Nayanthara Marriage: நயன்தாராவுடன் காதல் போரடித்தால் உடனே திருமணம்....விக்னேஷ் சிவன் சொன்ன சீக்ரெட்!!
Nayanthara -Vignesh Shivan: எங்களுக்கு காதல் போரடித்தால் உடனடியாக திருமணம் செய்து கொள்வோம் என, நயன்தாராவுடன் காதல் குறித்து விக்னேஷ் சிவன் கூறியுள்ளார்.
Vignesh Shivan-Nayanthara
நயன்தாராவும் - இயக்குனர் விக்னேஷ் சிவனும் ‘நானும் ரௌடிதான்’ திரைப்படத்தில் காதலில் விழுந்தனர். இதையடுத்து, இருவரும் அமெரிக்காவில் சுற்றி திரிந்து (living together) முறையில் வாழ்ந்து வருகிறார். சில காலங்களாகவே இவர்கள் இருவரும் அடிக்கடி கோவில் செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
Vignesh Shivan-Nayanthara
இதையடுத்து, நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் விரைவில் திருமணம் செய்து கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது. சமூக வலைத்தளங்களில் , தற்போது எல்லா இடங்களிலும் நயன்தாரா, விக்னேஷ் சிவன் திருமணம் பற்றி பேச்சுக்கள் அதிக அளவில் இடம்பெற்றுள்ளது.
nayanthara vigneshsivan
நானும் ரௌடிதான்’ திரைப்படத்திற்கு பிறகு, மீண்டும் விக்னேஷ் சிவன் இயக்கத்தில், விஜய்சேதுபதி, நயன்தாரா கூட்டணி இணைந்துள்ள படம் ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’.இவர்களுடன் சமந்தாவும் இந்தப் படத்தில் நடித்துள்ளார்.
Nayanthara and Vignesh Sivan
சமீபத்தில் படத்தின் படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில், இதன் பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மேலும், திரைப்படம் வரும், ஏப்ரல் 28-ம் தேதி திரையிரங்குகளில் வெளியாகிறது என்று படக்குழு அறிவித்துள்ளது.
Vignesh Shivan-Nayanthara
இதில், கண்மணி கதாபாத்திரத்தில் நயன்தாராவும், கதிஜா கதாபாத்திரத்தில் சமந்தாவும் நடித்துள்ளனர். இவர்கள் இருவரையும் காதலிப்பவராக விஜய்சேதுபதி இந்தப் படத்தில் நடித்துள்ளார்.
Vignesh Shivan-Nayanthara
இந்த படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோவுடன் இணைந்து, விக்னேஷ் சிவன், நயன்தாராவின் ரவுடி பிக்சர்ஸ் தயாரிப்பில், உருவாகியுள்ளது. இந்தப் படத்திற்கு அனிருத் இசைமையத்துள்ளார்.மேலும், டாக்டர் பட புகழ் ரெடின் கிங்ஸ்லி இந்தப் படத்தில் நடித்துள்ளார்.
Vignesh Shivan-Nayanthara
இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் வெளியீட்டிற்காக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. படத்தின் முக்கிய அப்டேட் தொடர்ந்து வெளியாகி வருகிறது. அண்மையில் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களின் நல்ல வரவேற்பை பெற்றது.
Vignesh Shivan-Nayanthara
இதையடுத்து, படத்தின் புரமோஷனில் நயன்தாரவுடன் காதல் குறித்து பேசிய விக்னேஷ் சிவன் '' எங்கள் இருவரின் காதல் சிறப்பாக உள்ளதால், வாழ்கை மிக அழகாக சென்று கொண்டிருக்கிறது. எப்போது, எங்கள் இருவருக்கும் இடையே உள்ள காதல் போராடிப்பதாக தெரிகிறதோ அப்போதே திருமணம்'' என நயனுடன் தனது காதல் பற்றி பேசியுள்ளார்.