இத ஒரு படமாவே எடுக்கலாமே! மோதலும்... காதலும் நிறைந்த அசோக் செல்வன் - கீர்த்தி பாண்டியனின் 10 வருட லவ் ஸ்டோரி
புதுமண தம்பதிகளான அசோக் செல்வன் - கீர்த்தி பாண்டியன் ஜோடி தங்களது 10 வருட காதல் கதையை சமீபத்திய பேட்டி ஒன்றில் முதன்முறையாக பகிர்ந்துகொண்டனர்.
ashok selvan keerthi pandian
கோலிவுட்டில் தற்போது டிரெண்டாக இருக்கும் ஜோடி என்றால் அது அசோக் செல்வனும் கீர்த்தி பாண்டியனும் தான். இவர்கள் இருவரும் காதலித்து கடந்த செப்டம்பர் 13-ந் தேதி திருமணம் செய்துகொண்டனர். யாருக்கும் தெரியாமல் சஸ்பென்ஸாக இருந்த அசோக் செல்வன் - கீர்த்தி பாண்டியனின் காதல், சமீபத்தில் இவர்கள் இருவரும் இணைந்து நடித்த ப்ளூ ஸ்டார் படத்தில் தான் மலர்ந்தது என அனைவரும் நினைத்திருந்தனர். ஆனால் இவர்கள் கடந்த 10 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளது சமீபத்தில் இவர்கள் ஜோடியாக அளித்த பேட்டி மூலம் தெரியவந்துள்ளது. இவர்களின் லவ் ஸ்டோரி பற்றி பார்க்கலாம்.
ashok selvan keerthi pandian wedding
2013-ம் ஆண்டு கீர்த்தி பாண்டியன் தன்னுடைய நண்பர்களுக்கு தீபாவளி பார்ட்டி ஒன்றை கொடுத்திருக்கிறார். அந்த பார்ட்டியில் கீர்த்தி பாண்டியனின் பிரெண்டோட பிரெண்டான அசோக் செல்வனும் வந்திருக்கிறார். அப்போது தான் இருவரும் முதன்முதலில் சந்தித்துள்ளனர். அசோக் செல்வனுக்கோ கீர்த்தி பாண்டியனை முதன்முதலில் சேலையில் பார்த்ததுமே காதல் வந்துவிட்டதாம். அவரிடம் எப்படியாவது நம்பர் வாங்கிவிட வேண்டும் என முடிவெடுத்த அசோக், தன்னுடைய போனை காணோம் ஒரு கால் பண்ணுங்க என சொல்லிதான் கீர்த்தி பாண்டியனின் நம்பரை வாங்கினாராம்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
ashok selvan keerthi pandian love marriage
அதுமட்டுமின்றி கீர்த்தி பாண்டியன் அந்த சமயத்தில் தமிழ் படங்களை வெளிநாடுகளில் ரிலீஸ் செய்யும் தன் தந்தையின் பிசினஸை நிர்வகித்து வந்துள்ளார். அசோக் செல்வனின் முதல் படமான சூது கவ்வும் தான் கீர்த்தி பாண்டியன் பொறுப்பேற்ற பின் ரிலீஸ் செய்த முதல் படமாம். இதையடுத்து அவர் நடித்த வில்லா, தெகிடி போன்ற படங்களையும் கீர்த்தி தான் வெளிநாடுகளில் ரிலீஸ் செய்தாராம். இருவரும் 2013-ம் ஆண்டு சந்தித்தாலும் ஓராண்டுக்கு பின்னர் தான் தன்னுடைய காதலை சொல்லி இருக்கிறார் அசோக்.
ashok selvan keerthi pandian love story
அப்போது கீர்த்திக்கும் பிடித்துப்போக இருவரும் டேட்டிங் செய்ய தொடங்கி இருக்கின்றனர். இருவருக்குமே சினிமா மீது காதல் அதிகம் என்பதால் நிறைய நேரம் சினிமா பற்றி தான் பேசிக்கொண்டு இருப்பார்களாம். சில ஆண்டுகள் நன்றாக சென்றுகொண்டிருந்த இவர்களது காதலில் ஒரு கட்டத்தில் மோதலும் ஏற்பட்டிருக்கிறது. இதனால் இருவரும் பிரேக் அப் செய்து பிரிந்திருக்கிறார். சுமார் 3 ஆண்டுகள் பிரேக் அப் செய்து பிரிந்திருந்த இந்த ஜோடி பின்னர் சமாதானம் ஆகி மீண்டும் சேர்ந்து தங்கள் காதல் வாழ்க்கையை தொடங்கி இருக்கின்றனர்.
இதையும் படியுங்கள்... வனிதா அக்காவா இது... வெளிநாட்டில் பார்ட்டிக்கு சென்ற 50 வயது பியூட்டி அனிதா விஜயகுமாரின் கார்ஜியஸ் போட்டோஸ்
ashok selvan keerthi pandian 10 years love
காதலை அடுத்தக்கட்டத்துக்கு எடுத்து செல்ல முடிவெடுத்த அசோக் செல்வன் முதன்முதலில் தங்கள் வீட்டில் கீர்த்தியை திருமணம் செய்துகொள்ள ஆசைப்படுவதாக கூறி இருக்கிறார். கீர்த்தியும் அடிக்கடி வீட்டுக்கு வந்திருப்பதால், அவரை அசோக்கின் அம்மாவுக்கு மிகவும் பிடிக்குமாம். அசோக் தான் கீர்த்தியை திருமணம் செய்யப்போவதாக கூறியதும் அவர்கள் வீட்டில் அனைவரும் ஹாப்பியாகி விட்டார்களாம். வீட்டில் சம்மதம் வாங்கிய பின்னர் தான் கீர்த்தியிடமே திருமண புரபோசலை முன்வைத்திருக்கிறார் அசோக்.
ashok selvan wife keerthi pandian
அதுவும் சாதாரணமாக இல்லை, சினிமாவில் வரும் ரொமாண்டிக் காட்சிகளை மிஞ்சும் அளவுக்கு ஒரு புரபோசலாம். கீர்த்திக்கு நீரில் சாகசம் செய்யும் விளையாட்டுக்கள் என்றால் அலாதி பிரியமாம். இதனால் இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் அவரது பிறந்தநாளுக்கு சர்ப்ரைஸாக கீர்த்தியை அந்தமான் அழைத்து சென்ற அசோக் செல்வன், அங்கு அவருக்கு பிடித்த விஷயங்களையெல்லாம் முன்கூட்டியே ஏற்பாடு செய்துவைத்து இருந்தாராம். 4 நாட்கள் அந்த ட்ரிப்பை பிளான் பண்ணிய அசோக் செல்வன், இறுதி நாளில் கடற்கரையோரம் கேண்டில் லைட் டின்னர் ஒன்றை ஏற்பாடு செய்து அதில் கீர்த்தியிடம் தன் திருமண புரபோசலை சொல்லி இருக்கிறார்.
ashok selvan keerthi pandian romantic photos
பிறந்தநாளுக்கு இதைவிட சிறந்த பரிசு என்ன இருக்க முடியும் என சந்தோஷத்தில் பூரித்துபோன கீர்த்தி அவரை தன் தந்தையிடம் வந்து பேசுமாரு அசோக் செல்வனை அழைத்து சென்றிருக்கிறார். கீர்த்தியும், அசோக் செல்வனும் நீண்ட நாட்களாக நண்பர்களாக பழகி வந்ததால், கீர்த்தி பாண்டியன் வீட்டிலும் திருமணத்திற்கு டபுள் ஓகே சொல்லிவிட்டார்களாம். அருண் பாண்டியனும் முழு மனதோடு சம்மதம் தெரிவித்த பின்னர் தங்களது காதல் திருமணம் கோலாகலமாக நடந்ததாக அசோக் செல்வனும் கீர்த்தி பாண்டியனும் அந்த பேட்டியில் கூறி இருந்தனர்.
இதையும் படியுங்கள்... Leo Audio Launch Cancel | பாதுகாப்பு காரணமா? அரசியல் அழுத்தமா? - மக்கள் கருத்து!