திருமண வாழ்க்கை வலுவாக இருக்க.. தினமும் காலை 'இதை' செய்ய மறக்காதீங்க..!
உங்கள் துணையுடன் உறவை நீண்ட காலத்திற்கு சிறப்பாகவும் வலுவாகவும் வைத்திருக்க இந்த உதவிக்குறிப்புகளைப் பின்பற்றுங்கள்..
ஒரு ஆணும் பெண்ணும் திருமணத்தின் புனித பந்தத்தில் இணைந்த பிறகு, அவர்கள் ஒன்றாக இணைந்து உறவை வலுப்படுத்த முயற்சி செய்கிறார்கள். அன்பு, அக்கறை, உணர்வுகளுக்கு மரியாதை, குறிப்பாக ஒவ்வொரு விஷயத்தையும் வெளிப்படையாகப் பேசும்போது உறவில் நம்பிக்கை அதிகரிக்கும்.
இந்தப் பழக்கங்களை தினமும் வளர்த்துக் கொள்ளும்போது அவர்களுக்கிடையேயான அன்பும் பந்தமும் மேன்மேலும் அதிகரிக்கும். அவ்வாறான சில குறிப்புகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. அவை தம்பதிகளுக்கிடையேயான உறவை நீண்ட காலத்திற்கு நன்றாக வைத்திருக்கும்.
காலை வணக்கம் சொல்ல மறக்காதீர்கள்: நீங்கள் எழுந்தவுடன் உங்கள் துணைக்கு காலை வணக்கம் சொல்ல மறக்காதீர்கள். அதுபோலவே, அலுவலகம் கிளம்பும் போது பை பை சொல்லுங்கள். உங்கள் திருமணத்தை வலுப்படுத்த இது ஒரு எளிய வழி. மேலும் இது, அவர்கள் மனதில் உங்கள் மீது அதிக அன்பையும் நம்பிக்கையையும் வளர்க்கும்.
காதலுடன் நாளைத் தொடங்குங்கள்: தினமும் காலை எழுந்ததும் உங்கள் துணையை கட்டிப்பிடித்து முத்தமிட்டல் உறவில் காதலை அதிகரிக்கும். ஏனெனில், காதலின் போது உங்கள் உடல் அதிக மகிழ்ச்சியான ஹார்மோன்களை வெளியிடும். இதனால் உங்கள் உறவில் நீங்கள் ஒருபோதும் சலிப்படைய மாட்டீர்கள்.
காலை உணவை ஒன்றாகச் சாப்பிடுங்கள்: தினமும் காலை எழுந்ததும், உங்கள் துணையுடன் சேர்ந்து டீ அல்லது காலை உணவை ஒன்றாக சாப்பிடும் பழக்கத்தை வளர்த்துக் கொள்ளுங்கள். இது உங்களை மகிழ்ச்சியான ஜோடியாக மாற்றும். காலை முடியவில்லை என்றால் இரவு உணவை ஒன்றாக சாப்பிடுங்கள். ஆனால் இந்த நேரத்தில் நீங்கள் ஒருவருக்கொருவர் நல்ல மற்றும் அன்பான விஷயங்களை மட்டுமே செய்ய வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
நன்றி சொல்ல மறக்காதீர்கள்: வாழ்க்கைத் துணை என்பது வாழ்க்கையின் ஒவ்வொரு திருப்பத்திலும் உங்களுடன் நிற்கக்கூடியவள். எனவே எந்த ஒரு சிறிய உதவிக்கும் அவர்களுக்கு நன்றி சொல்ல மறக்காதீர்கள். அவர்கள் உங்களிடமிருந்து நன்றியை எதிர்பார்க்காவிட்டாலும், அவர்கள் உங்களுடன் எப்போதுமே மகிழ்ச்சியாக தான் இருப்பார்கள். ஒவ்வொரு சிறிய விஷயத்திற்கும் நீங்கள் நன்றி சொல்லும்போது உங்கள் பங்குதாரர் எவ்வளவு முக்கியம் என்பதை நீங்கள் உண்மையில் காட்டுகிறீர்கள்.