MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • இந்தியா
  • சி.பி.எஸ்.இ., 10ஆம் வகுப்புக்கு 2026 முதல் ஆண்டுக்கு 2 முறை பொதுத்தேர்வு

சி.பி.எஸ்.இ., 10ஆம் வகுப்புக்கு 2026 முதல் ஆண்டுக்கு 2 முறை பொதுத்தேர்வு

சி.பி.எஸ்.இ., 2026 முதல் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வை ஆண்டுக்கு இருமுறை நடத்தும். மாணவர்கள் மதிப்பெண்களை மேம்படுத்திக் கொள்ள இது வாய்ப்பளிக்கும்.

1 Min read
SG Balan
Published : Jun 25 2025, 06:12 PM IST| Updated : Jun 25 2025, 06:14 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
சி.பி.எஸ்.இ., 10ஆம் வகுப்பு
Image Credit : Getty

சி.பி.எஸ்.இ., 10ஆம் வகுப்பு

மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சி.பி.எஸ்.இ.,), 2026 ஆம் ஆண்டு முதல் 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளை ஆண்டுக்கு இருமுறை நடத்த ஒப்புதல் அளித்துள்ளதாக அறிவித்துள்ளது. மாணவர்களுக்குக் கூடுதல் வாய்ப்பு வழங்கும் நோக்கில் இந்த நடைமுறை கொண்டுவரப்படுவதாக சி.பி.எஸ்.இ., தேர்வுக் கட்டுப்பாட்டு தலைவர் சன்யாம் பரத்வாஜ் தெரிவித்துள்ளார்.

24
ஆண்டுக்கு 2 முறை பொதுத்தேர்வு
Image Credit : Asianet News

ஆண்டுக்கு 2 முறை பொதுத்தேர்வு

இது குறித்து சன்யாம் பரத்வாஜ் கூறியதாவது:

"2026 ஆம் ஆண்டு முதல், ஆண்டுக்கு இரண்டு முறை 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்துவதற்கான விதிமுறைகளை சி.பி.எஸ்.இ., அங்கீகரித்துள்ளது. இந்த புதிய நடைமுறையின்படி, முதல் கட்ட தேர்வுகள் பிப்ரவரி மாதத்திலும், இரண்டாவது கட்ட தேர்வுகள் மே மாதத்திலும் நடைபெறும்.

Related Articles

Related image1
சிபிஎஸ்இ தேர்வில் வைபவ் சூர்யவன்ஷி தோல்வியா? உண்மை என்ன?
Related image2
சிபிஎஸ்இ துணைத் தேர்வுகள்: எப்போது தெரியுமா? தவற விடாதீர்கள்!
34
மதிப்பெண்களை உயர்த்திக்கொள்ள வாய்ப்பு
Image Credit : Getty

மதிப்பெண்களை உயர்த்திக்கொள்ள வாய்ப்பு

மாணவர்களுக்குக் கூடுதல் வாய்ப்பு வழங்கும் வகையில் இந்த நடைமுறை இருக்கும். முதல் கட்ட பொதுத்தேர்வு முடிவுகள் ஏப்ரல் மாதத்திலும், இரண்டாம் கட்ட பொதுத்தேர்வு முடிவுகள் ஜூன் மாதத்திலும் வெளியிடப்படும்.

முதல் தேர்வில் கலந்து கொள்வது கட்டாயம். இரண்டாம் தேர்வில் மாணவர்கள் விருப்பமிருந்தால் கலந்து கொள்ளலாம். முதல் பொதுத்தேர்வில் குறைவாக மதிப்பெண்கள் எடுத்தாலும், மாணவர்கள் இரண்டாவது தேர்வில் கலந்துகொண்டு கூடுதல் மதிப்பெண்கள் பெற முடியும்.

44
பாடங்களில் மேம்படுத்திக் கொள்ள அனுமதி
Image Credit : Getty

பாடங்களில் மேம்படுத்திக் கொள்ள அனுமதி

கணிதம், அறிவியல், சமூக அறிவியல் மற்றும் மொழிப்பாடம் ஆகிய முக்கிய பாடங்களில் ஏதேனும் மூன்றில் தங்கள் மதிப்பெண்களை மேம்படுத்திக் கொள்ள அனுமதிக்கப்படுவார்கள்.

மேலும், உள்மதிப்பீடு தேர்வு ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே நடத்தப்படும்" இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இந்த அறிவிப்பு, மாணவர்களின் கல்விச் சுமையைக் குறைக்கவும், சிறந்த மதிப்பெண்கள் பெற அவர்களுக்கு அதிக வாய்ப்புகளை வழங்கவும் உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

About the Author

SB
SG Balan
முதுகலை பட்டதாரி. டிஜிட்டலுக்கு செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகள் அனுபவம் கொண்டவர். கடந்த 2 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் உதவி ஆசிரியராகப் பணிபுரிந்து வருகிறார். வணிகம், தொழில்நுட்பம், கல்வி, அரசியல் செய்திகளில் ஆர்வமுள்ளவர். இதற்கு முன்பு டைம்ஸ் இன்டர்நெட்டில் பணிபுரிந்தார்.
சி.பி.எஸ்.ஈ.
பள்ளிகள்
பள்ளி மாணவர்
Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved