அண்ணியை கதறவிட்டு கொலை செய்து ஆழ்குழாய் கிணற்றில் புதைத்த கொழுந்தன்.! நடந்தது என்ன? வெளியான பகீர் தகவல்.!
அண்ணியை கொலை செய்து ஆழ்துளை கிணற்றில் புதைத்து வைத்த கொழுந்தனை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். அவர் போலீசாரிடம் பல்வேறு அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளார்.
Puthukottai News
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அடுத்துள்ள ஆவூர் ஊராட்சிக்கு உட்பட்டது ஆம்பூர்பட்டி. இந்த கிராமத்தை சேர்ந்தவர் ஆரோக்கியசாமி. இவருக்கு சேவியர் (42), ராயப்பன் (38) ஆகிய இரண்டு மகன்கள் உள்ளனர். இதில், ஆரோக்கியசாமி பெயரில் இருந்த சொத்துக்களை அண்ணன், தம்பி இருவரும் சரிசமமாக பிரித்துக் கொண்டு தங்களின் பெயருக்கு மாற்றிக்கொண்டார்கள்.
properties
இந்நிலையில், சேவியருக்கு திருமணமாகி குழந்தை இல்லை. ஆனால், ராயப்பனுக்கு திருமணமாகி மனைவி மற்றும் இரண்டு குழந்தைள் உள்ளனர். இந்நிலையில், கடந்தஇரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சேவியர் இறந்துவிட்டார். இதைத் தொடர்ந்து, சேவியர் மனைவி ஆரோக்கியமேரி (37) தனது கணவர் பெயரில் இருந்த சொத்துக்களை தனது பெயருக்கு மாற்றிக் கொண்டார். இதனால், ஆரோக்கியமேரி மீது கடும் ஆத்திரத்தில் இருந்து வந்த கொழுந்தன் ராயப்பன் அண்ணியிடம் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வருவதும் கொலை செய்து விடுவதாக மிரட்டி வந்துள்ளார்.
Women Murder
இந்நிலையில், ஆரோக்கியமேரி திடீரென காணவில்லை. சகோதரர் அவரது உறவினருடன் பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் அதிர்ச்சிடைந்து காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். இதனிடையே மூக்கன் என்பவரது காட்டுப்பகுதியில் மூடப்படாமல் திறந்த நிலையில் இருந்த ஆழ்துளை கிணற்றில் புதிதாக மண் போட்டு மூடி இருந்ததை பார்த்து சந்தேகமடைந்து இதுகுறித்து மாத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
police investigation
உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர், பொக்லைன் எந்திரத்தின் மூலம் ஆழ்துளை கிணற்றை தோண்டி பார்த்தபோது அதில் ஆரோக்கியமேரி கொலை செய்யப்பட்டு சடலமாக இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
Police Arrest
மேலும் போலீசார் மேற்கொண்ட விசாரணையில் கடந்த 16ம் தேதி இரவு 7 மணியளவில் வயலில் இருந்த ஆரோக்கியமேரியை அவரது கொழுந்தன் ராயப்பன் கொலை செய்து உடலை அவரது டிராக்டர் வைத்து எடுத்து சென்று காட்டுப்பகுதியில் உள்ள ஆழ்குழாய் கிணற்றில் புதைதது விட்டு பின்னர் டிராக்டரை வீட்டில் நிறுத்திவிட்டு அங்கிருந்து தலைமறைவாகியுள்ளார். இதனையடுத்து பதுங்கி இருந்த ராயப்பனை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.