Vaanaran : தாத்தா அளவுக்கு புகழ் பெறுவாரா பிஜேஷ்? மீண்டும் தமிழ் சினிமாவில் களமிறங்கும் நாகேஷின் பேரன்!
Bijesh Nagesh : தமிழ் சினிமாவில் ஈடு இணையற்ற ஒரு நடிகர் இருந்தார் என்றால் அது நிச்சயம் நாகேஷ் அவர்கள் தான் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. அந்த அளவிற்கு திறன்பட நடிக்கும் கெட்டிக்காரர்.
Vaanara First Look
தமிழ் சினிமாவில் ஈடு இணையற்ற ஒரு நடிகராக திகழ்ந்து வந்தவர் தான் நாகேஷ், 1950களின் இறுதியில் தொடங்கி 2009 ஆம் ஆண்டு வரை ஆயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்ற ஒருவர் அவர். இறுதியாக உலக நாயகன் கமலஹாசன் அவர்களின் "தசாவதாரம்" திரைப்படத்தில் அவர் நடித்திருந்தார்.
Bijesh
இவருடைய மகன் ஆனந்த் பாபு அவர்களும் ஒரு நல்ல நடிகராக திகழ்ந்து வந்த பொழுதும், தந்தை அளவிற்கு மிகப்பெரிய அளவில் புகழ் பெறவில்லை. இந்த சூழலில் ஆனந்த் பாபுவின் மகன் பிஜேஷ் நாகேஷ் அவர்கள் கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியாகவிருந்த சந்தானத்தின் "சர்வர் சுந்தரம்" என்கின்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகப் பிரவேசம் அடைந்தார்.
ஆனால் அந்த திரைப்படம் சுமார் 8 ஆண்டுகள் கடந்தும் இன்றளவும் வெளியாகாமலே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதன் பிறகு பிஜேஷ் நாகேஷ் பிரபு தேவாவின் "பொன் மாணிக்கவேல்" உள்ளிட்ட ஒரு சில திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.
Bijesh Nagesh
இந்நிலையில் இயக்குனர் ஸ்ரீராம் பத்மநாபன் இயக்கும் புதிய திரைப்படத்தில் முற்றிலும் மாறுபட்ட ஒரு கதாபாத்திரத்தில் பிஜேஷ் நாகேஷ் நடித்துள்ளார். விரைவில் அந்த திரைப்படம் வெளியாகவுள்ள நிலையில் அந்த திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை பல சினிமா பிரபலங்கள் இணைந்து வெளியிட்டுள்ளனர்.