வனிதாவுக்கே டஃப் கொடுப்பாங்க போல... சைலண்டாக 3வது திருமணம் செய்துகொண்ட பிரபல தமிழ் நடிகை - குவியும் வாழ்த்து
Meera Vasudevan 3rd Marriage : முதல் இரண்டு திருமணங்கள் விவாகரத்தில் முடிந்த நிலையில், நடிகை மீரா வாசுதேவன் கோவையில் மூன்றாவது திருமணம் செய்துகொண்டுள்ளார்.
Meera vasudevan
மும்பையில் வசிக்கும் தமிழ் குடும்பத்தில் பிறந்தவர் மீரா வாசுதேவன். இவர் கடந்த 2001-ம் ஆண்டு சன் டிவியில் ஒளிபரப்பான காவேரி என்கிற சீரியல் மூலம் சின்னத்திரையில் நடிகையாக அறிமுகமானார். இதையடுத்து பெண், சூர்யவம்சம், சித்தி 2 போன்ற சீரியல்களில் நடித்த இவர், சினிமாவிலும் நடித்திருக்கிறார். தமிழில் உன்னை சரணடைந்தேன், அடங்க மறு, ஜெர்ரி, ஆட்டநாயகன் போன்ற படங்களில் நடித்துள்ள மீரா வாசுதேவன் உன்னை சரணடைந்தேன் படத்துக்காக தமிழ்நாடு அரசின் விருதையும் வென்றிருக்கிறார்.
![article_image2](https://static-ai.asianetnews.com/images/01hyq1hbd6r4r7nby33jhn2439/thumb-9_300x399xt.jpg)
Meera vasudevan marriage
மீரா வாசுதேவன் கடந்த 2005-ம் ஆண்டு விஷால் அகர்வால் என்பவரை திருமணம் செய்துகொண்டார். ஒளிப்பதிவாளர் அசோக் குமாரின் மகன் தான் விஷால் அகர்வால். இந்த ஜோடியின் திருமண வாழ்க்கை ஐந்தே ஆண்டுகளில் முடிவுக்கு வந்தது. கடந்த 2010-ம் ஆண்டு விஷால் அகர்வால் உடன் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக அவரை விவாகரத்து செய்து பிரிந்துவிட்டார் மீரா வாசுதேவன்.
Meera vasudevan 3rd marriage
பின்னர் 2012-ம் ஆண்டு பிரபல வில்லன் நடிகர் ஜான் கொகேன் உடன் மீரா வாசுதேவனுக்கு பழக்கம் ஏற்பட்டு, நாளடைவில் அது காதலாகவும் மாறியது. இதனால் 2012-ம் ஆண்டு இருவரும் திருமணம் செய்துகொண்டனர். இந்த ஜோடிக்கு ஒரு ஆண் குழந்தையும் பிறந்தது. ஆனால் மீரா வாசுதேவனின் இந்த திருமணமும் நான்கே ஆண்டுகளில் முடிவுக்கு வந்தது. கடந்த 2016-ம் ஆண்டு ஜான் கொகேன் உடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை விவாகரத்து செய்து பிரிந்துவிட்டார் மீரா வாசுதேவன்.
இதையும் படியுங்கள்... தேசிய விருது வென்ற இயக்குனருடன் கூட்டணி... சூர்யா டிராப் பண்ணிய படத்தை கையிலெடுக்கிறாரா சிவகார்த்திகேயன்?
Meera vasudevan husband vipin
மீரா வாசுதேவன் உடனான விவாகரத்துக்கு பின்னர் கடந்த 2019-ம் ஆண்டு நடிகை பூஜா ராமச்சந்திரனை காதலித்து கரம்பிடித்தார் ஜான் கொகேன். தற்போது இந்த ஜோடிக்கு ஒரு ஆண் குழந்தையும் உள்ளது. ஜான் கொகேன் உடனான பிரிவுக்கு பின்னர் திருமணாமே செய்துகொள்ளாமல் இருந்து வந்த நடிகை மீரா வாசுதேவன், தற்போது சைலண்டாக தனது மூன்றாவது திருமணத்தை நடத்தி முடித்துள்ளார்.
Meera vasudevan weds vipin
கடந்த மே 21-ந் தேதி கோவையில் மீரா வாசுதேவனின் மூன்றாவது திருமணம் நடைபெற்று உள்ளது. இதில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே கலந்துகொண்டனர். அவர் விபின் என்பவரை திருமணம் செய்துகொண்டுள்ளார். விபின் ஒளிப்பதிவாளராக பணியாற்றி வருகிறார். இவர்கள் இருவரும் கடந்த 2019-ம் ஆண்டு முதல் இணைந்து பணியாற்றி வந்துள்ளனர். அப்போது பழக்கம் ஏற்பட்டு அது நாளடைவில் காதலாக மாறி இருக்கிறது. 3-வது திருமணம் செய்துகொண்ட நடிகை மீரா வாசுதேவனுக்கு சமூக வலைதளங்களில் வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.
இதையும் படியுங்கள்... ரசிகர்களுக்கு ஆக்ஷன் ட்ரீட் கன்ஃபாம்! வெள்ளி விழா நாயகன் மோகன் நடித்துள்ள 'ஹரா' படத்தின் ட்ரைலர் வெளியானது!