பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க போகும் பிரபல தொகுப்பாளினி... தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாக தகவல்...!
அந்த இரண்டு போட்டியாளுக்கு பதிலாக புதிதாக இருவரை களம் இறக்க விஜய் டி.வி.நிர்வாகம் தீவிரமாக முயன்று வந்தது.
தமிழ் ரசிகர்கள் பிக்பாஸ் சீசன் 4 ஒளிபரப்பை காண ஆவலுடன் காத்திருக்கின்றனர். வரும் அக்டோபர் 4ம் தேதி போட்டியாளர்கள் அறிவிக்கப்படுவார்கள் என்றும், அதற்கு அடுத்த நாளான திங்கள் கிழமை முதல் பிக்பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாகும் என்றும் கூறப்படுகிறது.
இந்த முறை ஷிவானி நாராயணன், ஷிவாங்கி, ரம்யா பாண்டியன், கிரண், அதுல்யா, சூர்யா தேவி, சனம் ஷெட்டி, வித்யுலேகா ராமன், குக்வித் கோமாளி புகழ், மன்சூர் அலிகான், மனோ பாலா, விஜய் டி.வி. ரியோ ராஜ் என போட்டியாளர்கள் குறித்த தகவல்கள் விதவிதமாக வெளியாகி வருகிறது.
அதாவது கடந்த 3 சீசன்களை விடவும் இந்த முறை பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. கொரோனா தொற்று காரணமாக 16 போட்டியாளர்கள் கலந்து கொள்ள 100 நாட்கள் நடைபெறும் பிக்பாஸ் நிகழ்ச்சி இந்த முறை, 12 போட்டியாளர்களுடன் 80 நாட்கள் மட்டுமே நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ள போட்டியாளர்கள் அனைவரும் பிக்பாஸ் வீட்டிற்குள் செல்லும் முன்பே 15 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள் என்றும், கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும் என்றும் கூறப்பட்டிருந்தது. அதன் படி பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கவிருந்த போட்டியாளர்கள் 2 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், இதனால் நிகழ்ச்சி தொடங்குவதில் மேலும் தாமதம் ஏற்படால் என்றும் கூறப்படுகிறது.
அந்த இரண்டு போட்டியாளுக்கு பதிலாக புதிதாக இருவரை களம் இறக்க விஜய் டி.வி.நிர்வாகம் தீவிரமாக முயன்று வந்தது. இந்நிலையில் இந்த நிகழ்ச்சியில் விஜே அர்ச்சனா பங்கேற்க உள்ளதாகவும், அதற்காக அவர் தன்னைத் தானே தனிமைப்படுத்திக் கொண்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
எப்போதுமே சிரித்த முகத்துடன் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் அவர் பிக்பாஸ் வீட்டுக்கு சென்ற உடன் தனது ரியல் முகத்தை எப்படி காட்டப் போகிறார் என்பதை காணவும் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.