திருமணம் ஆன ஓரிரு வருடத்தில் மனைவி தற்கொலை... பிரபல நடிகர் அதிரடி கைது..!
பல படங்களின் நடித்து பிரபலமான நடிகர் ஒருவரின் மனைவி, திருமணம் ஆகி இரண்டு வருடம் கூட முழுமையாக ஆகாத நிலையில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், இந்த வழக்கு தொடர்பாக தற்போது நடிகர் கைது செய்யப்பட்ட தகவல் வெளியாகியுள்ளது.

<h2> </h2><p>மறைந்த நடிகர் ராஜன் பி. தேவ்வின் மகன் உன்னி தேவ், மயலாளத்தில் பல படங்களில் நடித்து பிரபலமானவர். அவரது மனைவி பிரியங்கா கடந்த இரண்டு வாரங்களுக்கு முன் தூக்கிட்டு தற்கொலை செய்தது குறித்து போலீசார், தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.</p>
மறைந்த நடிகர் ராஜன் பி. தேவ்வின் மகன் உன்னி தேவ், மயலாளத்தில் பல படங்களில் நடித்து பிரபலமானவர். அவரது மனைவி பிரியங்கா கடந்த இரண்டு வாரங்களுக்கு முன் தூக்கிட்டு தற்கொலை செய்தது குறித்து போலீசார், தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
<p>பிரியங்கா - தேவ் தம்பதிகளுக்கு கடந்த 2019 ஆம் ஆண்டு இறுதியில் பெற்றோர் பார்த்து திருமணம் செய்து வைத்தனர். திருமணத்திற்கு பின்னர் கொச்சிக்கு அருகிலுள்ள அங்கமாலியில் இருவரும் வசித்து வந்தனர்.</p>
பிரியங்கா - தேவ் தம்பதிகளுக்கு கடந்த 2019 ஆம் ஆண்டு இறுதியில் பெற்றோர் பார்த்து திருமணம் செய்து வைத்தனர். திருமணத்திற்கு பின்னர் கொச்சிக்கு அருகிலுள்ள அங்கமாலியில் இருவரும் வசித்து வந்தனர்.
<p>உன்னி தேவ், திருமணத்தின் போது ப்ரியங்காவிற்கு அவரது பெற்றோர் வீட்டில் போட்ட அனைத்து நகைகளையும் சிறிது சிறியதாக வாங்கி விற்று விட்டதாகவும், தொடர்ந்து பணம் கேட்டு பிரியங்காவின் பெற்றோரையும் தொந்தரவு செய்து வந்ததாகவும், அதே நேரத்தில் பிரியங்காவை அடித்து கொடுமை படுத்தியதாகவும் தகவல் வெளியானது.</p>
உன்னி தேவ், திருமணத்தின் போது ப்ரியங்காவிற்கு அவரது பெற்றோர் வீட்டில் போட்ட அனைத்து நகைகளையும் சிறிது சிறியதாக வாங்கி விற்று விட்டதாகவும், தொடர்ந்து பணம் கேட்டு பிரியங்காவின் பெற்றோரையும் தொந்தரவு செய்து வந்ததாகவும், அதே நேரத்தில் பிரியங்காவை அடித்து கொடுமை படுத்தியதாகவும் தகவல் வெளியானது.
<p>இதனால் கணவரை விட்டு பிரிய முடிவு செய்தார் ஆசிரியையான பிரியங்கா. மேலும் உன்னி தேவ் தன்னை அடித்து கொடுமை படுத்துவதாக காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகார் மீதான விசாரணை செய்வதற்கு முன்னரே பிரியங்கா தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.</p>
இதனால் கணவரை விட்டு பிரிய முடிவு செய்தார் ஆசிரியையான பிரியங்கா. மேலும் உன்னி தேவ் தன்னை அடித்து கொடுமை படுத்துவதாக காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகார் மீதான விசாரணை செய்வதற்கு முன்னரே பிரியங்கா தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
<p>இந்த வழக்கு இப்போது அங்கமாலி காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் இந்த வழக்கு குறித்து போலீசார் தீவிர பல்வேறு கோணங்களில் விசாரணை செய்து வந்தனர்.</p>
இந்த வழக்கு இப்போது அங்கமாலி காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் இந்த வழக்கு குறித்து போலீசார் தீவிர பல்வேறு கோணங்களில் விசாரணை செய்து வந்தனர்.
<p>மேலும் உன்னி தேவிடமும் விசாரணை செய்யப்பட்டது. அப்போது இவர் படுத்திய கொடுமைகள் தாங்க முடியாமலும், அடித்து கொடுமை படுத்தியதால் தான், பிரியங்கா இந்த முடிவை எடுத்தார் என்பது தெரிய வரவே, அவரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த தகவல்... மலையாள திரையுலகினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.</p>
மேலும் உன்னி தேவிடமும் விசாரணை செய்யப்பட்டது. அப்போது இவர் படுத்திய கொடுமைகள் தாங்க முடியாமலும், அடித்து கொடுமை படுத்தியதால் தான், பிரியங்கா இந்த முடிவை எடுத்தார் என்பது தெரிய வரவே, அவரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த தகவல்... மலையாள திரையுலகினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.