ஹேமந்த் உடனான திருமணத்தை நிறுத்த நினைத்தாரா சித்ரா?... அடுத்தடுத்து அதிர்ச்சியை அதிகரிக்கும் தகவல்கள்...!
இந்நிலையில் விஜே சித்ரா திருமணத்தை நிறுத்த முடிவெடுத்ததாக பகீர் காரணங்கள் வெளியாகியுள்ளன.
விஜய் தொலைக்காட்சியின் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற விஜே சித்ரா, அந்த நிகழ்ச்சி முடிய இரவு வெகு நேரமானதால் நசரத்பேட்டையில் உள்ள ஓட்டலில் வருங்கால கணவரான ஹேமந்த் ரவி உடன் தங்கியிருந்தார்.
இதனிடையே அதிகாலை சித்ரா தான் தங்கியிருந்த அறையிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 4 மாதத்திற்கு முன்பு சித்ராவிற்கும், ஹேமந்த் ரவிக்கும் இடையே திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்ற நிலையில், அடுத்த ஆண்டு இருவரும் திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டிருந்தனர்.
இந்நிலையில் விஜே சித்ரா திருமணத்தை நிறுத்த முடிவெடுத்ததாக பகீர் காரணங்கள் வெளியாகியுள்ளன. நிச்சயதார்த்தம் முடித்த பிறகு சித்ரா பாண்டியன் ஸ்டோர் சீரியலில் நடிப்பதை ஹேமந்த் ரவி குடும்பத்தினர் எதிர்த்துள்ளனர்.
இதனால் ஹேமந்த் ரவி உடனான உறவையும், திருமண பேச்சுவார்த்தையையும் நிச்சயதார்த்தத்துடன் நிறுத்திக் கொள்ளலாம் என சித்ரா முடிவு செய்ததாக அவருடைய நண்பர்கள் தரப்பிலிருந்து கூறப்படுகிறது.
ஓட்டல் அறையில் கூட ஹேமந்த் ரவி - சித்ரா இடையே இதுதொடர்பாக ஏதாவது வாக்குவாதம் நடந்திருக்கலாம் என்றும், அதுதான் சித்ராவின் இந்த முடிவுக்கு காரணமாக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
ஏற்கனவே அனைவரது சந்தேக பார்வையும் சித்ராவின் வருங்கால கணவரான ஹேமந்த் ரவி மீது பதித்துள்ள நிலையில், அடுத்தடுத்து இப்படியான தகவல்கள் வெளியாகி வருகிறது.