ரோகிணி நினைத்தது நடந்துடுச்சு! மீனா மீது விழுந்த திருட்டு பழி! வெளுத்து வாங்கிய முத்து.. சிறகடிக்க ஆசை அப்டேட்
சிறகடிக்க ஆசை சீரியலில், முத்து பிரச்சனை செய்ய வேண்டும் என்றே... ஸ்ருதியின் அப்பா செய்த சதி ஒர்க் அவுட் ஆகி விட்டது இது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
விஜய் டிவி தொலைக்காட்சியில் மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் சீரியல் 'சிறகடிக்க ஆசை'. தன்னுடைய ரயிலில் அடிபட்டு இறந்த நபரின், மகளையே தன்னுடைய வீட்டிற்கு மருமகளாக அழைத்து வருகிறார் அண்ணாமலை. இவர் மிகவும் நல்ல மனிதர் என்றாலும் இவருடைய மனைவி விஜயா ஒரு பண பேய். தன்னுடைய வீட்டிற்கு பணக்கார மருமகள்கள் தான் வரவேண்டும் என நினைக்கிறார்.
முத்துவின் மனைவி, மீனா பணக்கார பெண் இல்லை என்பதால்... அவரை வேலைக்காரி போல் ட்ரீட் செய்கிறார். மற்ற இரண்டு மருமகள்களை தலையில் தூக்கி வைத்து கொண்டு ஆடும் இவருக்கு எப்போதுமே மீனாவை பார்த்தால் ஏளனம் தான். விஜயாவின் மகன் மனோஜை... திருமணம் செய்துள்ள பெண் ரோகினி தன்னை ஒரு பணக்காரி என பொய் சொல்லி திருமணம் செய்து கொண்டது இப்போது அவரை, விஜயாவுக்கு தெரியாது. இந்த விஷயம் தெரிய வந்தால்... என்ன நடக்கும் என்பதை காண பலர் ஆர்வமாக உள்ளனர்.
பாக்சிங் மேடையாக மாறிய தமிழா தமிழா! புருஷன்களை துவைத்து எடுத்த பெண்கள், இதெல்லாம் ஒரு காரணமா?
அதே சமயம், விஜயாவின் கடைசி மகன்... ரவி பணக்கார குடும்ப பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொள்கிறார். ஆரம்பத்தில், இவர்களின் காதல் விவகாரம், அண்ணாமலை குடும்பத்தில் மிகப்பெரிய பூகம்பத்தை ஏற்படுத்திய நிலையில், பின்னர் இந்த பிரச்சனை சுமூகமாக முடிவடைந்தது.
இதை தொடர்ந்து ஸ்ருதிக்கு தாலி பிரிந்து கோர்க்கும் போதே... ரோகினிக்கும் தாலி பிரித்து கோர்க்க ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த விசேஷத்தில் எப்படியும் முத்துவை பலி கெடாவாக ஆக்கி பிரச்சனை செய்ய ரோகினி ஒரு பக்கம் பிளான் போட, இன்னொரு பக்கம்...ஸ்ருதியின் பெற்றோரும் பிளான் போடுகிறார்கள். ரோகினி போட்ட பிளான் பிளாப் ஆன நிலையில் ஸ்ருதி வீட்டில் போட்ட பிளான் ஒர்க் அவுட் ஆகி விட்டது.
மீனா ஸ்ருதியை தேடி கொண்டு ரூமுக்கு வந்த போது , மாலையில் அவர் அணிந்திருந்த செயின் இருப்பதை கண்டு அதை எடுத்து கொண்டிருக்கிறார். அப்போது அங்கு வரும் ஸ்ருதியின் தந்தை, மீனா மீது திருட்டு பழி போட்டது மட்டும் இன்றி, இதற்க்கு பிச்சை எடுக்கலாம் என வாயிக்கு வந்ததை பேசுகிறார்.
இதனால் கோபம் அடையும் முத்து, ஸ்ருதியின் தந்தையை அடிக்கிறார். இதை ஸ்ருதி பார்க்க நேரிடுகிறது. இதை தொடந்து ஸ்ருதி வீட்டுக்கு வர மாட்டேன் என மறுக்கிறார். எனவே இனி என்ன நடக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.