மலையாள படத்தில் நடிக்க படையெடுக்கும் கோலிவுட் ஸ்டார்ஸ்... அனுஷ்கா & கோட் பட நடிகருக்கு கிடைத்த அடிபொலி சான்ஸ்
மலையாள திரையுலகில் பிரம்மாண்ட பட்ஜெட்டில் தயாராக உள்ள கத்தனார் திரைப்படத்தில் அனுஷ்காவை தொடர்ந்து கோட் பட நடிகரும் கமிட் ஆகி உள்ளார்.
anushka shetty joins kathanar movie
மலையாள சினிமா தான் இந்த ஆண்டு சக்கைப்போடு போட்டு வருகிறது. பிப்ரவரி மாதத்தில் மட்டும் மூன்று பிளாக்பஸ்டர் ஹிட் படங்களை கொடுத்துள்ள மலையாள திரையுலகம். அதில் பிரேமலு திரைப்படம் ரூ.100 கோடிக்கு மேல் வசூலை வாரிக்குவித்து வெற்றிநடை போட்டு வருகிறது. அதேபோல் அதற்கு போட்டியாக ரிலீஸ் ஆன மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ.200 கோடி வசூலை நெருங்கி வருகிறது. இப்படம் குணா குகையை மையமாக வைத்து எடுக்கப்பட்டு இருந்தது.
Kathanar
மலையாள படங்கள் தற்போது டாப் பார்மில் உள்ளதால் அப்படங்களில் நடிக்க தமிழ் திரையுலக பிரபலங்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். அந்த வகையில் மலையாளத்தில் ஜெயசூர்யா நடிப்பில் ரூ.90 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாக உள்ள இப்படத்தில் ஹீரோயினாக நடிக்க நடிகை அனுஷ்கா கமிட் ஆகி உள்ளார். இதுவரை தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இருமொழிகளிலும் கோலோச்சி வந்த அனுஷ்கா, இப்படம் மூலம் மலையாளத்தில் அறிமுகமாகி இருக்கிறார்.
இதையும் படியுங்கள்... Kanguva : திடீரென வந்த டீசர் அப்டேட்... கங்குவா படக்குழுவின் சைலண்ட் சம்பவத்தால் திக்குமுக்காடி போன ரசிகர்கள்
Prabhu deva joins kathanar movie
அதுமட்டுமின்றி இப்படத்தில் மற்றுமொரு தமிழ் நடிகரும் கமிட் ஆகி இருக்கிறார். அவர் வேறுயாருமில்லை, தமிழ் சினிமாவில் டான்ஸ் மாஸ்டர், இயக்குனர், நடிகர் என பன்முகத்திறமை கொண்டவராக வலம் வரும் பிரபுதேவா தான். அவரும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க கமிட் ஆகி உள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பிற்காக கேரளா சென்றுள்ள பிரபுதேவாவை நேரில் சந்தித்த கத்தனார் படக்குழு, அவருக்கு விநாயகர் சிலை ஒன்றை பரிசாக அளித்துள்ளது.
kathanar movie Update
கத்தனார் படத்தை ரோஜின் தாமஸ் இயக்க உள்ளார். இப்படம் 9ம் நூற்றாண்டில் வாழ்ந்த கடம்பதாது கத்தனார் என்கிற கிறிஸ்துவ பாதிரியாரின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாக உள்ளது. இதில் கத்தனாராக நடிகர் ஜெயசூர்யா நடிக்கிறார். பிரம்மாண்ட பட்ஜெட்டில் இப்படம் உருவாவதால் இதனை இரண்டு பாகங்களாக வெளியிட படக்குழு திட்டமிட்டு உள்ளது.
இதையும் படியுங்கள்... Sheetal : எங்களுக்குள்ள அது நடக்கவே இல்ல... பப்லு உடனான உறவை பாதியில் முறித்துக்கொண்டது ஏன்? ஷீத்தல் விளக்கம்