விஜய் டிவியின் இரண்டு சூப்பர் ஹிட் சீரியல் தற்காலிகமாக நிறுத்தப்படுகிறதா? அதிர்ச்சியில் ரசிகர்கள்!
விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியல்களுக்குமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில், இரண்டு சூப்பர் ஹிட் சீரியல்கள் தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக வெளியாகியுள்ள தகவல் ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
கொரோனா இரண்டாவது அலை மற்ற துறைகளை விட, சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை பணியாளர்கள், மற்றும் நடிகர்களை கொஞ்சம் அதிகமாகவே சோதித்து வருகிறது.
ஏற்கனவே கடந்த ஆண்டு, மார்ச் மாதம் கொரோனா முதல் அலை துவங்கிய போது, போடப்பட்ட முழு ஊரடங்கு காரணமாக, சுமார் 6 மாதத்திற்கு மேல், படப்பிடிப்புகள் எதுவும் நடைபெறாமல் இருந்தது. இதன் காரணமாக, முன்னணி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த அனைத்து சீரியல்களும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
இதை தொடர்ந்து மீண்டும், சின்னத்திரை சீரியல்கள் அனுமதிக்கு கட்டுப்பாடுகளுடன் கூடிய அனுமதி அளிக்கப்பட்ட நிலையில், மீண்டும் படப்பிடிப்பு பணிகள் துவங்க பட்டு, சீரியல்கள் ஒளிபரப்பாகி வந்தன.
இந்நிலையில் கடந்த ஒரு மாதமாக மீண்டும் கொரோனா இரண்டாவது அலையின் தாக்கம் அதிகரித்து காணப்படுவதால், மீண்டும் அனைத்து சீரியல் பணிகளும், வெள்ளித்திரை படப்பிடிப்பு பணிகளும் நிறுத்தப்பட்டுள்ளது.
எனவே ஏற்கனவே படப்பிடிப்பு நடத்தி பேங்கிங் வைத்திருந்த எபிசோடுகளை படக்குழுவினர் ஒளிபரப்பு செய்து வருகிறார்கள்.
ஒளிபரப்ப காட்சிகள் இல்லாத பட்சத்தில் மீண்டும், தற்காலிகமாக விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா மற்றும் ராஜா ராணி 2 ஆகிய தொடர்கள் நிறுத்தப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது . இந்த தகவல் இந்த இரு சீரியல் ரசிகர்களையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த சீரியல்கள் ஒளிபரப்பாகும் நேரங்களில், இரண்டு சீரியல்களின் சங்கமம் ஒளிபரப்பாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.