MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • கற்பைக் காப்பாற்ற போராடிய விஜய் & சூர்யா - மிஸ்டர் க்ளீன்னு சர்டிபிகேட் கொடுக்கும் பாடகி சுச்சி!

கற்பைக் காப்பாற்ற போராடிய விஜய் & சூர்யா - மிஸ்டர் க்ளீன்னு சர்டிபிகேட் கொடுக்கும் பாடகி சுச்சி!

Suchitra About Vijay and Suriya : பிரபல பாடகி சுசித்ரா, நடிகர் விஜய் மற்றும் சூர்யா குறித்த சில விஷயங்களை பகிர்ந்துள்ளார்.

3 Min read
Ansgar R
Published : Sep 09 2024, 09:39 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Actor Dhanush

Actor Dhanush

தமிழ் திரையுலகில் பல சிறந்த பாடல்களை பாடி, கோலிவுட் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற பாடகி தான் சுசித்ரா. தமிழில் கடந்த 2002ம் ஆண்டு வெளியான ஷாமின் "லேசா லேசா" திரைப்படத்தின் மூலம் இவர் பாடகியாக அறிமுகமானார். அதற்கு அடுத்த ஆண்டு மாதவனின் "ஜே ஜே" படத்தில் வெளியான "மே மாசம் 98ல் மேஜர் ஆனேனே" என்கின்ற பாடல் பட்டி தொட்டி எங்கும் ஹிட்டாக, கோலிவுட்டின் டாப் பாடகியாக மாறினார் சுசி.

கடந்த 2002ம் ஆண்டு துவங்கிய அவருடைய கலைப் பயணம் கடந்த 2016ம் ஆண்டு வரை எந்தவித பிரச்சனையும் இல்லாமல் பயணித்து வந்தது. இந்த சூழலில் தான் சில ஆண்டுகளுக்கு முன்பு "சுச்சி லீக்ஸ்" என்கின்ற தலைப்பில் வெளியான பல விஷயங்கள், கோலிவுட் உலகையே புரட்டிப் போட்டது. பல நடிகர்கள், நடிகைகள் குறித்த சர்ச்சை மிகுந்த பல கருத்துக்களை தொடர்ச்சியாக வெளியிட தொடங்கினார் பாடகி மற்றும் டப்பிங் கலைஞர் சுசித்ரா.

ஒரு கட்டத்தில் பிரபல நடிகர் தனுஷ் ஒரு ஓரினசேர்கையாளர் என்றும், அவரோடு இணைந்து தன்னுடைய கணவரை தனிமையில் ஒரு அறையில் கண்டிருப்பதாகவும் பரபரப்பான குற்றச்சாட்டு ஒன்றை அவர் முன்வைத்தது கோலிவுட் உலகை அதிர வைத்தது.

'லியோ' வசூலை நெருங்க கூட முடியல... திணறும் தளபதியின் 'கோட்'! அதிகார பூர்வ வசூலை வெளியிட்ட படக்குழு!

24
Karthik kumar

Karthik kumar

அதேபோல தமிழில் கடந்த 2000வது ஆண்டு பிரபல நடிகர் மாதவன் நடிப்பில் வெளியான "அலைபாயுதே" என்கின்ற திரைப்படத்தின் மூலம் நடிகராக தமிழ் திரை உலகில் களமிறங்கியவர் தான் கார்த்திக் குமார். தொடர்ச்சியாக ஹிந்தி, தமிழ் மற்றும் ஆங்கிலம் என்று மூன்று மொழிகளிலும் பல திரைப்படங்களில் அவர் நடித்திருந்தாலும், தான் "டைப் காஸ்ட்" படுத்தப்படுவதாக அவர் பலமுறை வேதனையோடு பேசியுள்ளார். "டைப் காஸ்டிங்" என்பது, ஒரே வகையான கதாபாத்திரங்களுக்கு மட்டுமே, ஒரு குறிப்பிட்ட நடிகரை நடிக்க அழைப்பது. 

தமிழ் சினிமாவில் நல்ல சாக்லேட் பாயாக வலம் வந்த அவர் கடந்த 2005ம் ஆண்டு பிரபல பாடகி சுசித்ராவை திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவரும் இணைந்து சுமார் 12 ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்தனர். ஆனால் தனது கணவர் ஒரு ஓரினசேர்கையாளர் என்பது தனக்கு கல்யாணமான சில ஆண்டுகளிலேயே தெரிந்துவிட்டது என்றும், ஆனால் குடும்பத்தாரின் வற்புறுத்தலால் அவரை பிரியாமல் தான் இருந்ததாகவும் கூறி இருந்தார். இந்த சூழலில் தான் கடந்த 2017ம் ஆண்டு இந்த ஜோடி விவாகரத்து பெற்றது. அதன் பிறகு அம்ரிதா சீனிவாசன் என்பவரை கடந்த 2021ம் ஆண்டு கார்த்திக் குமார் திருமணம் செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது. 

தனது முன்னாள் கணவர் கார்த்திக் குமார் தன்னுடைய பாலினம் குறித்து பலரிடம் வெளியில் சொல்லாமல் இருக்கிறார். அப்படி அவர் தயங்குவது ஏன் என்று பகிரங்கமாக பல கேள்விகளை அவர் எழுப்பிய நிலையில், நான் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு மதிப்பு கொடுப்பவன், ஆனால் என்னுடைய பாலினத்தை மறைக்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை என்று கூறி கார்த்திக் குமார் அதற்கு பதிலும் அளித்திருந்தார்.

34
Ulaga Nayagan Kamal

Ulaga Nayagan Kamal

இப்படி தொடர்ச்சியாக பல சர்ச்சையான கருத்துக்களை பேசி வந்த பாடகி சுசித்ரா, சில மாதங்களுக்கு முன்பு பிரபல நடிகர் கமல்ஹாசன் குறித்து பரபரப்பு தகவல் ஒன்றை வெளியிட்டார். அதில் கொக்கைன் போன்ற பெரிய போதை பொருட்கள் பயன்படுத்தப்படும் பார்ட்டிகள் கமல்ஹாசன் வீட்டில் நடைபெறும், அதில் பல நடிகர், நடிகைகள் கலந்து கொண்டு போதைப்பொருட்களை உட்கொள்வார்கள் என்று கூறியிருந்தார். 

இதற்கு அவரிடம் ஆதாரம் இருக்கிறதா? இல்லையா? என்பது அவருக்கு வெளிச்சம், இருப்பினும் சினிமா உலகில் மிகப்பெரிய புகழோடு வலம் வந்து கொண்டிருக்கும் ஒரு நடிகர் மீது, அவர் இப்படி ஒரு குற்றச்சாட்டை வைத்தது பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியது. அது மட்டுமல்ல நடிகர் கமல்ஹாசன் ஒரு திருநங்கை என்றும், அவர் நடித்த "தசாவதாரம்" திரைப்படத்தை நாங்கள் ஆய்வு செய்து விரைவில் அது குறித்த விவரங்களை வெளியிடுவோம் என்றும் சுசித்ரா கூறியிருந்தது தலைசுற்றலை ஏற்படுத்தியது.

44
Vijay and Suriya

Vijay and Suriya

அவ்வப்போது இப்படி சர்ச்சையான பல கருத்துக்களை வெளியிட்டு வரும் பாடகி சுசித்ரா, இப்போது மிஸ்டர் கிளீன் என்று இரண்டு நடிகர்களுக்கு சான்று கொடுத்துள்ளது பெரும் ஆச்சரியங்களை ஏற்படுத்தியிருக்கிறது. விஜய் மற்றும் நடிகர் சூர்யா ஆகிய இருவரும் தமிழில் சினிமாவை பொறுத்தவரை மிஸ்டர் கிளீன் நடிகர்களாக வாழ்பவர்கள். அவர்கள் இரண்டு பேரும் தங்களை யாரும் தொடவிடாத வண்ணம் தங்களுடைய கற்பை பத்திரமாக காப்பாற்றிக் கொண்டிருப்பவர்கள். 

ஆனால் அப்படி இருப்பதற்கு அவர்கள் ரொம்பவே கஷ்டப்பட்டார்கள், இன்னும் சொல்லப்போனால் விஜய் வீட்டில் பார்ட்டிகள் நடந்தால் கூட அவர் தனியாக நின்று தான் அந்த நேரத்தை செலவிடுவார், சூர்யாவும் ஒரு நல்ல நடிகர் என்று கூறுகிறார். ஏற்கனவே பாடகி சுசித்ரா நடிகர் விஜய் மற்றும் த்ரிஷாவை இணைத்து சில விஷயங்களை பேசியது அனைவரும் அறிந்ததே. ஆனால் இப்பொது அவர் இந்த இரு நடிகர்களுக்கு மிஸ்டர் கிளீன் என்று சான்று கொடுத்திருப்பது கொஞ்சம் ஆச்சர்யங்களை தான் உருவாகியுள்ளது. 

கேரவனில் சீக்ரெட் கேமரா விவகாரம்; மோகன் லாலுடன் பேசியது என்ன? ராதிகா போட்டுடைத்த உண்மை!

About the Author

AR
Ansgar R
தனுஷ்
சூர்யா
தமிழ் சினிமா
விஜய் (நடிகர்)

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved