MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • குற்றம்
  • உடற்கல்வி ஆசிரியருடன் சௌமியா.! வீட்டிற்கு வந்தும் எந்நேரமும் ஓயாமல்! விஷயம் தெரிந்த கணவர்! இறுதியில் நடந்த அதிர்ச்சி!

உடற்கல்வி ஆசிரியருடன் சௌமியா.! வீட்டிற்கு வந்தும் எந்நேரமும் ஓயாமல்! விஷயம் தெரிந்த கணவர்! இறுதியில் நடந்த அதிர்ச்சி!

ரூ.2 கோடி இன்சூரன்ஸ் பணத்திற்காக, சௌமியா தனது கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவர் ரமேஷை கொலை செய்துள்ளார். மாரடைப்பு என நாடகமாடிய நிலையில், இறந்தவரின் புகைப்படத்தில் இருந்த கழுத்து காயம் சந்தேகத்தை ஏற்படுத்த, போலீஸ் விசாரணையில் கொலை அம்பலமானது.

2 Min read
Author : vinoth kumar
Published : Jan 09 2026, 02:02 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Image Credit : Asianet News

தெலங்கானா மாநிலம் நிஜாமாபாத் மாவட்டம் போர்கான் கிராமத்தை சேர்ந்தவர் ரமேஷ் (35). தனியார் நிறுவன வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி சௌமியா (30). இவர் அங்குள்ள தனியார் பள்ளியில் அலுவல ஊழியராக பணியாற்றி வந்தார். இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் சௌமியாவுக்கும், அதே பள்ளியில் உடற்கல்வி ஆசிரியர் திலீப் (28) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் இருவருக்கும் இடையே கள்ளக்காதலாக மாறியுள்ளது.

25
Image Credit : Asianet News

இதையடுத்து இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். பணி முடிந்து வீட்டுக்கு வந்த பிறகும் சௌமியா, திலீப்புடன் போனில் பேசுவதை வழக்கமாக கொண்டுள்ளார். இந்த விவகாரம் நாளடைவில் கணவர் ரமேஷ்க்கு தெரியவந்ததை அடுத்து மனைவியை கண்டித்துள்ளார். இதனால் கணவன், மனைவிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனிடையே கணவர் ரமேஷ் ரூ.2 கோடிக்கு இன்சூரன்ஸ் செய்திருப்பது சௌமியாவுக்கு தெரியவந்தது.

Related Articles

Related image1
இரண்டு குழந்தைகளின் தந்தையுடன் 22 வயது மருத்துவ மாணவி காதல்.. அப்பார்ட்மென்ட்டில் வர்ஷினி இருந்த கோலம்.!
Related image2
பொங்கலுக்கு பொங்க வைக்க போகும் மழை? வானிலை மையம் கொடுத்த வார்னிங்!
35
Image Credit : Asianet News

இதனால் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருக்கும் கணவரை போட்டு தள்ளிவிட்டு அந்த 2 கோடி ரூபாய் பணத்தை ஆட்டையை போட மனைவி மற்றும் கள்ளக்காதலனும் திட்டமிட்டார். இதற்கு உடந்தையாக திலீப்பின் தம்பி அபிஷேக் உடந்தையாக இருந்தார். கடந்த 3 மாதங்களுக்கு முன் ரமேஷ் சென்ற பைக் மீது காரை மோதியுள்ளனர். இதில் ரமேசுக்கு எலும்பு முறிவு ஏற்பட்டு அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இதனையடுத்து ரவுடி கும்பலின் தலைவன் உதவியை நாடியுள்ளனர்.

45
Image Credit : our own

அதன்படி கடந்த டிசம்பர் மாதம் 19ம் தேதி இரவு ரமேஷூக்கு அதிகளவு தூக்க மாத்திரையை தண்ணீரில் கலந்து கொடுத்துள்ளார். இதனால் ரமேஷ் ஆழ்ந்து தூங்கினார். இதனையடுத்து சௌமியா தனது கள்ளக்காதலன் திலீப் ரவுடி கும்பலை வரவழைத்து கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளனர். மறுநாள் காலையில் தனது கணவர் மாரடைப்பால் உயிரிழந்ததாக நாடகமாடியுள்ளார். இதனிடையே வெளிநாட்டில் இருக்கும் ரமேஷின் தம்பி கோதாரி, அண்ணனின் இறுதிசடங்குக்கு வரமுடியாத நிலையில் அவருக்கு செல்போனில் இறப்பு, இறுதிச்சடங்கு போட்டோக்கள் அனுப்பியுள்ளார். அப்போது அவரது கழுத்தில் காயம் இருந்தது தெரியவந்தது.

55
Image Credit : Asianet News

இதனையடுத்து கோதாரி தனது அண்ணன் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக மனைவிக்கு தெரிவித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்க செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சௌமியாவிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். அப்போது கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை கொன்றதை சௌமியா ஒப்புக்கொண்டார். இதனையடுத்து சௌமியா, அவரது கள்ளக்காதலன் திலீப் உள்ளிட்ட6 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
குற்றம்
கொலை
பெண்கள்
காவல் நிலையம்

Latest Videos
Recommended Stories
Recommended image1
கலகலப்பு பட பாணியில் திருட்டு.. ஃபேன் ஓட்டையில் சிக்கி தலைகீழாக தொங்கிய இளைஞர்!
Recommended image2
அட பாவிங்களா.! இதுக்குலாமா கொலை செய்வாங்க! வியாபாரியை காரில் கடத்தி குற்றாலத்தில் கதறவிட்டு கதையை முடித்த பயங்கரம்
Recommended image3
இது தேவையா? சீண்டிய நண்பனை 'ரோஸ்ட்' செய்த இளைஞர்.. வைரலாகும் பகீர் வீடியோ!
Related Stories
Recommended image1
இரண்டு குழந்தைகளின் தந்தையுடன் 22 வயது மருத்துவ மாணவி காதல்.. அப்பார்ட்மென்ட்டில் வர்ஷினி இருந்த கோலம்.!
Recommended image2
பொங்கலுக்கு பொங்க வைக்க போகும் மழை? வானிலை மையம் கொடுத்த வார்னிங்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved