விஜய் டிவி பாண்டியன் ஸ்டார் முல்லைக்கு நிச்சயதார்த்தம் முடிந்தது..! மாப்பிள்ளை இவர் தான்...
சித்ராவிற்கு ஹேமந்த் என்பவருடன் நிச்சயதார்த்தம் முடிந்ததாக தகவல் கிடைத்துள்ளது
பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியதன் மூலம் மிகவும் பிரபலமானவர் வி.ஜே.சித்ரா.
மக்கள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'சட்டம் சொல்வது என்ன?' என்கிற நிகழ்ச்சியின் மூலம் தான் இவர் முதல் முதலில் தொகுப்பாளராக அடையாளம் காணப்பட்டார்.
பின்னர் நொடிக்கு நொடி அதிரடி, ஊர் சுற்றலாம் வாங்க, ஆகிய பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். இதை தொடர்ந்து சீரியல்கள் நடிப்பதிலும் கவனம் செலுத்தி வந்தார்.
அந்த வகையில், சின்ன பாபா, பெரிய பாபா, சரவணன் மீனாட்சி, வேலூனாட்சி போன்ற போன்ற சீரியல்களில் நடித்தார்.
தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும், 'பாண்டியன் ஸ்டார்' சீரியலில் முல்லை என்கிற கதாப்பாத்திரத்தில் நடித்து வருகிறார்.
இந்த சீரியலில் ஏறக்குறைய 10 முக்கிய கதாப்பாத்திரம் இருந்தாலும், முல்லை கதாபாத்திரத்தில் நடித்து வரும் சித்ராவிற்கு தனி ரசிகர்கள் கூட்டமே உள்ளது.
மேலும், சமீப காலமாக விதவிதமான போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்கள் மனதை கவர்ந்து வருகிறார் சித்ரா.
இந்நிலையில், இவருக்கு இவருடைய பெற்றோர் சமீபகாலமாகவே மாப்பிள்ளை தேடி வருவதாக கூறி வந்த இவருக்கு, மாப்பிள்ளை பார்த்து திருமண நிச்சயதார்த்தமும் முடிந்து விட்டது.
சித்ராவை திருமணம் செய்து கொள்ள உள்ளவர் பெயர் ஹேமந்த் என்றும், அவர் ஒரு தொழிலதிபர் என்றும் கூறப்படுகிறது. நேற்று இவருடைய திருமண நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது.
எனவே பலர் சித்ராவிற்கு தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். இவர் தான் சித்ரா திருமணம் செய்து கொள்ள உள்ள மாப்பிள்ளையாம்.