'இதயம் உடைந்துவிட்டது' வார்த்தைகளில் சொல்ல முடியாதத் துயர்..! விவேக் மறைவிற்கு இரங்கல் தெரிவிக்கும் பிரபலங்கள்
நேற்று காலை, குடும்பத்தினருடன் பேசிக்கொண்டிருந்த போது நடிகர் விவேக் திடீர் என மயக்கம் அடைந்தார். அவரை உடனடியாக அவரது குடும்பத்தினர் 11 மணியளவில், சென்னை வடபழனியில் உள்ள 'SIMS ' மருத்துவமனையில் அனுமதித்த நிலையில், இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருக்கு வயது 59 .
விவேக் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போதில் இருந்தே... விரைவில் குணமடைந்து வர வேண்டும் என, பிரபலங்கள் முதல் அரசியல் தலைவர்கள் வரை தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வந்த நிலையில், இவரது மறைவு, ஒட்டு மொத்த திரையுலகத்தினரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. பல பிரபலங்கள் காலை முதலே தங்களுடைய இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் நடிகர் பார்த்திபன், சமூகத்தின் மீது தீரா நேசம் கொண்ட நண்பர் விவேக் அவர்களின் பிரிவு ... வார்த்தைகளில் சொல்ல முடியாதத் துயர். என பதிவித்துள்ளார்.
இசையப்புயல் ஏ.ஆர்.ரகுமான்... "நம்பமுடியவில்லை நீங்கள் எங்களை விட்டு பிரிந்ததை, உங்களது ஆத்மா சாந்தியடையட்டும் என பதிவிட்டுள்ளார்.
இசையமைப்பாளர் தமன், "விவேக் விரைவில் குணமடைவார் என நம்பினோம். அவர் தன்னுடை நகைச்சுவையால் பலரது இதயங்களுக்கு மருந்து போட்டவர், பல மரங்களை நாட்டவர், ஒரு இசை காதலன் என குறிப்பிட்டுள்ளார்.
இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத், இந்த அதிர்ச்சியான செய்தியை நடிகர் விவேக் குறித்து எழுதுகிறேன் என, என்னால் நம்ம முடியவில்லை. இதயம் உடைத்து விட்டது. சமூக கருத்தை கூட காமெடியாக தெரிவிப்பவர். நான் எப்போதுமே அவரது டை ஹார்ட் ரசிகன் என தெரிவித்துள்ளார்.
நடிகர் கெளதம் கார்த்திக், "இந்த செய்தியை என்னால் நம்பமுடியவில்லை. காமெடி மூலம் எங்களுக்கு கல்வி கற்பித்துள்ளீர்கள். உங்களை போல், மற்றொருவர் வரப்போவது இல்லை, உங்களை மிஸ் செய்கிறேன் என ட்விட் செய்துள்ளார்.
நடிகை கஸ்தூரி: "விவேக் சார் இல்லை என்பதை ஜீரணிக்க முடியாது. இது நம் அனைவருக்கும் இருண்ட நாள். நான் ஒரு மதிப்புமிக்க நண்பனை இழந்துவிட்டேன். தமிழ் சினிமா தனக்கு பிடித்த மகனை இழந்துள்ளது. நாடு ஒரு அற்புதமான முன்மாதிரியை இழந்துள்ளது. ஓம் சாந்தி விவேக்" என கூறியுள்ளார். மேலும் தொடர்ந்து பல பிரபலங்கள் நடிகர்கள் தங்களுடைய சமூக வலைத்தளம் மூலம் நடிகர் விவேக்கிற்கு தங்களுடைய இரங்கலை தெரிவித்து வருகிறார்கள்.