Alya Manasa: இரண்டாவது குழந்தை பிறந்த பிறகு ஆல்யா மானசா எடுத்த அதிரடி முடிவு..! இனி இவர்தான் புதிய முல்லையா..?
Alya Manasa: தமிழ் சின்னத்திரையில், ஆல்யா மானசா தனக்கென அதிக ரசிகர் பட்டாளம் கொண்டவர். தனது இரண்டாவது மகன் பிறந்ததற்கு பிறகு, மீண்டும் சீரியலில் கம்பேக் கொடுக்கவுள்ளார்.
alya manasa
தமிழ் சின்னத்திரையில், ஆல்யா மானசா தனக்கென அதிக ரசிகர் பட்டாளம் கொண்டவர். “ராஜா ராணி 1” சீரியல் மூலம் மக்கள் மத்தியில் பிரபலம் அடைந்த இவர், “ராஜா ராணி 2 சீரியலில் நடித்து முன்னணி நடிகைக்கு இணையாக வலம் வந்தவர்.
Alyamanasa
ஆல்யா ராஜா ராணி சீரியலில் நடிக்கும் போது, நடிகர் சஞ்சீவ் என்பவரை, காதலித்து கடந்த 2019-ல் திருமணம் செய்து கொண்டார். இந்த காதல் ஜோடிக்கு, ஏற்கனவே ஐலா என்ற மகள் இருக்கிறார். அதோடு கடந்த மாதம் தான் அவருக்கு இரண்டாவதாக ஆண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு அவர்கள் அர்ஷ் என பெயரிட்டுள்ளனர்.
Alyamanasa
ஆல்யா மானசா ராஜா ராணி 2 என்ற சீரியலில் சித்துவிற்கு ஜோடியாக, முக்கிய நாயகியாக நடித்து வந்த நிலையில், இரண்டாவது குழந்தை பிறந்த பிறகு சீரியலில் இருந்து விலகுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். அவருக்கு பதில் ரியா என்பவர் சந்தியா வேடத்தில் நடிக்கிறார்.
Alyamanasa
இதையடுத்து, நடிகை ஆல்யா தற்போது தனது இரண்டாவது மகனை பார்த்துக் கொள்வதில் மிகவும் பிஸியாக இருக்கிறார். இது தொடர்பான புகைப்படங்கள், வீடியோக்கள் அண்மையில் வெளியாகி வைரல் அகி இருந்தது குறிப்பிடத்தக்கது.
alya manasa
இந்நிலையில், தற்போது புதிய செய்தி என்னவென்றால், நடிகை ஆல்யா மானசா மீண்டும் கம்பேக் கொடுக்க போகிறாராம். இன்ஸ்டாகிராமில், ரசிகர் ஒருவர் ஆல்யாவிடம் அடுத்து எப்போது சீரியலில் நடிக்க வருவீர்கள் என கேட்டுள்ளார். அதற்கு அவர் இன்னும் சில மாதங்களில் சீரியலில் நடிக்க வருவேன் என்று கூறியுள்ளார்.
alya manasa
அதுமட்டுமின்றி, பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் காவ்யா விலக உள்ள நிலையில், முல்லை வேடத்தில் காவ்யாவிற்கு பதிலாக ஆல்யா நடிக்க வருவதாகதகவல்கள் பரவி வருகின்றன.