MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • இந்தியா
  • தமிழகத்தில் எஸ்.ஐ.ஆர். பணிக்கு கால அவகாசம் நீட்டிப்பு! டிச. 11 வரை படிவங்களை சமர்ப்பிக்கலாம்!

தமிழகத்தில் எஸ்.ஐ.ஆர். பணிக்கு கால அவகாசம் நீட்டிப்பு! டிச. 11 வரை படிவங்களை சமர்ப்பிக்கலாம்!

தமிழகம் மற்றும் கேரளாவின் எதிர்ப்பைத் தொடர்ந்து, வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தப் பணிக்கான (SIR) கால அவகாசம் டிசம்பர் 11 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. வரைவு வாக்காளர் பட்டியல் டிசம்பர் 16 அன்றும், இறுதிப் பட்டியல் பிப்ரவரி 14 அன்றும் வெளியிடப்படும்.

2 Min read
SG Balan
Published : Nov 30 2025, 03:19 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
SIR பணிக்கு கூடுதல் அவகாசம்
Image Credit : Asianet News

SIR பணிக்கு கூடுதல் அவகாசம்

தமிழகம் உட்பட நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்டு வரும் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தப் பணிக்கான (எஸ்.ஐ.ஆர்.) கால அவகாசம் ஒரு வாரம் நீட்டிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு மற்றும் கேரளாவின் எதிர்ப்பை அடுத்து, இந்தியத் தேர்தல் ஆணையம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

24
டிச. 11 வரை படிவங்களை சமர்ப்பிக்கலாம்
Image Credit : Asianet News

டிச. 11 வரை படிவங்களை சமர்ப்பிக்கலாம்

தமிழகத்தில் அடுத்த ஆண்டு (2026) ஏப்ரல் அல்லது மே மாதங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளதை முன்னிட்டு, வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் (Special Intensive Revision - SIR) மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்காக, நவம்பர் மாதத் தொடக்கத்தில் இருந்து வாக்கு மைய நிலை அலுவலர்கள் (BLO) வீடு வீடாகச் சென்று விண்ணப்பப் படிவங்களை விநியோகித்தனர்.

இந்தப் படிவங்களை நிரப்பித் திரும்ப ஒப்படைப்பதற்கான கால அவகாசம் டிசம்பர் 4ஆம் தேதியுடன் முடிவடையும் என முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், குறுகிய கால அவகாசத்திற்குள் பணியை முடிப்பது சாத்தியமில்லை என தமிழக அரசு தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. மேலும், இந்தப் பணிகளுக்காக நியமிக்கப்பட்ட ஊழியர்களில் சிலர், மன அழுத்தம் மற்றும் நெருக்கடி காரணமாகத் தற்கொலை செய்துகொண்ட சம்பவங்களும் அதிர்ச்சியை ஏற்படுத்தின.

இந்தச் சூழலில், எஸ்.ஐ.ஆர். நடைமுறைகள் டிசம்பர் 4-ம் தேதியுடன் முடிவடைய இருந்த நிலையில், தற்போது இந்தக் கால அவகாசம் ஒரு வாரம் நீட்டிக்கப்பட்டு, டிசம்பர் 11ஆம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவங்களை வாக்காளர்கள் டிசம்பர் 11 வரை திருப்பி ஒப்படைக்கலாம்.

Related Articles

Related image1
மேற்கு வங்கத்தில் மற்றொரு BLO மரணம்! SIR பணிச்சுமையால் 4 பேர் உயிரிழப்பு!
Related image2
SIR படிவத்தை உடனே சமர்ப்பிக்கலாம்.. உறவினர் பெயர் கட்டாயம் இல்லை.. தேர்தல் அதிகாரி தகவல்
34
வரைவு மற்றும் இறுதி வாக்காளர் பட்டியல்
Image Credit : Asianet News

வரைவு மற்றும் இறுதி வாக்காளர் பட்டியல்

எஸ்.ஐ.ஆர். பணிகளுக்குத் தமிழகம் மற்றும் கேரளா ஆகிய மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்ததைத் தொடர்ந்து, தேர்தல் ஆணையத்தின் இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

நீட்டிக்கப்பட்ட கால அவகாசத்திற்குப் பிறகு, டிசம்பர் 16-ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். இதையடுத்து, வாக்காளர் இறுதிப் பட்டியல் பிப்ரவரி 14-ம் தேதி வெளியிடப்படும் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

44
பீகாரில் SIR நிறைவேற்றம்
Image Credit : Getty

பீகாரில் SIR நிறைவேற்றம்

முன்னதாக, பீகார் சட்டசபை தேர்தலை முன்னிட்டு இந்த வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் (எஸ்.ஐ.ஆர்.) கடந்த ஆண்டு (2025) நடத்தப்பட்டது. அப்போது, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த போதிலும், எஸ்.ஐ.ஆர். பணிகள் நடத்தி முடிக்கப்பட்டு, தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் என்.டி.ஏ. கூட்டணி மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியைத் தக்க வைத்துக் கொண்டது குறிப்பிடத்தக்கது.

About the Author

SB
SG Balan
முதுகலை பட்டதாரி. டிஜிட்டலுக்கு செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகள் அனுபவம் கொண்டவர். கடந்த 2 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் உதவி ஆசிரியராகப் பணிபுரிந்து வருகிறார். வணிகம், தொழில்நுட்பம், கல்வி, அரசியல் செய்திகளில் ஆர்வமுள்ளவர். இதற்கு முன்பு டைம்ஸ் இன்டர்நெட்டில் பணிபுரிந்தார்.
தமிழ்நாடு
தேர்தல்
Latest Videos
Recommended Stories
Recommended image1
இந்தியாவின் உணவு தானிய உற்பத்தி 357 மில்லியன் டன்னாக உயர்வு: பிரதமர் மோடி பெருமிதம்!
Recommended image2
பெங்களூரு, மும்பை வாடகைக்காரர்களுக்கு குட் நியூஸ்.. விதிகள் எல்லாம் மாறிப்போச்சு.!
Recommended image3
இனி ராஜ் பவன் இல்லை; மக்கள் பவன்..! ஆர்.என்.ரவி கோரிக்கையை ஏற்று ஆளுநர் மாளிகை பெயர் மாற்றம்!
Related Stories
Recommended image1
மேற்கு வங்கத்தில் மற்றொரு BLO மரணம்! SIR பணிச்சுமையால் 4 பேர் உயிரிழப்பு!
Recommended image2
SIR படிவத்தை உடனே சமர்ப்பிக்கலாம்.. உறவினர் பெயர் கட்டாயம் இல்லை.. தேர்தல் அதிகாரி தகவல்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved