Goundamani Daughter : சத்தமே இல்லாமல் கவுண்டமணி மகள் செய்யும் பேருதவி.. நெகிழ வைக்கும் செயல்..
கவுண்டமணியின் மகள் சுமித்ராவின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. தனது செயல் மூலம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார் சுமித்ரா.
தமிழ் சினிமாவில் எத்தனை நகைச்சுவை நடிகர்கள் இருந்தாலும் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்திருப்பது வெகு சிலர் மட்டுமே. அதில் தனது டைமிங் காமெடி மூலமும், நக்கலான காமெடி மூலமும் பிரபலமானவர் கவுண்டமணி.
தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகராக வலம் வந்த கவுண்டமணியும் செந்திலும் சேர்ந்து நடித்த காமெடி காட்சிகள் இன்றளவும் ரசிக்கும் படி உள்ளன. கவுண்டமணியின் பல வசனங்களை இன்றும் மீம்ஸ் வீடியோக்களிலும் ட்ரோல்களிலும் பார்க்க முடிகிறது.
80களில் கவுண்டமணி செந்தில் இணைந்து நடிக்காத படமே இல்லை என்று கூறுமளவுக்கு பிசியாக இருந்தனர். 90களிலும் கவுண்டமணி பல படங்களில் நடித்தாலும் 2000களில் படங்களில் நடிப்பதை குறைத்துக் கொண்டார்.
நடிப்பில் எதிராளிக்கு கவுண்ட்டர் கொடுக்கும் வகையில் பேசியதால் இவருக்கு கவுண்ட்டர் மணி என்ற பெயர் வந்தது. பின்னர் அதுவே கவுண்டமணி என்று ஆகிவிட்டது.
சினிமா வாழ்க்கை வேறு, தனிப்பட்ட குடும்ப வாழ்க்கை வேறு என்ற எண்ணம் கொண்ட கவுண்டமணி தனது குடும்பத்தை மீடியாவில் காட்டாமல் இருந்தார். சாந்தி என்ற பெண்ணை திருமணம் செய்த கவுண்டமணிக்கு செல்வி, சுமித்ரா என்ற மகள்கள் இருந்தனர்.
Senthil
இந்த நிலையில் கவுண்டமணியின் மகள் சுமித்ராவின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. தனது செயல் மூலம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார் சுமித்ரா. ஆம். சென்னையில் உள்ள அடையாறு புற்றுநோய் காப்பகத்திற்கு சுமித்ரா பல உதவிகளை செய்து வருகிறார். பொருளாதார ரீதியாக பின்தங்கிய புற்றுநோயாளிகளுக்கு சுமித்ராவும் அவரின் கணவர் வெங்கடாச்சலமும் சத்தமே இல்லாமல் உதவி வருகின்றனர்.
முதியவர்கள், குழந்தைகள் என புற்றுநோயுடன் போராடும் நோயாளிகளுக்கு தேவையான உதவிகளை ஒவ்வொரு மாதமும் இந்த தம்பதியினர் செய்து வருவதாக கூறப்படுகிறது.
Goundamani
எனினும் மீடியா வெளிச்சத்தை தவிர்க்கும் இந்த தம்பதி தங்கள் பெயர் வெளியே வருவதை விரும்பாமல், பல ஆண்டுகளாக இந்த தொண்டு செயலில் ஈடுபட்டு வருகின்றனர். எந்தவித பிரதிபலனும் எதிர்பார்க்காமல் அவர்களுக்கு உதவி வருகின்றனர். எந்த உதவி செய்தாலும் அதை சமூக வலைதலங்களில் பதிவிட்டு புகழ் தேடிக்கொள்ளும் இன்றைய காலக்கட்டத்தில் சைலண்டாக கவுண்டணியின் மகளும், மருமகனும் செய்து வரும் இந்த செயலுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.