சன் டிவியின் முன்னணி சீரியல் நிறுத்தப்படுகிறதா..? அதிர்ச்சியில் இல்லத்தரசிகள்..!
குறிப்பிட்ட தனியார் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கு எப்போதுமே இல்லத்தரசிகள் மற்றும் சீரியல் ரசிகர்களுக்கு வரவேற்பு இருந்து கொண்டே தான் இருக்கும்.
அந்த வகையில் நாளுக்கு நாள் விறுவிறுப்பாகவும், டி.ஆர்.பி - யில் மற்ற சீரியல்களுக்கு டஃப் கொடுத்து வருவது ரோஜா சீரியல்.
கிட்ட தட்ட 700 எபிசோடுகளை கடந்து ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியல்... திடீர் என நிறுத்தப்படுவதாக ஒரு தகவல் வெளியானது.
இந்த செய்தி ரோஜா சீரியல் ரசிகர்களுக்கு மட்டுமல்லாமல், சின்னத்திரை ரசிகர்களுக்கும் அதிர்ச்சியை கொடுத்தது.
முன்னணி இடத்தை பிடித்த ஒரு சீரியல் எப்படி திடீர் என நிறுத்தப்படும் என்கிற கேள்வியும் எழுந்தது.
இதனால் அதிர்ச்சி முடிந்த ரசிகர்கள் மனதை குளிர்விப்பது போல், ரோஜா சீரியல் கண்டிப்பாக நிறுத்திவைக்கப்படாது என்று சன் டிவி தரப்பில் இருந்து தகவல்கள் வெளியாகியுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த சீரியலில் பிரியங்கா ராவ் கதாநாயகியாகவும், சிப்பு சுரேன் கதாநாயகனாகவும் நடித்து வருகிறார்கள். மேலும் முக்கிய கதாபாத்திரத்தில், வடிவுக்கரசி, ஷாமிலி, ராஜேஷ், ரம்யா, உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.