வரலட்சுமியின் வருங்கால கணவரின் முன்னாள் மனைவி உலக அழகியா? கண்டீஷனோடு திருமணம்.. பயில்வான் பகிர்ந்த சீக்ரெட்!
கடந்த வாரம், நடிகை வரலட்சுமி சரத்குமாரின் திருமண நிச்சயதார்த்தம் முடிவடைந்த நிலையில், பலருக்கும் தெரியாத சில சீக்ரெட் விஷயங்களை பகிர்ந்து கொண்டுள்ளார் பயில்வான் ரங்கநாதன்.
தமிழ், தெலுங்கு, கன்னடம் என தென்னிந்திய மொழி படங்களில் கதாநாயகியாக மட்டும் இன்றி, வில்லி, குணசித்ர வேடம் என அழுத்தமான கதாபாத்திரத்தை தேர்வு செய்து நடித்து வருபவர் நடிகர் சரத்குமாரின் முதல் மனைவியின் மகளான வரலட்சுமி.
இந்நிலையில் சமீபத்தில் வரலட்சுமி சரத்குமாருக்கும், அவரின் நீண்ட நாள் நண்பரும், காதலருமான நிக்கோலய் சச்தேவுடன் திருமண நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது. தற்போது வரலட்சுமியின் திருமண நிச்சயதார்த்தம் மற்றும் அவரின் காதலர் பற்றி, பல பட்டாசுகளை கொளுத்தி போட்டுள்ளார் பிரபல நடிகரும், பத்திரிகையாளருமான பயில்வான் ரங்கநாதன்.
RRR பட ஹீரோக்களை குறிவைத்த ஜான்வி! ஜூனியர் என்டிஆரை தொடர்ந்து ராம் சரணுக்கு ஜோடியாகிறார்!
இந்த பேட்டியல் அவர் கூறியுள்ளதாவது, "இப்போது மட்டுமல்ல, கடந்த ஐந்து.. ஆறு.. வருடங்களுக்கு முன்பே வரலட்சுமியின் திருமணம் குறித்த தகவல் அதிகம் பேசப்பட்டது. பிரஸ்மீட் ஒன்றில் நடிகர் விஷால் அனைவரிடமும், லக்ஷ்மிகரமான பெண் தான் என் வீட்டுக்கு மருமகளாக வருவார் என கூறினார். இதனை எந்த ஒரு நொடியிலும் வரலட்சுமி சரத்குமார் மறுக்கவில்லை.
அதேபோல் விஷால் மற்றும் வரலட்சுமி சரத்குமார் இருவரும் லிவிங் டூ கெதர் வாழ்க்கை வாழ்ந்ததாகவும் பேசப்பட்டது. ஆனால் திடீரென விஷால் மாறிவிட்டார். இதற்கு காரணம் நடிகர் சங்க தேர்தலில் போது, விஷாலுக்கும் சரத்குமாருக்கும் ஏற்பட்ட மோதல் தான். தவிர்க்க முடியாத காரணத்தால் விஷால் வரலட்சுமியை விட்டு விலகினார். இந்த பிரிவு குறித்து விஷாலும் பெரிதாக கண்டுகொள்ளவில்லை, அதேபோல் வரலட்சுமி அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை என்பது தான் உண்மை.
வரலட்சுமி சரத்குமார், ஒரு ஆண் போல மிகவும் தைரியமான சுபாவம் கொண்டவர். எப்படி சரத்குமார் எல்லா விஷயங்களுக்கும் துணிந்து போராடுவாரோ...அதேபோல் வரலட்சுமி சரத்குமார் தைரியமான பெண். அவர் ஹோட்டலில் சண்டை போட்ட சம்பவங்களை நானே நேரில் பார்த்திருக்கிறேன். நடுராத்திரி 12 மணிக்கு தான் வீட்டுக்கே போவார். இடையில் யாராவது பிரச்சனை செய்தால், அடித்து நொறுக்கி விடுவார்.
வரலட்சுமியின் அம்மா சாயாதேவி, சரத்குமாரிடம் இருந்து விவாகரத்து பெற்று பிரிந்த பின்னர், இரண்டு பெண் பிள்ளைகளையும் அப்பாவுக்கு அப்பாவாகவும், அம்மாவுக்கு அம்மாவாகவும் இருந்து வளர்த்தவர். குறிப்பாக எந்த ஒரு சர்ச்சையில் சிக்காதவர்.
தற்போது வரலட்சுமி சரத்குமாருக்கு 38 வயது ஆகிறது. இவர் திருமணம் செய்து கொள்ள உள்ள நிக்கோலய் சச்தேவுக்கு 41 வயது ஆகிறது. திருமணமாகி, விவாகரத்தான ஒருவரை வரலட்சுமி இரண்டாம் திருமணம் செய்து கொள்ள உள்ளது கொஞ்சம் அதிர்ச்சிகரமான விஷயம் தான். நிக்கோலய் சச்தேவ் மும்பையில் ஒரு மிகப்பெரிய ஆர்ட் கேலரியை வைத்து நடத்தி வருகிறார். தன்னுடைய தந்தையை தொடர்ந்து இந்த தொழிலை அவர் செய்து வருகிறார்.
நிக்கோலய் சச்தேவுக்கு கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பே கவிதா என்கிற பெண்ணுடன் காதல் திருமணம் நடந்தது. கவிதா கலிபோர்னியா நாட்டு உலக அழகி. இவர்களுக்கு 11 வயதில் ஒரு மகளும் உள்ளார். தற்போது அவர் அம்மா கவிதாவுடன் வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது. மேலும் கவிதா - நிக்கோலய் இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்து விட்டதால் வரலட்சுமி திருமணத்தில் எந்த பிரச்னையும் வர வாய்ப்பில்லை.
அதேபோல் இவர்கள் இருவருக்குள்ளும் ஈகோ தலையிடாமல் இருக்க வேண்டும். வரலட்சுமி எப்போதுமே தனித்து வாழ வேண்டும் என நினைப்பவர். எனவே வருங்கால கணவரிடம் கூட, திருமணத்திற்கு பிறகும் நடிப்பேன் என கண்டீஷன் போட்டு தான் திருமணம் செய்துகொள்வார் என நினைக்கிறன் என தெரிவித்துள்ளார்.
வரலட்சுமி நிச்சயதார்த்தம் நடப்பதற்கு ஒரு வாரத்திற்கு முன்பு, சரத்குமாரின் முன்னாள் மனைவியான சாயா தேவி விவாகரத்து குறித்தும், அதன் வலி குறித்தும் பகிர்ந்து கொண்ட தகவலையும் பயில்வான் சுட்டிக்காட்டி உள்ளார். அதே போல் மும்பையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் மிகவும் எளிமையாக நடந்த இந்த நிச்சயதார்த்தத்தில், சரத்குமாரின் முன்னாள் மனைவியான வரலட்சுமியின் தயார் சாயா, அதே போல் சரத்குமாரின் இரண்டாவது மனைவி ராதிகா அவரின் பிள்ளைகளுடன் கலந்து கொண்ட விஷயம் சிறப்பான் ஒன்று என தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.