Nayanthara : அட்டை படத்திற்கு... கணவர் விக்னேஷ் சிவனுடன் சேர்ந்து முதல் முறையாக கவர்ச்சியாக போஸ் கொடுத்த நயன்!
நடிகை நயன்தாரா முதல் முறையாக, தன்னுடைய கணவருடன் சேர்ந்து, கவர்ச்சி உடையில் அட்டை படத்திற்கு போஸ் கொடுத்த புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
முன்பெல்லாம், 28 வயதை கடந்து விட்டாலே... தமிழ் சினிமாவில் ஹீரோயின் வாய்ப்பு கிடைப்பது அரிதாகிவிடும். எனவே பல நடிகைகள்... வெளிநாட்டு மாப்பிள்ளை, மற்றும் பிஸ்னஸ் மேனாக பார்த்து திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகி விடுவார்கள். அந்த வகையில் ராதா, அம்பிகா, ஸ்ரீப்ரியா, நதியா போன்ற பலர் திருமணத்திற்கு பின்னர் திரையுலகை விட்டு வெளியேறியவர்கள் தான்.
ஆனால் சமீப காலமாக, திருமணம் ஆன நடிகைகளும், விவாகரத்து பெற்ற நடிகைகளுக்கும் கூட... ஹீரோயின் வாய்ப்புகள் வழங்கப்பட்டு வருகிறது.
தற்போது 40 வயதை நெருங்க உள்ள நடிகை நயன்தாரா, தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மூன்று மொழிகளிலும் கதாநாயகியாக நடித்து வருவது மட்டும் இன்றி, கடந்த ஆண்டு 'ஜவான்' திரைப்படத்தின் மூலம் பாலிவுட் திரையுலகிலும் கதாநாயாகியாக அவதாரம் எடுத்தார்.
அட்லீ இயக்கத்தில் இவர் நடித்த முதல் பாலிவுட் திரைப்படமே, சுமார் 1200 கோடிக்கு மேல் வசூல் சாதனை செய்தது மட்டும் இன்றி, நயன்தாராவுக்கு திரையுலகில் மிகவும் உயரிய விருதுகளில் ஒன்றாக பார்க்கப்படும் 'Dadasaheb Phalke' விருதையும் பெற்று தந்தது. தற்போது தமிழ் படங்களில் பிசியாக ஒருபுறம் நடித்து வந்தாலும், நயன்தாராவின் பார்வை பாலிவுட் திரையுலகிலும் திரும்பி உள்ளதாக கூறப்படுகிறது.
திரைப்படங்களில் ஒரு பக்கம் பிசியாக இருந்தாலும், கணவருடன் சேர்ந்து இவர் செய்து வரும் பல்வேறு தொழில் நிறுவனங்களையும், அதே நேரம் தன்னுடைய கணவர், குழந்தைகளையும் கண்ணும் கருத்துமாக பார்த்து கொள்கிறார். தற்போது நயன்தாரா இயக்குனர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்ட பின்னர், முதல் முறையாக கணவருடன் சேர்ந்து கவர்ச்சி உடையில் நயன்தாரா மேகசீனுக்குமாக எடுத்து கொண்ட புகைப்படம் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
'ஹலோ' என்கிற மேகசீனின் அட்டை படத்திற்கு போஸ் கொடுத்துள்ள நயன்தாரா, வெள்ளை நிற அல்ட்ரா மாடர்ன் உடை அணிந்துள்ளார். விக்னேஷ் சிவன் கருப்பு நிற கோட் சூட் அணிந்து சும்மா ஜம்முனு இருக்கிறார். இந்த போட்டோஸ் தற்போது சமூக வலைத்தளத்தில் மிகவும் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது. திருமணத்திற்கு பின்னர் இருவரும் இணைந்து முதல் முறையாக மேகசீனுக்கு போஸ் கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.