MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • இந்தியா
  • கூகுள் துணைத் தலைவர் திருப்பதிக்கு ரூ.1 கோடி நன்கொடை!

கூகுள் துணைத் தலைவர் திருப்பதிக்கு ரூ.1 கோடி நன்கொடை!

கூகுள் நிறுவனத்தின் துணைத் தலைவர் தோட்டா சந்திரசேகர், திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் ஸ்ரீ வெங்கடேஸ்வரா பிராணதான அறக்கட்டளைக்கு ஒரு கோடி ரூபாய் நன்கொடை வழங்கியுள்ளார். இந்த நன்கொடை ஏழை நோயாளிகளுக்கு இலவச மருத்துவ வசதிகள் வழங்க உதவும்.

1 Min read
SG Balan
Published : Jun 26 2025, 03:33 PM IST| Updated : Jun 26 2025, 03:34 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
கூகுள் துணைத் தலைவர் தோட்டா சந்திரசேகர்
Image Credit : Google

கூகுள் துணைத் தலைவர் தோட்டா சந்திரசேகர்

உலகின் பணக்கார இந்து கோவில்களில் ஒன்றான திருப்பதி ஏழுமலையான் கோவிலை நிர்வகிக்கும் திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு, கூகுள் நிறுவனத்தின் துணைத் தலைவர் தோட்டா சந்திரசேகர் ஒரு கோடி ரூபாய் நன்கொடை அளித்துள்ளார்.

24
திருமலை திருப்பதி தேவஸ்தானம்
Image Credit : Getty

திருமலை திருப்பதி தேவஸ்தானம்

இந்தியா மட்டுமல்லாமல் உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் திருப்பதி வந்து ஏழுமலையானைத் தரிசனம் செய்து வருகின்றனர். இந்தக் கோவிலை நிர்வகிக்கும் திருமலை திருப்பதி தேவஸ்தானம், பக்தர்களுக்குத் தேவையான வசதிகளைச் செய்வதற்காகவும், ஏழை மக்களுக்கு உதவி செய்வதற்காகவும், பொதுநலன் சார்ந்த நோக்கங்களுக்காகவும் பல்வேறு அறக்கட்டளைகளை அமைத்துள்ளது. இந்த அறக்கட்டளைகளுக்குப் பல்வேறு நன்கொடையாளர்கள் பெருமளவிலான நன்கொடைகளை வழங்கி வருகின்றனர்.

Related Articles

Related image1
இனி திருப்பதி லட்டு வாங்க காத்திருக்க வேண்டாம்! புதிய வசதி அறிமுகம்!
Related image2
Renigunta Airport: திருப்பதி விமான நிலையத்தின் பெயர் மாற்றம்? தேவஸ்தானம் பரிந்துரைத்தது என்ன பெயர் தெரியுமா?
34
திருப்பதி அறக்கட்டளைக்கு நிதி
Image Credit : social media

திருப்பதி அறக்கட்டளைக்கு நிதி

அந்த வகையில், ஏழை நோயாளிகளுக்கு இலவச மருத்துவ வசதிகளை வழங்கும் ஸ்ரீ வெங்கடேஸ்வரா பிராணதான அறக்கட்டளைக்கு (எஸ்.வி.பிராணதான அறக்கட்டளை) கூகுள் நிறுவனத்தின் துணைத் தலைவர் திரு. தோட்டா சந்திரசேகர் ஒரு கோடி ரூபாய் நன்கொடை அளித்துள்ளார். இதற்கான காசோலையை அவர் திருமலை திருப்பதி தேவஸ்தான தலைவர் திரு. பி.ஆர்.நாயுடுவிடம் நேரில் வழங்கினார்.

44
தேவஸ்தான அதிகாரிகள் பாராட்டு
Image Credit : tirupati temple instagram

தேவஸ்தான அதிகாரிகள் பாராட்டு

ஒரு கோடி ரூபாய் நன்கொடை வழங்கிய கூகுள் துணைத் தலைவரை தேவஸ்தான அதிகாரிகள் மனதாரப் பாராட்டினர். இந்த நன்கொடை ஏழை நோயாளிகளுக்கு மருத்துவ உதவிகளை வழங்குவதில் பெரும் பங்காற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.

About the Author

SB
SG Balan
முதுகலை பட்டதாரி. டிஜிட்டலுக்கு செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகள் அனுபவம் கொண்டவர். கடந்த 2 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் உதவி ஆசிரியராகப் பணிபுரிந்து வருகிறார். வணிகம், தொழில்நுட்பம், கல்வி, அரசியல் செய்திகளில் ஆர்வமுள்ளவர். இதற்கு முன்பு டைம்ஸ் இன்டர்நெட்டில் பணிபுரிந்தார்.
திருமலை
திருப்பதி
கூகிள்
ஆன்மீகம்

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved