MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • சுசீலா தான் இந்த பாட்டை பாடணும்; அடம்பிடித்த வைரமுத்து - மெகா ஹிட் பாடலாக மாற்றிய ரகுமான்!

சுசீலா தான் இந்த பாட்டை பாடணும்; அடம்பிடித்த வைரமுத்து - மெகா ஹிட் பாடலாக மாற்றிய ரகுமான்!

Singer Susheela : வைரமுத்துவின் வரிகளில் பி சுசீலாவின் குரலில் ஏ ஆர் ரகுமானின் இசையில் உருவாகி மெகா கிட்டான பாடல் குறித்து இப்போது பார்க்கலாம்.

2 Min read
Ansgar R
Published : Nov 16 2024, 08:55 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Singer Susheela

Singer Susheela

தமிழ் சினிமா மட்டுமல்ல கன்னடம், மலையாளம், ஹிந்தி, தெலுங்கு என்று இந்திய மொழிகள் பலவற்றுள் சுமார் 25,000 அதிகமான பாடல்களை பாடி, சுமார் 70 ஆண்டுகால திரை அனுபவத்தை கொண்ட பாடகி தான் சுசீலா. இவருடைய குரலுக்கு என்று ஒரு தனி ரசிகர் கூட்டம் பல ஆண்டுகளாக இருந்து வருவது அனைவரும் அறிந்ததே. பல்வேறு சாதனைகளை கடந்து தனது 89 ஆவது வயதில் பயணித்து வருகிறார் சுசீலா. தமிழில் கடந்த 1953 ஆம் ஆண்டு வெளியான "சண்டி ராணி" என்கின்ற திரைப்படத்தின் மூலம் தான் எம்.எஸ் விஸ்வநாதனின் இசையில் தமிழ் திரையுலகில் பாடகையாக சுசிலா அறிமுகமானார்.

தனுஷுக்கு ஒரு நியாயம்; உங்களுக்கு ஒரு நியாயமா? நயன்தாரா & விக்கியை வறுத்தெடுத்த பிரபலம்! ஏன்?

24
susheela and vairamuthu

susheela and vairamuthu

இவருடைய குரலில் ஒலித்த எத்தனையோ பாடல்கள் பல்வேறு விருதுகளை பெற்றதோடு மட்டுமல்லாமல் கிட்டத்தட்ட அரை நூற்றாண்டையும் கடந்து மக்களை பெரிய அளவில் மகிழ்வித்து வருகிறது. கடந்த 2021 ஆம் ஆண்டு பிரபல கவிஞர் கவியரசு வைரமுத்துவின் வரிகளில் உருவான ஒரு கவிதை தொகுப்பை, பாடலாக பாடியிருந்தார் சுசீலா. இப்போது வரை அதுவே அவருடைய இறுதி பாடலாக இருந்து வருவதும் குறிப்பிடத்தக்கது. இந்த சூழலில் ரகுமான் இசையில், வைரமுத்து வரிகளில் உருவான ஒரு பாடலுக்கு சுசீலா தான் கட்டாயம் அந்த பாடலை பாட வேண்டும் என்று வைரமுத்து அடம்பிடித்தது குறித்து இப்போது பார்க்கலாம்.

34
AR Rahman

AR Rahman

கடந்த 1993 ஆம் ஆண்டு பிரபல நடிகை ரேவதியின் முன்னாள் கணவரும் நடிகருமான சுரேஷ் சந்திர மேனன் எழுத்து மற்றும் இயக்கத்தில் உருவான திரைப்படம் தான் "புதிய முகம்". இந்த திரைப்படத்தின் கதை மட்டுமல்ல இப்படத்தில் இடம்பெற்ற பாடல்களும் காலம் கடந்து இன்றளவும் பலருடைய விருப்ப பாடல்களாக இருந்து வருகிறது. ஏ.ஆர் ரகுமான் இசையில் இந்த திரைப்படத்தில் மொத்தம் ஆறு பாடல்கள், அந்த அனைத்து பாடல்களுக்கும் வரிகளை எழுதியது வைரமுத்து தான். இந்த படத்தில் பலருக்கு மிகவும் பிடித்த பாடல் தான் "கண்ணுக்கு மை அழகு கவிதைக்கு பொய்யழகு" என்கின்ற பாடல். வைரமுத்துவின் வரிகளில் உருவான பாடல்களை பட்டியலிட்டால் டாப் 5 பாடல்களில் இது கட்டாயம் இருக்கும்.

44
Pudhiya Mugam

Pudhiya Mugam

இந்த பாடலை எழுதும் போது தமிழில் உள்ள 'ல'கர வரிசையில் பல சொற்கள் அமைக்கப்பட்ட நிலையில், இதை நிச்சயம் சுசீலாவால் மட்டுமே பாட முடியும், ஆகையால் அவருடைய டேட் கிடைக்காவிட்டாலும், காத்திருந்து அவரை இந்த பாடலுக்கு பாட வைக்க வேண்டும் என்று ரகுமானிடம் அடம் பிடித்திருக்கிறார் வைரமுத்து. அப்பாடலின் வரிகளை கேட்ட பிறகு, மெட்டை அமைத்த பிறகு, நிச்சயம் இந்த பாடலுக்கு சுசீலா தான் பாட வேண்டும் என்று ஏ.ஆர் ரகுமானும் முடிவெடுத்துள்ளார். அப்படி பலர் அடம்பிடித்து சுசீலா குரலில் ஒலித்த பாடல் தான் கண்ணனுக்கு மையழகு, கவிதைக்கு பொய்யழகு, அவரைக்கு பூவழகு, அவருக்கு நான் அழகு என்ற பாடல்.

ரம்யா பாண்டியன் வெட்டிங் ரிசப்ஷனில் ஒன்று திரண்ட பிக்பாஸ் பிரபலங்கள்! வைரல் போட்டோஸ்!

About the Author

AR
Ansgar R
ஏ. ஆர். ரகுமான்

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved