MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • இந்தியா
  • திருப்பதிக்கு 121 கிலோ தங்கம் நன்கொடை கொடுத்த பிரபல தொழிலதிபர்!

திருப்பதிக்கு 121 கிலோ தங்கம் நன்கொடை கொடுத்த பிரபல தொழிலதிபர்!

ஆந்திரப் பிரதேச முதல்வர், ஒரு பக்தர் திருப்பதி ஏழுமலையானுக்கு 121 கிலோ தங்கம் நன்கொடையாக வழங்க உள்ளதாக அறிவித்துள்ளார். தனது தொழில் வெற்றிக்கு நன்றிக்கடனாக இந்த நன்கொடையை வழங்குகிறார். இந்தத் தங்கத்தின் மதிப்பு சுமார் ரூ.140 கோடி.

1 Min read
SG Balan
Published : Aug 19 2025, 06:40 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
திருப்பதிக்கு 121 கிலோ தங்கம் நன்கொடை
Image Credit : TTD Website

திருப்பதிக்கு 121 கிலோ தங்கம் நன்கொடை

ஆந்திரப் பிரதேச முதல்வர் என்.சந்திரபாபு நாயுடு, திருமலை ஏழுமலையானின் பக்தர் ஒருவர், தனது தொழில் வெற்றிக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக 121 கிலோ தங்கம் நன்கொடையாக வழங்க முன்வந்துள்ளதாக அறிவித்துள்ளார். இந்தத் தங்கத்தின் மதிப்பு சுமார் ரூ.140 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது.

24
நன்கொடையின் பின்னணி
Image Credit : Social Media

நன்கொடையின் பின்னணி

மங்களகிரியில் நடைபெற்ற 'வறுமை ஒழிப்பு' தொடர்பான P4 திட்டத்தின் கூட்டத்தில் பேசிய முதல்வர் சந்திரபாபு நாயுடு, பெயர் குறிப்பிட விரும்பாத அந்த பக்தர் குறித்த தகவலைப் பகிர்ந்து கொண்டார்.

"ஒரு பக்தர் புதிய நிறுவனம் தொடங்க விரும்பினார். அதைத் தொடங்கி, அதில் பெரும் வெற்றியும் கண்டார். அந்த வெற்றிக்கான நன்றியை இறைவனுக்குத் தெரிவிக்க அவர் முடிவு செய்தார். இதன் விளைவாக, தற்போது அவர் ஏழுமலையான் சுவாமிக்கு 121 கிலோ தங்கத்தை நன்கொடையாக வழங்க உள்ளார்," என்று முதல்வர் கூறினார்.

Related Articles

Related image1
திருப்பதி போக இனி FASTAG கட்டாயம்! அலிபிரி செக்போஸ்டில் ஈஸியாக 'ஃபாஸ்டேக்' பெறுவது எப்படி? முழு விவரம்!
Related image2
Now Playing
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தன் மகனுடன் சாமி தரிசனம் செய்த நடிகை ரம்யா கிருஷ்ணன்..!
34
ஏழுமலையான் கொடுத்த லாபம்
Image Credit : Social Media

ஏழுமலையான் கொடுத்த லாபம்

"அந்த பக்தர், தனது நிறுவனத்தின் 60% பங்குகளை விற்பனை செய்ததன் மூலம், 1.5 பில்லியன் அமெரிக்க டாலர் (சுமார் ரூ.6,000 கோடி முதல் ரூ.7,000 கோடி வரை) ஈட்டியுள்ளார். இந்த லாபத்தை அளித்தவர் ஏழுமலையான் தான் என்று கருதி, அதில் ஒரு பகுதியை நன்கொடையாக வழங்க அவர் தீர்மானித்துள்ளார்" என்றும் நாயுடு தெரிவித்தார்.

44
திருப்பதியின் தினசரி அலங்காரம்
Image Credit : social media

திருப்பதியின் தினசரி அலங்காரம்

தற்போது, ஏழுமலையான் சுவாமியின் மூலவர் சிலை தினமும் சுமார் 120 கிலோ தங்க ஆபரணங்களால் அலங்கரிக்கப்படுகிறது. இதை அறிந்த அந்த பக்தர், 121 கிலோ தங்கம் வழங்க முன்வந்துள்ளதாக முதல்வர் கூறினார்.

About the Author

SB
SG Balan
முதுகலை பட்டதாரி. டிஜிட்டலுக்கு செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகள் அனுபவம் கொண்டவர். கடந்த 2 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் உதவி ஆசிரியராகப் பணிபுரிந்து வருகிறார். வணிகம், தொழில்நுட்பம், கல்வி, அரசியல் செய்திகளில் ஆர்வமுள்ளவர். இதற்கு முன்பு டைம்ஸ் இன்டர்நெட்டில் பணிபுரிந்தார்.
இந்தியா
திருப்பதி
ஆன்மீகம்

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved