ஆந்திராவில் முக்கியமான இரண்டு 12 நகரங்களில் எலைட் மதுபான கடைகளை திறக்கவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாகவும், அங்கும் குறைந்த விலையில் மதுபானங்களை விற்பனை செய்ய முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  புதிய மதுபானக் கொள்கையை அமல்படுத்துவதன் மூலம் ஆந்திரப் பிரதேசத்தின் வருவாய் சுமார் ரூ.2 ஆயிரம் கோடி அளவுக்குப் பெருகும் என ஆந்திர அரசு திட்டம் வகுத்துள்ளது. 

டாஸ்மாக் கடையை இந்த தேதியில் கண்டிப்பாக மூடனும்.! குடிமகன்களுக்கு ஷாக் கொடுத்த அரசு- எப்போது தெரியுமா.?

About the Author

AK
Ajmal Khan
அஜ்மல்கான், பிரபல தொலைக்காட்சிகளில் மூத்த மற்றும் சிறப்பு செய்தியாளராக பணிபுரிந்துள்ளார். 20வருடங்களாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர், கடந்த 3 ஆண்டுகளாக ஏசியா நெட் இணையதளத்தில் தமிழ்நாடு மற்றும் அரசியல் சார்ந்த செய்திகளையும் எழுதி வருகிறார்.
தமிழ்நாடு
டாஸ்மாக்

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved