பிக்பாஸ் நிகழ்ச்சியில் யார் வெற்றி பெறுவார்..! வெளியே வந்த பின் சம்யுக்தா கூறிய பதில்..!
போட்டிகள், சண்டைகள், பிரச்சனைகள் நிறைந்த பிக்பாஸ் வீட்டிற்குள் எத்தனை போட்டியாளர்கள் வயல் கார்டு மூலம் உள்ளே சென்றாலும் கடைசியில் வெற்றி பெற போவது ஒருவர் தான்.
அந்த வகையில் தற்போது, பிக்பாஸ் போட்டியில் வெற்றிபெற கடுமையான போட்டிகள் நிலவி வருகிறது.
50 நாட்களுக்கு மேலாக தாக்கு பிடித்து விளையாடிய சம்யுக்தா, யாரும் எதிர்பாராத வண்ணமாக கடந்த வாரம் வெளியேறினார்.
அதுவும் அனிதா நாமினேஷன் ப்ரீ பாசை கைப்பற்றி, சம்யுக்தாவை சிக்க வைத்தார்.
இதுவரை யார் என்றே தெரியாமல் இருந்த சம்யுக்தா, பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் உலக மக்கள் அனைவரும் அறிந்து கொள்ளும் பிரபலமாக மாறியுள்ளார்.
தற்போது செம்ம பிசியாக பேட்டி கொடுத்து வரும், ஊடகம் ஒன்றில்... யார் பிக்பாஸ் விளையாட்டை சரியாக விளையாடுகிறார் என எழுப்பப்பட்ட கேள்விக்கு, ஆஜித் சரியாக விளையாடுவதாகவும் ஆனால் அவர் வெற்றிபெறும் வாய்ப்பு குறைவு தான் என கூறியுள்ளார்.
அடுத்த வார கேப்டன் யார் என்பதை தேர்வு செய்ய பிக்பாஸ் வெற்றிபெற்ற இரண்டு அணியை சேர்ந்தவர்களுக்கு இடையே, ஒரு போட்டியை நடத்தினார்.