- Home
- உடல்நலம்
- ரோபோ சங்கருக்கு ஏற்பட்டது இதுதான்... இந்த அறிகுறிகள் உங்களுக்கும் இருக்கிறதா..? அலட்சியம் வேண்டாம்..!
ரோபோ சங்கருக்கு ஏற்பட்டது இதுதான்... இந்த அறிகுறிகள் உங்களுக்கும் இருக்கிறதா..? அலட்சியம் வேண்டாம்..!
நடிகர் ரோபோ சங்கர் நேற்று உயிரிழந்த செய்தியில் அவர் 'மஞ்சள் காமாலை நோயால்' இறந்ததாக குறிப்பிட்டன. இது தவறு. மஞ்சள் காமாலை என்பது ஒரு நோய் அல்ல. 'கண்களில் மஞ்சள் நிறத்தை' படரவிட்டு கொடுக்கும் எச்சரிக்கை சிக்னல் தான் மஞ்சள் காமாலை.

நடிகர் ரோபோ சங்கர் நேற்று உயிரிழந்த செய்தியில் அவர் 'மஞ்சள் காமாலை நோயால்' இறந்ததாக குறிப்பிட்டன. இது தவறு. மஞ்சள் காமாலை என்பது ஒரு நோய் அல்ல. ஒருவரின் இரத்த ஓட்டம் மற்றும் ஈரலில் ஒரு ஆபத்தான பிரச்சனை நடந்துக் கொண்டுருந்தால், அதை அந்நபருக்கு உணர்த்த உடல் 'கண்களில் மஞ்சள் நிறத்தை' படரவிட்டு கொடுக்கும் எச்சரிக்கை சிக்னல் தான் மஞ்சள் காமாலை. எனவே, மஞ்சள் காமாலையால் ஒருவர் இறந்தார் என்பது தவறு.
ஆனால், உண்மையில் நடிகர் ரோபோ சங்கருக்கு சிகிச்சை அளித்த மருத்துவமனை அவருக்கு மஞ்சள் காமாலை அறிகுறி இருந்ததாக குறிப்பிடவில்லை. (ஆனால், அவருக்கு ஏற்கனவே இந்த அறிகுறி இருந்துள்ளது). மாறாக, அவர் 'Gastrointestinal Bleeding'(குடலில் இரத்தப்போக்கு) ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்ததாக மருத்துவமனையே அதிகாரப்பூர்வ அறிக்கையை வெளியிட்டு விட்டது.
குடலில் இரத்தப்போக்கு என்பது ஒரு மாதம் அல்லது ஒரு வருடத்தில் ஏற்படுவதில்லை. (விபத்து மூலம் குடலில் காயம் ஏற்படாத வரை). இதுபோன்ற GERD பிரச்சனை குறைந்தது 5 முதல் 10 ஆண்டுகளாக ரோபோ சங்கருக்கு இருந்திருக்க வேண்டும்.
இந்த பிரச்சனையை மருந்தை விட உணவு முறையை மாற்றிக் கொண்டாலே ஆரம்பத்திலேயே தவிர்த்திருக்க முடியும். குறிப்பாக, மது அருந்துதல், மசாலா கூடிய மாமிசம், காரசாரமான உணவுகள் தான் GERD பிரச்சனைக்கு முதல் எதிரி.
இந்த பிரச்சனை உள்ளவர்களுக்கு தெரியும் முதல் அறிகுறிகள்: வயிறு உப்புசம் மற்றும் அஜீரணம். இந்த பிரச்சனைகளுக்கு தீர்வு காணாமல் தொடர்ச்சியாக தவிர்க்க வேண்டிய உணவுகளை சாப்பிட்டு வந்தால் இப்பிரச்சனை தீவிரமாகும். இதன் இறுதி கட்டம் தான் Gastrointestinal Bleeding. இந்த இரத்தப்போக்கு கூட முதல் முறையாக வந்து, அதனை கவனித்து சிகிச்சை எடுத்தப் பின்னர் உணவு முறைகளை மாற்றியிருந்தால் கூட, ஆபத்தை தவிர்க்கலாம். ஆனால், சிலர் இரத்தப்போக்கு (வாந்தி அல்லது கழிவு வழியாக) வருவது தெரிந்த பின்னர் கூட அந்த மோசமான உணவு முறையை தொடர்வார்கள். இது வயிற்றுக்கு Massive Gastrointestinal Bleeding-ஐ ஏற்படுத்தி விடும்.
இதில் முக்கியப் பிரச்சனை என்னவென்றால், வயிற்றுக்குள் இரத்தப்போக்கு ஏற்படுவதை அந்நபரால் உணர முடியாது. ஏனெனில், வயிறு மற்றும் குடலில் 'வலியை உணர்த்தும் சென்சார்கள்' இல்லை. எனவே, இரத்தப்போக்கு ஏற்பட்டு அது உணவில் கலந்து, ஜீரணம் ஆகி கழிவாக இரத்தத்துடன் கலந்து வரும்போது, அல்லது வாந்தி மூலமாக வாய் வழியாக வரும்போது தான் அவருக்கு தெரியும்.
ரோபோ சங்கருக்கும் இது தான் நிகழ்ந்திருக்க வேண்டும். வயிற்றுக்குள் இரத்தப்போக்கு ஏற்பட்டு அவர் குறைந்த இரத்த அழுத்தம் காரணமாக மயக்கம் அடைந்திருக்கலாம். அவருக்கு பலமுறை கூட மயக்கம் ஏற்பட்டிருக்கலாம். இந்த நிலை தீவிரமடைந்த நிலையில் தான் அவர் 16-ம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், வயிற்றுக்குள் இரத்தப்போக்கு தீவிரமாக இருந்ததால் அவருக்கு காலம் கடந்துவிட்டது. எந்த சிகிச்சையும் பலனளிக்கவில்லை. இதன் விளைவாக நேற்று இரவு 9.05 மணியளவில் உயிரிழந்தார்.
'உணவே மருந்து' என்பது வெறும் ஒரு வாக்கியம் அல்ல. அது நம் உயிர் காக்கும் ஒரு வழிமுறை. மேலும், நம் உடலில் ஏதாவது ஒரு தீவிரமான பிரச்சனை எனில், அதை நம் உடல் நமக்கு எப்படியாவது எச்சரிக்கையுடன் தெரியப்படுத்தும். இந்த எச்சரிக்கையை கவனமாக எடுத்துக் கொண்டு ஆரம்பித்திலேயே கவனித்து விட்டால் பின்னாட்களில் பெரும் ஆபத்தை தவிர்க்கலாம்.