'ராஜா ராணி' படத்தில் நஸ்ரியா வேடத்தில் முதலில் நடிக்க இருந்தது யார் தெரியுமா? மிஸ் பண்ணிட்டு புலம்பிய நடிகை!
இயக்குனர் அட்லீ இயக்கத்தில் வெளியான, 'ராஜா ராணி' படத்தில்... நஸ்ரியா நடித்த கீர்த்தனா கதாபாத்திரத்தில் முதலில் அடிக்க இருந்த நடிகை யார் என்று இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
'ஜவான்' படத்தின் மூலம் பாலிவுட் திரையுலகையே தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்த, இயக்குனர் அட்லீ தமிழில் இயக்குனராக அறிமுகமான திரைப்படம் 'ராஜா ராணி'. 2013-ஆம் ஆண்டு வெளியான தன்னுடைய முதல் படத்தையே மிகவும் கிளாஸாக இயக்கி வெற்றிப்பட இயக்குனராக தன்னை கோலிவுட் திரையுலகில் நிலைநிறுத்திக்கொண்டார்.
காதல், காமெடி, எமோஷ்னல் என அனைத்தும் கலந்த கலவையாக உருவாகி இருந்த இந்த படத்தை, பிரபல இயக்குனர் ஏஆர் முருகதாஸ் தயாரித்திருந்தார். மேலும் இந்த படத்தில் ஆர்யா , ஜெய் , நயன்தாரா , நஸ்ரியா நஜிம் ஆகியோர் முன்னணி வேடத்தில் நடித்திருந்தனர்.
சத்யராஜ் , சந்தானம் , சத்யன், அருண் ராஜ் காமராஜ் உள்ளிட்ட பலர் சப்போர்டிங் ரோலில் நடித்திருந்தனர். விருப்பம் இல்லாமல் பெற்றோருக்காக திருமணம் செய்து கொள்ளும் நயன்தாராவும் - ஆரியாவும் ஒரே வீட்டில் வாழ்ந்தாலும் அந்நியர்கள் போன்றே இருக்கின்றனர். ஒரு நிலையில் நயன்தாராவின் காதலர் (ஜெய்) பத்ரிக்கு ஆர்யாவுக்கு தெரியவர அவரை காதலரோடு சேர்த்து வைக்க முடிவு செய்கிறார்.
அதே போல் நயன்தாராவுக்கும் ஆர்யாவின் முன்னாள் காதலி (நஸ்ரியா) இறந்த தகவல் தெரிய வருகிறது. ஒரு கட்டத்தில், ஆர்யா - நயன்தாரா இருவருமே காதலிக்கும் நிலையில்... இருவரும் ஒன்று சேர்கிறார்களா? இல்லையா என்பதே இப்படத்தின் கிளைமேக்ஸ். இந்த படம் கிட்ட தட்ட இயக்குனர் மணிரத்னம் இயக்கிய மௌனராகம் படத்தை கொஞ்சம் பட்டி டிங்கரிங் பார்த்து அட்லீ அட்டை காப்பி அடித்துவிட்டார் என விமர்சனங்கள் வெளியானது.
எனினும் விமர்சனங்களை தாண்டி இந்த படத்தை வெற்றி பெற்றது. இந்த படம் நயன்தாராவுக்கு செம்ம கம் ஃபேக்காக அமைந்த நிலையில்... நஸ்ரியாவின் கியூட் நடிப்பும் அழகும் ரசிகர்களை அதிகம் கவர்ந்தது.
இந்நிலையில் இந்த படத்தில், நஸ்ரியாவுக்கு முன்பு இப்படத்தில் நடிக்க முதல் தேர்வு செய்யப்பட்ட நடிகை பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. அதாவது நஸ்ரியா நடித்த கீர்த்தனா ரோலில் முதலில் நடிகை ப்ரியா ஆனந்த் தான் கமிட் ஆகியுள்ளார்.
பின்னர் வேறு சில படங்களில் தேதி கிளாஷ் ஆனதால் இப்படத்தில் இருந்து வெளியேறியுள்ளார். ஆனால் இப்படத்தின் வெற்றியை கண்டு... பல நாள் இந்த வாய்ய்ப்பை மிஸ் செய்ததற்காக ஃபீல் பண்ணியுள்ளாராம்.