இன்னும் அரண்மனை 4 படமே வெளியாகல.. அதற்குள் அடுத்த பட Sequelலுக்கு ரெடியான சுந்தர் சி - ஹீரோ யார் தெரியுமா?
Director Sundar C : பிரபல இயக்குனர் சுந்தர் சி, இப்பொது நடிப்பு மற்றும் இயக்கம் என்று மிகவும் பிசியாக இருந்து வருகின்றார் என்றே கூறலாம்.
Murai Maman
பிரபல நடிகர் ஜெயராம் மற்றும் கவுண்டமணி இணைந்து காமெடியில் கலக்கிய "முறை மாமன்" என்கின்ற திரைப்படத்தின் மூலம் கடந்த 1995 ஆம் ஆண்டு தமிழ் திரை உலகில் இயக்குனராக களமிறங்கியவர் தான் சுந்தர் சி. 1997 ஆம் ஆண்டு இவர் இயக்கத்தில் வெளியான "அருணாச்சலம்" திரைப்படத்திற்காக இவருக்கு தமிழக அரசு வழங்கும் மாநில விருது கிடைத்ததும் குறிப்பிடத்தக்கது.
Anbe Sivam
"உள்ளத்தை அள்ளித்தா", "மேட்டுக்குடி", "நாம் இருவர் நமக்கு இருவர்", உலக நாயகன் கமல்ஹாசனின் "அன்பே சிவம்", நடிகர் பிரசாந்தின் "வின்னர்" என்று பல சூப்பர் ஹிட் திரைப்படங்களை இயக்கி தனக்கென தனி புகழோடு திகழ்ந்து வரும் சுந்தர் சி, தமிழ் திரை உலகில் தயாரிப்பாளராகவும், நடிகராகவும் வலம் வந்து கொண்டிருப்பது அனைவரும் அறிந்ததே.
Kavin
இந்நிலையில் ஏற்கனவே அவருடைய இயக்கத்தில் வெளியான அரண்மனை, அரண்மனை 2 மற்றும் அரண்மனை 3 ஆகிய திரைப்படங்கள் நல்ல வரவேற்பு பெற்ற நிலையில், தற்போது அரண்மனை திரைப்படத்தின் 4ம் பாகத்தை இயக்கி வருகிறார். இந்த நிலையில் ஏற்கனவே அவருக்கு மிகப்பெரிய வெற்றிகளை தேடி தந்த கலகலப்பு மற்றும் கலகலப்பு 2 ஆகிய இரண்டு திரைப்படங்களை தொடர்ந்து தற்பொழுது கலகலப்பு திரைப்படத்தின் 3ம் பாகத்தை அவர் விரைவில் இயக்க உள்ளார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.
இதில் பிரபல நடிகர் கவின் அவர்கள் நாயகனாக நடிக்க அதிக வாய்ப்புகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
Serial Actress Arrested: பிரபல பாடலாசிரியர் சினேகன் அளித்த மோசடி புகார்! சீரியல் நடிகை அதிரடி கைது!