தாய்க்கும் தந்தைக்கும் சர்க்கரை நோய் வந்தால் குழந்தைக்கும் வர வாய்ப்பு உள்ளதா?
தாய், தந்தை இருவருக்கும் சர்க்கரை நோய் இருந்தால் குழந்தைக்கும் வர வாய்ப்புள்ளதா என்பது குறித்து இந்தப் பதிவில் காணலாம்.

Diabetes in Children
If Parents Have Diabetes Will Child Also Affect : உங்களுக்கு தெரியுமா? இந்தியா தான் நீரிழிவு நோயின் தலைநகரமாக விளங்குகிறது. அந்த அளவுக்கு இந்தியாவில் இன்னும் இந்நோயால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகம். நாளுக்கு நாள் இந்த நோய் பாதிப்பு ஏற்பட்டவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்து வருகிறது.
Diabetes in Children
சில ஆண்டுகளுக்கு முன் 45 வயதுக்கு மேற்பட்டபவர்களுக்கு தான் நீரிழிவு பரிசோதனை செய்ய அறிவுறுத்தப்படும். இன்றைய காலகட்டத்தில் 30 வயதைக் கடந்த பின்னரே சர்க்கரை நோய்க்கான பரிசோதனை செய்ய அறிவுறுத்தப்படுகிறது. இதன் பின்னணி என்ன என்பதை எப்போதாவது யோசித்திருக்கிறீகளா? உண்மையில் நம் வாழ்க்கை முறை மாற்றம் தான் அதற்கு மிகப்பெரிய காரணம்.
Diabetes in Children
வாழ்க்கை முறை:
முன்பெல்லாம் ஒருவேளை உணவு கிடைப்பதே குதிரை கொம்பாக இருக்கும். கஞ்சியோ, கூழோ தான் உணவே! அவை இல்லாவிட்டால் பட்டினி. மனிதன் குகைகளில் வாழ்ந்த காலத்தில் வேட்டையாடும்போது தான் உணவு கிடைக்கும். இதனால் உணவு கிடைக்கும் போது அதிகமாக சாப்பிடுவார்கள். அவை உடலில் கொழுப்பாக சேமிக்கப்பட்டு, உணவு கிடைக்காத நேரங்களில் ஆற்றலுக்காக பயன்படுத்தப்படும். இப்போது வாழ்க்கை முறை மாறிவிட்டது. ஆனால் உடல் செயல்பாடுகளில் மாற்றம் இல்லை. நாம் உண்ணும் உணவு கொழுப்பாக சேகரிக்கப்படுகிறது.
Diabetes in Children
கொழுப்பு சேமிப்பு:
மூன்று வேளை உணவு என்பதைத் தாண்டி மற்ற வகை பண்டங்களையும் பசித்தாலும், பசிக்காவிட்டாலும் உண்கிறோம். அவை நம் உடலில் கொழுப்பாக சேகரமாகும். இந்த கொழுப்பு எரிக்கப்படாமல் அப்படியே இருக்கும்போது நீரிழிவு நோய் உண்டாகும் அபாயம் ஏற்படுகிறது.
இதையும் படிங்க: தினமும் குழந்தைகளுக்கு முட்டை கொடுக்கலாமா? எப்போது முட்டை கொடுத்தால் நல்லது?
Diabetes in Children
நீரிழிவு நோய்:
பெற்றோரில் ஒருவருக்கு இந்த நீரிழிவு நோய் வந்தாலும் குழந்தைகளுக்கு ஏற்பட 60% வாய்ப்புள்ளது. பெற்றோரில் இருவருமே நீரிழிவு நோயாளிகள் என்றால் அவர்களுடைய குழந்தைகளுக்கு கிட்டத்தட்ட 90% இந்நோய் வர வாய்ப்புள்ளது.
இதையும் படிங்க: குழந்தைகளுக்கு வெள்ளை முடி வர 'இப்படி' ஒரு காரணமா? உடனே கவனிங்க!!!
Diabetes in Children
நீரிழிவு நோயை எப்படி தடுக்க?
- அமர்ந்த நிலையில் வேலை செய்வது உடல் செயல்பாட்டை முடக்கிவைக்கிறது. இதனால் உடல் எடை அதிகமாகும். இதுவும் நீரிழிவு நோய்க்கு காரணமாகிறது. அதனால் ஒவ்வொரு 1 மணி நேரத்திற்கும் எழுந்து நடப்பது நல்லது.
- பசி அடங்கிய பிறகு அதிகமாக உண்பதை தவிர்க்க வேண்டும். இரவில் 7 முதல் 8 மணிக்குள்ளாக சாப்பிடுவது நல்லது. காலை உணளை மூளை உணவு என்பார்கள். அதை தவிர்க்கக் கூடாது.
- இரவில் நன்றாக தூங்க வேண்டும். இரவில் விழித்தால் இரத்த சர்க்கரை அளவு உயரும்.
- மன அழுத்தமும் கூட சர்க்கரை நோய்க்கு காரணம். அதனால் மனஅழுத்தத்தை குறைக்கும் யோகா, தியானம், உடற்பயிற்சி ஆகியவைகளை செய்யலாம்.
- உணவுக்கு பின் 10 நிமிடங்கள் நடப்பது ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்கும்.