குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் வந்த வேகத்தில் மூட்டையை கட்டிய முதல் போட்டியாளர் இவர் தான்! அவரே போட்ட பதிவு!
'குக் வித் கோமாளி' சீசன் 5 நிகழ்ச்சி சமீபத்தில் ஆரம்பமான நிலையில், முதல் எலிமினேஷனில் வெளியேறிய போட்டியாளர் யார்? என்கிற தகவல் தற்போது வெளியாகி உள்ளது. இது குறித்து அந்த பிரபலமே தன்னுடைய சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றையும் போட்டுள்ளார்.
விஜய் டிவி தொலைக்காட்சியில் சமையல் கலையை மையமாக வைத்து காமெடியும், கலகலப்பும், நிறைந்த நிகழ்ச்சியாக ஒளிபரப்பாகி வருகிறது 'குக் வித் கோமாளி'. 2019 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட இந்த நிகழ்ச்சி, தற்போது 5-ஆவது சீசனை எட்டியுள்ளது.
முதல் சீசனில் இருந்தே, இந்த நிகழ்ச்சிக்கு தொகுப்பாளர் வெங்கடேஷ் பட் மற்றும் சமையல் கலையில் உலக சாதனை செய்த தாமு ஆகியோர் நடுவர்களாக இருந்து வந்த நிலையில், ஐந்தாவது சீசனில் ஏற்பட்ட ஒரு சில மாற்றங்களால் வெங்கடேஷ் பட் சன்டிவி நிகழ்ச்சிக்கு தாவினார். மேலும் 'குக் வித் கோமாளி' தயாரிப்பாளர், இயக்குனர் ஆகியோரும் தற்போது டாப் குக்கு டூப் குக்கு நிகழ்ச்சிக்கு பணியாற்றி வருகின்றனர்.
Nayanthara: நயன்தாரா ஜாதகத்தில் தோஷமா? விக்னேஷ் சிவனின் நலனுக்காக... கோவில் கோவிலாக சென்று பரிகாரமா?
ஆரம்பத்தில் 'குக் வித் கோமாளி' சீசன் 5 நிகழ்ச்சி துவங்கமா? என்கிற மிகப்பெரிய சந்தேகம் இருந்த நிலையில், புதிய குழுவுடன் புத்தம் புதிய பொலிவில் நிகழ்ச்சி துவங்கியுள்ளது. இந்த முறை தாமுடன் சேர்ந்து நடுவராக இருந்து வருகிறார் மத்தம்பட்டி ரங்கராஜன். அதே போல் இந்த முறை தொகுப்பாளராக ரக்சன் உடன் இணைந்து களமிறங்கியுள்ளார் மணிமேகலை.
போட்டியாளர்களாக அக்ஷய் கமல், ஷாலின் சோயா, திவ்யா துரைசாமி, இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா, சூப்பர் சிங்கர் பூஜா, VTV கணேஷ், ஃபுட் ரிவ்யூவெர் இர்ஃபான், பாண்டியன் ஸ்டோர்ஸ் சுஜிதா, சீரியல் நடிகர் வசந்த் வஷி, தொகுப்பாளர் பிரியங்கா தேஷ் பாண்டே, ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர். புதிய கோமாளிகளாக ராமர், ஷப்னம், அன்சிதா, கே பி ஒய் வினோத், ஆகியோர் இணைந்துள்ளனர்.
ரூ.3000 கோடிக்கு அதிபதியாக இருக்கும் நடிகருடன் டேட்டிங் செய்யும்... மணிரத்னம் பட ஹீரோயினா இது?
மிகவும் கலகலப்பாக ஆரம்பமான குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சியின் முதல் வாரத்தில், சுஜிதா செக் ஆஃப் தி வீக் வாங்கினார். இவரைத் தொடர்ந்து இரண்டாவது வாரத்தில் வசந்த் வசி மற்றும் அக்ஷய் கமல் ஆகிய இருவரும் செக் ஆப் தி வீக் வாங்கியதாக தகவல் வெளியானது. இந்த நிகழ்ச்சியை சுவாரசியமாக்கும் விதத்தில் நடிகை ராதா கெஸ்ட்டாக கலந்து கொண்டுள்ளார்.
எலிமினேஷன் வாரமான இதில், இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய முதல் போட்டியாளர் யார் என்கிற தகவல் தற்போது வெளியாகி உள்ளது. அதன்படி இறுதியில் இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா மற்றும் டிடிஎஃப் வாசனின் காதலி ஷாலின் சோயா ஆகியோர் டேஞ்சர் சோனில் இருந்த நிலையில், இவர்கள் இருவரில் இருந்து ஷாலின் சோயா இந்த வாரம் வெளியேற்றப்பட்டுள்ளார்.
நடிகை பவித்ரா விபத்தில் சாகவில்லை! தற்கொலைக்கும் முன் சக நடிகர் வெளியிட்ட பரபரப்பு வீடியோ!
மேலும் இது குறித்து தன்னுடைய சமூக வலைதளத்தில் உருக்கமான பதிவு ஒன்றையும் அவர் போட்டுள்ளார். அதில் நான் பல வருடங்களாக திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருந்தாலும், அப்போது எனக்கு கிடைக்காத புகழ் பெயர் எல்லாம் இந்த நிகழ்சியின் மூலம் கிடைத்துள்ளது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டதற்கு மிகவும் சந்தோஷப்படுகிறேன் என தெரிவித்துள்ளார். இப்போது வெளியேற்றப்பட்டாலும் வைல்டு கார்டு சுற்றின் மூலம் மீண்டும் ஷாலின் சோயா பங்கேற்பார் என்பது குறிப்பிடத்தக்கது.