- Home
- Cinema
- ராஷ்மிகாவுக்கு விஜய் தேவரகொண்டா பெற்றோர் போட்ட கண்டிஷன்... கல்யாணத்துக்கு முன்பே இப்படியா?
ராஷ்மிகாவுக்கு விஜய் தேவரகொண்டா பெற்றோர் போட்ட கண்டிஷன்... கல்யாணத்துக்கு முன்பே இப்படியா?
ராஷ்மிகா மந்தனா திருமண வாழ்வில் அடியெடுத்து வைக்க உள்ள நிலையில், இதற்கு முன்பே மருமகளுக்கு விஜய் தேவரகொண்டா பெற்றோர் விதித்த நிபந்தனை என்ன என்பதை பார்க்கலாம்.

Vijay Deverakonda Parents Condition for Rashmika
ராஷ்மிகா மந்தனாவும், விஜய் தேவரகொண்டாவும் தங்களது திருமணத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். பிப்ரவரி 26-ல் திருமணம் கோலாகலமாக நடைபெறவுள்ளது. சில ஆண்டுகளாக ரகசியமாக இருந்த காதலுக்கு தற்போது முற்றுப்புள்ளி வைக்கப்பட உள்ளது. திருமணம் நெருங்கும் நிலையில், வருங்கால மருமகளுக்கு விஜய் தேவரகொண்டாவின் பெற்றோர் விதித்த நிபந்தனை தற்போது வைரலாகி வருகிறது. விஜய் தேவரகொண்டாவின் தாய் ஒரு நிபந்தனையும், தந்தை கோவர்தன் ஒரு நிபந்தனையும் விதித்துள்ளனர்.
ராஷ்மிகாவுக்கு போடப்பட்ட கண்டிஷன்
இதில், விஜய்யின் தாய் விதித்த நிபந்தனை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வீட்டுக்கு மருமகளாக வரும் ராஷ்மிகாவுக்கு மாமியார் விதித்த நிபந்தனை என்ன என்பதை பார்க்கலாம். வீட்டுக்கு வரும் மருமகளுக்கு என்னுடைய ஒரே நிபந்தனை, என் மகனை நன்றாகப் பார்த்துக்கொள்ள வேண்டும். நிபந்தனையற்ற, எல்லையற்ற அன்பு வேண்டும். அவன் சினிமா துறையில் இருக்கிறான். அதனால் அவனைப் புரிந்துகொள்ள வேண்டும். இதைத் தவிர வேறு எதுவும் இல்லை. இருவரும் நன்றாக இருக்க வேண்டும் என்பதே நிபந்தனை.
விஜய் தேவரகொண்டா தந்தை விதித்த நிபந்தனை
திருமணம் குறித்து விஜய் தேவரகொண்டாவின் தந்தை கோவர்தனும் ஒரு நிபந்தனை விதித்துள்ளார். விஜய் யாரை திருமணம் செய்தாலும் எனக்கு ஆட்சேபனை இல்லை. மதம், ஜாதி தடையில்லை. ஆனால், ஒரு இந்தியப் பெண்ணை, அதிலும் தென்னிந்தியப் பெண்ணை மணந்தால் மகிழ்ச்சி என சில ஆண்டுகளுக்கு முன்பு கூறியிருந்தார். கீதா கோவிந்தம் படத்தில் விஜய் தேவரகொண்டாவும், ராஷ்மிகா மந்தனாவும் ஜோடியாக நடித்திருந்தனர். இந்தப் படம்தான் இவர்களது காதலுக்குக் காரணம் என்று கூறப்படுகிறது. 2018-ல் நடந்த இப்படத்தின் வெற்றி விழாவில், வருங்கால மருமகள் எப்படி இருக்க வேண்டும் என்ற கேள்விக்கு பெற்றோர் இந்த நிபந்தனையை விதித்து பதிலளித்தனர்.
வைரலாகும் வீடியோ
2018-ல் விஜய் தேவரகொண்டாவின் பெற்றோர் வருங்கால மருமகள் குறித்து கூறியது தற்போது வைரலாகி வருகிறது. திருமண செய்திகளுக்கு மத்தியில் இந்த வீடியோ பரவி வருகிறது. உதய்பூரில் ராஷ்மிகா மந்தனா, விஜய் தேவரகொண்டா திருமணம் நடைபெறவுள்ளது. இந்த ஜோடி, நெருங்கிய உறவினர்கள் மற்றும் பெற்றோர் உதய்பூரில் முகாமிட்டுள்ளனர். இந்த திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்துகொள்ள உள்ளனர். இதையடுத்து மார்ச் மாதம் ஐதராபாத்தில் நடைபெற உள்ள திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் திரையுலகினர் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
❤️❤️
— shayla ⋆˙ (@bealive_79) February 21, 2026
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

