தேர்தலுக்கு பிறகு அதிரடியாக உயரும் ரீசார்ஜ் கட்டணங்கள்.. மொபைல் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி.. எவ்வளவு?
ஜியோ மற்றும் ஏர்டெல் திட்டங்கள் விரைவில் விலை உயரப்போகிறது. இதன் டேட்டா திட்டங்கள் விலையானது 17 சதவீதம் வரை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Jio-Airtel Tariff Hike
உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியா பொதுத் தேர்தலுக்கு தயாராகி வரும் நிலையில், இந்திய தொலைத்தொடர்பு துறை குறிப்பிடத்தக்க கட்டண உயர்வுக்கு தயாராகி வருவதாக கூறப்படுகிறது. ஆண்டிக் ஸ்டாக் ப்ரோக்கிங்கின் அறிக்கையின்படி, 15-17 சதவீதத்திற்கு இடையே மதிப்பிடப்பட்ட இந்த உயர்வு, தேர்தல் காலத்திற்குப் பிறகு உடனடியாக அமலுக்கு வரும் என்று கூறப்படுகிறது.
Jio
கடைசியாக 20 சதவீத கட்டண உயர்வு டிசம்பர் 2021 இல் நிகழ்ந்ததாக பிடிஐயின் அறிக்கை எடுத்துக்காட்டுகிறது. பார்தி ஏர்டெல்லின் சராசரி வருமானம் (ARPU) தற்போதைய ரூ.208ல் இருந்து 286 நிதியாண்டின் இறுதிக்குள் ரூ.286 ஆக உயரும் என்று கணித்துள்ளது. இந்த கட்டண உயர்வு குறித்து நிறுவனங்களின் அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் எதுவும் இல்லை.
Airtel
2024- 26 ஆண்டுகளுக்கு பார்தி ஏர்டெல்லின் திட்டமிடப்பட்ட மூலதனச் செலவு (கேபெக்ஸ்) 5G வெளியீடு உட்பட தோராயமாக ரூ.75,000 கோடியாக உள்ளது. வெளியீட்டிற்குப் பிறகு, கேபெக்ஸ் தீவிரத்தில் குறிப்பிடத்தக்க குறைப்பு எதிர்பார்க்கப்படுகிறது. இந்த குறைப்பு, மொத்த இந்திய கேபெக்ஸின் சரிவுடன் இணைந்து, தொலைத்தொடர்பு நிலப்பரப்பில் சாதகமான மாற்றத்தைக் குறிக்கிறது.
Tariff Hike
கடந்த 5.5 ஆண்டுகளில், பார்தி ஏர்டெல் மற்றும் ரிலையன்ஸ் ஜியோ ஆகியவை வோடபோன் ஐடியா மற்றும் பிஎஸ்என்எல் ஆகியவற்றின் இழப்பில் தொடர்ந்து சந்தைப் பங்கைப் பெற்றுள்ளன. செப்டம்பர் 2018 முதல் வோடபோன் ஐடியாவின் சந்தைப் பங்கு கிட்டத்தட்ட பாதியாகக் குறைந்துள்ளது.
Recharge Plans
இந்நிலையில், சந்தையில் அதன் ஆதிக்கத்தை உறுதிப்படுத்தும் வகையில் ஜியோ மிகப்பெரிய லாபம் ஈட்டக்கூடிய நிறுவனமாக உருவெடுத்துள்ளது. விரைவில் ரீசார்ஜ் கட்டணங்கள் உயர உள்ளது என்ற செய்தி மொபைல் வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.