நிலமோசடி விவகாரம்: பிரபல நடிகரின் தந்தை மீது சூரி பரபரப்பு புகார்... 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு...!
2 கோடி 70 லட்சம் ரூபாய் வாங்கி கொண்டு, இருவர் மீதும் சென்னை அடையாறில் உள்ள காவல் நிலையத்தில் நில மோசடி புகார் கொடுத்துள்ளார் சூரி.
தமிழ் திரையுலகில் உள்ள முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவர் சூரி.
பல்வேறு கஷ்டங்களை கடந்து, தற்போது காமெடி நடிகராக மட்டும் இன்றி, வெற்றிமாறன் இயக்கத்தில் ஒரு படத்தில் ஹீரோவாகவும் நடித்து வருகிறார்.
இந்நிலையில் இவர் தற்போது தனக்கு இரண்டு பேர் நிலம் வாங்கி தருவதாக கூறி ஏமாற்றியதாக காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார்.
வீரதீர சூரன் பட தயாரிப்பாளர் அன்புவேல் ராஜன் மற்றும் ரமேஷ் என்பவர்கள் மீது புகார் கொடுத்துள்ளார். வீரதீர சூரன் படத்தில் நடித்ததற்காக நடிகர் சூரிக்கு ரூ.40 லட்சம் சம்பள பாக்கி உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
மற்றொருவர், பிரபல முன்னணி நடிகர் விஷ்ணு விஷாலின் தந்தை ரமேஷ் குடவாலா தான்.
2 கோடி 70 லட்சம் ரூபாய் வாங்கி கொண்டு, இருவர் மீதும் சென்னை அடையாறில் உள்ள காவல் நிலையத்தில் நில மோசடி புகார் கொடுத்துள்ளார் சூரி.
இந்த புகாரை விசாரித்த காவல் துறையினர், நடிகர் விஷ்ணு விஷாலின் தந்தை மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்கு தொடர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.
விஷ்ணு விஷாலின் தந்தை ரமேஷ் குடவாலா முன்னாள் காவல் துறை அதிகாரி என்பது குறிப்பிடத்தக்கது.