அபிராமியை நைட்டோடு நைட்டாக கடத்த நடக்கும் பிளான்... கார்த்திகை தீபம் சீரியலில் டுவிஸ்ட் மேல டுவிஸ்ட்
கார்த்திகை தீபம் சீரியலில் நேற்றைய எபிசோடில் அபிராமியின் கிட்னிக்கு டீலிங் நடந்த நிலையில் இன்று நடக்க போவதை பார்க்கலாம்.
Karthigai deepam serial
தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 9 மணிக்கு ஒளிப்பரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் அபிராமியின் கிட்னிக்கு டீலிங் நடந்த நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
அதாவது, தீபா ஐஸ்வர்யா இல்லாத நேரமாக அவளது ரூமுக்குள் நுழைந்து போனை எடுத்து ஆராய நார்மல் கால் லிஸ்டில் புது நம்பர் எதுவும் இல்லாமல் இருக்க வாட்ஸப் கால் சென்று பார்க்க, புது நம்பர் இருக்கிறது. அந்த நம்பருக்கு கால் பண்ணும் பொது ஐஸ்வர்யா வந்து போனை பிடிங்கி தீபாவை வெளியே துரத்தி விடுகிறாள்.
Zee Tamil Karthigai deepam serial
அடுத்து அபிராமி ஹாஸ்பிடலில் இருக்க ரவுடி அவரை தேடி அலைகிறான், ஒரு கட்டத்தில் அபிராமியை ஹாஸ்பிடலில் சேர்த்த டிரைவரின் போன் நம்பரை கண்டு பிடித்து அபிராமி என்னுடைய அம்மா தான், எந்த ஹாஸ்பிடலில் சேர்த்தீங்க என்று கேட்டு தெரிந்து கொண்டு ஹாஸ்பிடல் வந்து பார்க்கிறான், அங்கு அபிராமி இருக்க நைட்டோடு நைட்டாக கடத்த பிளான் போடுகிறான். இதனையடுத்து ஆட்டோ ட்ரைவர் வீட்டிற்கு வர ராணி டல்லாக இருக்க, என்னாச்சு என்று கேட்க, கார்த்திக் சாரோட அம்மாவை காணோம் என்ற விஷயத்தை சொல்கிறார்.
இதையும் படியுங்கள்... Lal Salaam : ஓடிடியில் ரிலீஸ் ஆகும் முன்னரே டிவி-யில் ஒளிபரப்பாகப் போகும் லால் சலாம் - அதுவும் இந்த தேதியிலா?
Karthigai deepam serial Update
இவர் சீக்கிரம் கிடைச்சிடுவாங்க என்று சொல்லி வெளியே கிளம்பும் போது நானும் ஒருத்தருக்கு அடிபட்டு ஹாஸ்பிடலில் சேர்த்தேன், பெரிய வீட்டு பெண்மணி போல இருந்தாங்க. நீ அவங்க போட்டோவை காட்டு என்று கேக்க, ராணியும் காட்ட அது அபிராமி தான் என்ற உண்மை தெரிய வருகிறது.
உடனே இவர்கள் இந்த விஷயத்தை சொல்ல கார்த்திக் வீட்டிற்கு கிளம்பி வருகின்றனர், ஐஸ்வர்யா ரவுடி மணிக்கு போன் போட்டு அபிராமி குறித்து விசாரிக்க, அவன் இருக்கும் இடம் தெரிந்து போச்சு, நைட்டோட நைட்டா தூக்கிடுறோம் என்று சொல்கிறான். இவர்கள் வெளியே நின்று பேசி கொண்டிருக்கும் நேரத்தில் ராணியும் அவளது கணவரும் வர தடுத்து நிறுத்தி யார் என்னவென்று விசாரிக்க அபிராமி பற்றி சொல்கின்றனர்.
Karthigai deepam serial Today Episode
ஐஸ்வர்யா இவங்க கார்த்தியை பார்த்தா பிரச்னையாகிடும் என்று அவர்களிடம் நல்லவள் போல் பேசி அனுப்பி வைக்க, வழியில் தீபா இவர்களை பார்த்து விட தீபாவிடமும் எல்லா உண்மையையும் சொல்கின்றனர். தீபா அவர்களை வீட்டிற்கு கூட்டி வந்து கார்த்தியிடம் விஷயத்தை சொல்கிறாள். ராணி முதலில் இவங்க கிட்ட தான் விஷயத்தை சொன்னோம் என்று கை காட்ட, அவர்களும் ஆமாம் அதனால் தான் ஹாஸ்பிடல் கிளம்பிட்டு இருக்கோம் என்று சமாளிக்கின்றனர். உடனே கார்த்திக் மற்றும் தீபா ஹாஸ்பிடல் கிளம்பி செல்கின்றனர். ரவுடிகளும் ஹாஸ்பிடல் நோக்கி வருகின்றனர், இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை மிஸ் பண்ணாம பாருங்க.
இதையும் படியுங்கள்... Siddharth Marriage: சீக்ரெட்டாக நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்; திருமணம் எப்போது? மனம்திறந்த நடிகர் சித்தார்த்