Nayanthara: லேடி சூப்பர் ஸ்டார்னா சும்மாவா? 50 வினாடி விளம்பத்தில் நடிக்க... பிக் பேமெண்ட் கேட்கும் நயன்தாரா!
நடிகை நயன்தாரா விளம்பர படங்களில், சில வினாடிகள் மட்டுமே நடிப்பதற்கு கூட பல கோடி சம்பளம் வாங்குவதாக தகவல் வெளியாகியுள்ளது.
நடிகை நயன்தாரா மலையாள நடிகையாக இருந்தாலும், இவரின் அசுர வளர்ச்சிக்கு முக்கிய காரணம் தமிழ் சினிமா தான். வந்தாரை வாழ வைக்கும் தமிழ்நாடு என்கிற பழமொழிக்கு ஏற்ப, இவருக்கு முதல் படமான 'ஐயா' சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற நிலையில், இரண்டாவது படத்திலேயே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு 'சந்திரமுகி' படத்தில் ஜோடி சேர்ந்தார்.
அடுத்தடுத்து, விஜய்யுடன் வில்லு, அஜித்துடன் பில்லா, சிம்புவுடன் வல்லவன், என தரமான ஹிட் படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்த நயன், கிசுகிசுவில் அதிகம் சிக்கி எப்போதும் சினிமா தலைப்பு செய்திகளில் இடம்பிடித்தார்.
சிம்புவுடன் காதல், லிப் லாக் சர்ச்சை... மற்றும் நடன இயக்குனரும் , நடிகருமான பிரபு தேவா ஏற்கனவே திருமணம் ஆனவர் என தெரிந்தும், அவருடன் லிவிங் டூ கெதர் வாழ்க்கை, மத மாற்றம் வரை சென்று.. திருமணத்திற்கு முன்பே திடீர் என பிரேக் அப் செய்து பிரிந்தார்.
இந்த காதல் தோல்வியில் துவண்டு கொண்டிருந்த நயன்தாரா... 2015-ஆம் ஆண்டு 'நானும் ரவுடி தான்' படத்தை இயக்கிய, விக்னேஷ் சிவனை பார்த்ததும் அவர் மீது காதல் வயப்பட்டார். 6 வருடத்திற்கு மேல் உருகி உருகி காதலித்து பின் அவரையே திருமணமும் செய்து கொண்டார். திருமணம் ஆன 4 மாதத்திலேயே வாடகை தாய் மூலம் இரட்டை குழந்தைகளுக்கு தாய் ஆன நயன், நடிப்பிலும் செம்ம ஆக்ட்டிவாக இருக்கிறார்.
சமீபத்தில் இவர் பாலிவுட்டில் அறிமுகமான 'ஜவான்' திரைப்படம் 1200 கோடிக்கு மேல் வசூல் சாதனை செய்தது. அதே போல் திரைப்படங்களில் நடிக்க கடந்த ஆண்டு வரை 5 கோடி வாங்கி வந்த இவர் தற்போது அதிரடியாக 10 கோடியாக சம்பளத்தை உயர்த்தியுள்ளார். மேலும் தன்னை தேடி வரும் விளம்பர வாய்ப்புகளுக்கும் no சொல்லாத நயன் 5 கோடி சம்பளம் வேண்டும் என கறாராக கேட்கிறாராம்.
அந்த வகையில் சமீபத்தில் 50 வினாடிகள் இவர் நடித்த டாட்டா ஸ்கை நிறுவனத்தின் விளம்பரம் மற்றும் மாம்பழ ஜூஸ் நிறுவனத்தின் விளம்பரத்தில் நடிக்க அம்மணி 5 கோடி பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. 1 நிமிடம் கூட வராத விளம்பரத்துக்கு இத்தனை கோடியா? என நயனை பார்த்து வாய் பிளக்கின்றனர் சக நடிகைகள்.