மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை தொடங்கிய முதல்வர்.. வீடுகளில் கோலமிட்டு நன்றி தெரிவித்த பெண்கள்!
கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை வரவேற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கோலம் வரைந்து பெண்கள் நன்றி தெரிவித்தனர்.
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வழங்கும் திட்டத்தை காஞ்சிபுரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்து அதற்கான ஏடிஎம் கார்டுகளையும் வழங்குனார். இதனிடையே நேற்றே பல பெண்களின் வங்கி கணக்குக்கு ரூ.1,000 அனுப்பி வைக்கப்பட்டு இன்ப அதிர்ச்சி கொடுக்கப்பட்டது. இத்திட்டத்திற்கு நடைபாதையில் வணிகம் செய்யும் மகளிர், மீனவ மகளிர், ஒன்றுக்கும் மேற்பட்ட வீடுகளில் வேலை பார்க்கும் மகளிர், கட்டுமானத் தொழிலில் பணிபுரியும் மகளிர், சிறிய கடைகளில் பணி புரியும் மகளிர் உள்ளிட்ட பல்வேறு பல்வேறு தரப்பினரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், மகளிர் உரிமைத்தொகை வழங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பெண்கள் நன்றி தெரிவிக்கும் விதமாக பல்வேறு மாவட்டங்களில் பெண்கள் கோலமிட்டு அதில், கலைஞர் உரிமைத்தொகை வழங்கிய முதல்வருக்கு நன்றி என்ற வாசகத்தையும் எழுதி இத்திட்டத்தை வரவேற்றுள்ளனர்.
கலைஞர் மகளிர் உரிமைத்தொகை ரூ.1000 வழங்கிய முதல்வர் அவர்களுக்கு நன்றி. தருமபுரி மேற்கு மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி கிழக்கு ஒன்றியம்.
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வழங்கிய மாண்புமிகு தமிழக முதல்வர் திராவிட அரசு முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களுக்கு நன்றி.
கலைஞர் மகளிர் உரிமைத் வழங்கிய முதல்வர் தளபதிக்கு நன்றி நன்றி நன்றி என்ற வாசகத்தையும் எழுதி கோலமிட்டுள்ளனர்.