சட்லஜ் ஆற்றில் பாய்ந்த கார்.! சைதை துரைசாமியின் மகன் மாயம்.. தேடும் பணி திடீர் நிறுத்தம்.. கைவிரித்த போலீஸ்.!
இமாச்சல பிரதேசத்தில் விபத்தில் சிக்கிய அதிமுக முன்னாள் எம்எல்ஏ சைதை துரைசாமி மகன் வெற்றி துரைசாமி குறித்து தகவலறிய 2 நாளாகும் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Former Chennai Mayor saidai duraisamy son
அதிமுகவைச் சேர்ந்தவர் சைதை துரைசாமி. இவர் சென்னை முன்னாள் மேயராகவும் சைதாப்பேட்டை தொகுதி எம்எல்ஏவாகவும் இருந்தவர். தற்போது அதிமுக தொடர்பான எந்த கட்சி நிகழ்விலும் பங்கேற்காமல் இருந்து வருகிறார். இந்நிலையில், இவரது மகன் வெற்றி துரைசாமி. சைதை துரைசாமி ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட போட்டித் தேர்வுக்கு பயிற்சி அளிக்கும் மனித நேய அறக்கட்டளையை நடத்தி வருகிறார். அந்த பயிற்சி மையத்தை வெற்றி துரைசாமியும் சேர்ந்து கவனித்து வந்தார்.
Vetri Duraisamy
இந்நிலையில் திருப்பூரை சேர்ந்த கோபிநாத் என்ற நண்பருடன் இமாச்சல பிரதேச மாநிலத்திற்கு வெற்றி துரைசாமி சுற்றுலா சென்றுள்ளார். அங்கு இன்னோவா கார் ஒன்றை வாடகை எடுத்து கடந்த ஞாயிறு அன்று லாஹல் மற்றும் ஸ்பிதியின் காசா பகுதியிலிருந்து சிம்லாவுக்கு அவர்கள் சென்று கொண்டிருந்தனர். கின்னார் மாவட்டம் காசாங் நாலா தேசிய நெடுஞ்சாலையில் சென்றுக் கொண்டிருந்த போது கார் திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி சட்லஜ் ஆற்றில் கவிழ்ந்தது.
Vetri Duraisamy Missing
இதுகுறித்த தகவலின் பேரில் போலீசார், தீயணைப்புப் படையினர் மற்றும் தேசிய பேரிடர் மீட்பு படையினர் விரைந்து தேடுதல் பணியில் ஈடுபட்டனர். இதில், காரை ஓட்டிய ஓட்டுநர் தன்ஜின் சடலமாக மீட்கப்பட்டார். மேலும், வெற்றியின் நண்பர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Himachal Pradesh
ஆற்றில் மாயமான வெற்றி துரைசாமியை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. சில இடங்களில் கடும் பனிமூட்டத்தால் மீட்புப்பணியில் சிக்கல் நிலவுவதால் சைதை துரைசாமியின் மகன் குறித்து தகவல் அறிய 2 நாளாகும் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.