15 ஆண்டு கால திரைப்பயணத்திற்கு கிடைத்த வெற்றி...கேன்ஸ் விழா இந்தியாவிற்கு வரும்...தீபிகா படுகோனே நெகிழ்ச்சி..
Deepika Padukone: கேன்ஸ் திரைப்பட விழாவில், பேசிய நடிகை தீபிகா படுகோன் ''இந்திய கேன்ஸ்-க்கு செல்லும் நிலை மாறி கேன்ஸ் இந்தியாவிற்கு வரும் நிலை விரைவில் உண்டாகும்'' என்று தெரிவித்துள்ளார்.
deepika-padukona
பிரான்ஸில் நடைபெற்று வரும் உலகப்புகழ் பெற்ற கேன்ஸ் திரைப்பட விழாவில், இந்திய திரைப்பிரபலங்கள் ஏர். ஆர் ரகுமான், மாதவன், ஐஸ்வர்யா ராய், தீபீகா படுகோன் ஆகியோரும் தமிழ் சினிமாவில் இருந்து கமல்ஹாசன், நயன்தாரா, தமன்னா, ஊர்வசி ரவ்துலா, இயக்குநர் ரஞ்சித் போன்றோரும் சிவப்பு கம்பள வரவேற்பில் பங்கேற்றுள்ளனர்.
deepika-padukona
சினிமா நட்சத்திரங்கள், இந்த விழாவில் கலந்துகொள்வதையும், அதில் தங்களது படங்கள் திரையிடப்படுவதையும் மிகப்பெரிய கவுரவமாக கருதி வருகின்றனர். வருகிற மே 28-ந் தேதி வரை நடைபெற உள்ள இந்த விழாவில் ஏராளமான படங்கள் திரையிடப்பட உள்ளன.
deepika-padukona
இதில் குறிப்பாக, ஏ.ஆர்.ரகுமானின் லே மஸ்க் திரைப்படம் திரையிடப்பட்டுள்ளது. அதேபோல் மாதவன் இயக்கி உள்ள ராக்கெட்ரி படமும் திரையிடப்பட உள்ளது. இதுதவிர பா.இரஞ்சித்தின் வெட்டுவம் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரும் இன்று இந்த விழாவில் வெளியிடப்பட உள்ளது.
deepika-padukona
இந்த நிலையில், இந்த விழாவில் பேசிய நடிகை தீபிகா படுகோன் எனது நடிப்புக்கும்,எனது திறமைக்கும் சர்வதேச திரைப்பட விழாவில் ஜூரியாகும் வாய்ப்பு கிடைத்திருப்பது, நான் கற்பனை செய்து கூட பார்க்காத ஒன்று. 15 ஆண்டு கால திரைப்பயணத்திற்கு பிறகு இது ஒரு நம்பமுடியாத பயணமாக இருக்கிறது என்றார். அதற்காக நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் என்றார்.
deepika-padukona
தொடர்ந்து அவர், ''இந்திய கேன்ஸ்-க்கு செல்லும் நிலை மாறி ,கேன்ஸ் இந்தியாவிற்கு வரும் நிலை விரைவில் உண்டாகும்'' என்று தெரிவித்துள்ளார். இதில், தீபிகா படுகோனே முழுக்க முழுக்க கருப்பு நிற உடையில் அனைவரும் அசத்தும் வகையில் இருந்தார். இந்த விழாவில் தீபிகா படுகோன் பேசியது, இணையத்தில் வைரலாகி வருகிறது.