Pia Bajpiee: வீடு இல்லாமல் 9 மாதங்கள்... நாய் இருக்கும் அறையில் தங்கினேன்...கோ பட நடிகை பகிர்ந்த பகீர் தகவல்..
Pia Bajpiee: நடிகை பியா பாஜ்பாய் நிகழ்ச்சி ஒன்றில் தனது வாழ்க்கையில் அனுபவித்த கஷ்டங்கள் குறித்து பகிர்ந்து கொண்டுள்ளார்.
piya bajpai
நடிகை பியா பாஜ்பாய் தமிழ் மட்டுமின்றி, தெலுங்கு, மலையாளம், இந்தி ஆகிய மொழிப் படங்களில் முக்கிய நடிகையாக வலம் வருகிறார்.
piya bajpai
தமிழ் சினிமாவில், பியா பாஜ்பாய் கடந்த 2008ம் ஆண்டு ஏ. எல். விஜய் இயக்கத்தில் வெளியான 'பொய் சொல்லப் போறோம்' படம் மூலம் நடிகையாக அறிமுகமானவர் .
piyabajpai
இதையடுத்து, இவருக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகள் தேடி வர அஜீத்தின் ஏகன் படத்தில் நடித்தார். இவரது கேரியரில் முக்கிய திருப்பு முனையாக ''கோவா'', ''கோ'' படங்கள் அமைந்தது. இதன் மூலம், தமிழ் ரசிகர்களின் மனதில் நீங்காத இடம் பிடித்தார்.
piyabajpai
இதையடுத்து, இவர் தமிழில் நடித்த அபியும் - அணுவும் திரைப்படத்தை தொடர்ந்து, இந்தியில் மிர்சா ஜூலியட் என்ற படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார்.
piyabajpai
இருப்பினும், கியூட் தேவதை போல் தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்தி இருந்தாலும், இந்த படங்களில் எதிர்பார்த்த அளவிற்கு எந்த படங்களுக்கும் வெற்றியை தரவில்லை.
piyabajpai
இதையடுத்து, தற்போது உடல் எடையை குறைத்து மிக அழகாக தோற்றமளிக்கும் இவர் மாடலிங் துறையில் தனது முழு கவனத்தையும் செலுத்தி வருகிறார்.
piyabajpai
இந்நிலையில், நடிகை பியா பாஜ்பாய் நிகழ்ச்சி ஒன்றில் தனது வாழ்க்கையில் அனுபவித்த கஷ்டங்கள் குறித்து பகிர்ந்து கொண்டுள்ளார். அந்த தகவல் கேட்பவர்களுக்கு பகீர் கிளப்பும் வகையில் உள்ளது.
piyabajpai
அதில் அவர், எனக்கு 15 வயது இருக்கும் போது நான் வீட்டை விட்டு வெளியேறி டெல்லி சென்றேன். அங்கு தங்குவதற்கு எனக்கு இடம் இல்லாமல் இரண்டு இரவு ரயில் நிலையத்திலேயே தூங்கினேன் என்று தனது அனுபவங்களை பகிர்ந்து கொண்டுள்ளார்.
piyabajpai
மேலும், மும்பையில் வீடு கிடைக்காமல் ஹவுஸ் ஓனரின் நாய் இருக்கும் அறையில் அந்த நாயுடன் 9 மாதங்கள் தங்கினேன் . எல்லா போராட்டத்திற்கு பிறகு நிச்சயம் நல்லது நடக்கும். எனவே, மனதை தளரவிடாதீர்கள் என்று கூறியுள்ளார்.