MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • குற்றம்
  • ஒரே போன்கால்..! தேனி பேருந்து நிலையத்தில் குவிந்த போலீஸ்! கையும் களவுமாக சிக்கிய பிரசாத்! நடந்தது என்ன?

ஒரே போன்கால்..! தேனி பேருந்து நிலையத்தில் குவிந்த போலீஸ்! கையும் களவுமாக சிக்கிய பிரசாத்! நடந்தது என்ன?

Theni Crime News: தேனி மாவட்ட காவல்துறைக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில், திருச்சியிலிருந்து பேருந்தில் கடத்திவரப்பட்ட மெத்தபட்டமைன் போதைப்பொருளை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக கம்பத்தைச் சேர்ந்த பிரசாத் என்ற இளைஞர் கைது செய்யப்பட்டார்.

1 Min read
vinoth kumar
Published : Dec 05 2025, 12:30 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Image Credit : Asianet News

தேனி மாவட்ட காவல்துறையினருக்கு திருச்சியில் இருந்து பேருந்தின் மூலமாக போதைப் பொருளான மெத்தபட்டமைன் கடத்தி வரப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து தேனி புதிய பேருந்து நிலையம் பகுதியில் திருச்சியிலிருந்து தேனிக்கு வந்த நபர்களை காவல்துறையினர் தீவிரமாக கண்காணித்து வந்தனர்.

24
Image Credit : Asianet News

அப்போது ஒரு வாலிபர் ஒருவர் சந்தேகத்துக்கு இடமான முறையில் நடந்து கொண்டார். இதனையடுத்து அவரை சுற்றி வளைத்த போலீஸ் தனியாக அழைத்துச் சென்று சோதனை செய்தனர். அப்போது சர்வதேச போதைப் பொருளான மெத்தபட்டமைன் அவரிடம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து அவரை பிடித்து தேனி காவல் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது.

Related Articles

Related image1
தகுதி இருந்தாலும் இவர்களுக்கு ரூ.1000 கிடையாது.. மகளிர் உரிமைத்தொகை குறித்து தமிழக அரசு அதிர்ச்சி தகவல்
Related image2
காதல் கல்யாணம் பண்ண மூன்றே மாசத்துல என் பொண்ண கொன்னுட்டாங்களே! நெஞ்சில் அடித்து கதறும் தாய்
34
Image Credit : Asianet News

அப்போது அவர் தேனி மாவட்டம் கம்பம் பகுதியைச் சேர்ந்த பிரசாத் என்பதும் அவர் திருச்சியில் இருந்து ராஜேஷ் என்பவரிடம் இந்த போதைப் பொருளை வாங்கி வந்ததாக விசாரணையில் தெரியவந்தது. அவர் திருச்சியில் இருந்து தேனி மாவட்டம் கம்பம் பகுதிக்கு விற்பனைக்காக இதனை வாங்கி வருவதாக காவல்துறையினரிடம் தெரிவித்தார்.

44
Image Credit : Getty

இதனையடுத்து அவரிடம் இருந்த 22 கிராம் மெத்தபெட்டமைனை பறிமுதல் செய்யப்பட்டது. இதனையடுத்து அவரை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டார். இந்த சம்பவத்தில் தொடர்புடைய ராஜேஷ் என்பவரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
குற்றம்
தமிழ்நாடு குற்றச் செய்திகள்
காவல்

Latest Videos
Recommended Stories
Recommended image1
புதிய வகை ஆன்லைன் மோசடிகள்: டிஜிட்டல் அரெஸ்ட் முதல் AI வாய்ஸ் வரை - தப்பிப்பது எப்படி?
Recommended image2
காதல் கல்யாணம் பண்ண மூன்றே மாசத்துல என் பொண்ண கொன்னுட்டாங்களே! நெஞ்சில் அடித்து கதறும் தாய்
Recommended image3
கணவரை பிரிந்து வாழ்ந்த சந்தியா! வீடு புகுந்த அத்தை மகன்! இறுதியில் நடந்த அதிர்ச்சி சம்பவம்
Related Stories
Recommended image1
தகுதி இருந்தாலும் இவர்களுக்கு ரூ.1000 கிடையாது.. மகளிர் உரிமைத்தொகை குறித்து தமிழக அரசு அதிர்ச்சி தகவல்
Recommended image2
காதல் கல்யாணம் பண்ண மூன்றே மாசத்துல என் பொண்ண கொன்னுட்டாங்களே! நெஞ்சில் அடித்து கதறும் தாய்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved