அடி ஆத்தி... இது நம்ம யாஷிகா தானா?... மஞ்சள் நிற பட்டுப்புடவையில் மங்களகரமாக நடத்திய போட்டோ ஷூட்...!
அட இது நம்ம யாஷிகா ஆனந்த் தானா என ரசிகர்களே வாய்பிளக்கும் அளவிற்கு அசத்தல் போட்டோ ஷூட் ஒன்றை நடத்தியுள்ளார்.
இருட்டு அறையில் முரட்டு குத்து படம் மூலம் ரசிகர்களின் கவர்ச்சி புயலாக பிரபலமானவர் யாஷிகா ஆனந்த். அதன் பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் பட்டி, தொட்டி எல்லாம் பிரபலமானார்.
அதன் பின்னர் ரகுமானின் ‘துருவங்கள் 16’, விஜய் தேவரகொண்டாவின் ‘நோட்டா’, யோகி பாபுவின் ‘ஜாம்பி’ ஆகிய சில படங்களில் நடித்தார்.
தற்போது யாஷிகாவின் கைவசம் ‘ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது’, ‘இவன் தான் உத்தமன்’,‘ராஜபீமா’ ஆகிய படங்கள் உள்ளன.
அவ்வப்போது என்றில்லாமல் எப்போதுமே இஷ்டத்துக்கு கவர்ச்சி காட்டும் யாஷிகாவின் போட்டோஸ் சோசியல் மீடியாவில் வைரலாகி விடுகிறது. முன்னழகு, பின்னழகை காட்டி சோசியல் மீடியாவை சூடேற்றி வரும் யாஷிகா ஆனந்தின் போட்டோ ஷூட் ஒன்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காரணம் எப்போதும் இன்ஸ்டாகிராமில் ஹாட் போட்டோக்களை தட்டிவிடும் யாஷிகா ஆனந்த மிக மிக அடக்க ஒடுக்கமான லுக்கில் போஸ் கொடுத்துள்ளார்.
ஆமாங்க... மஞ்சள் நிற பட்டுப்புடவை, அதனுடன் அழகாக ஒத்துப்போகும் வகையில் அடர் பச்சை நிற ஜாக்கெட் அணிந்து பார்ப்பவர்களையே ஆச்சர்யப்பட வைக்கிறார்.
அழகிய நெற்றிச்சுட்டி, ஜிமிக்கி கம்மல், நெக்லஸ், வளையல் என அனைத்து நகைகளும் யாஷிகாவின் ஆடைக்கு அப்படியே மேட்ச்சாகி அழக்கு அழகு சேர்க்கிறது.
பேக்ரவுண்டில் செய்யப்பட்டிருக்கும் பூ அலங்காரமும், அதற்கு பொருத்தமான யாஷிகாவின் அடக்க ஒடுக்கமான போஸும் காண்போர் கண்களை விட்டு நீங்க மறுக்கிறது.
அட நிஜமாவே இது யாஷிகா தானா? என ரசிகர்களே மீண்டும், மீண்டும் உற்று பார்க்கும் அளவிற்கு டோட்டலாக மாறி குடும்ப குத்துவிளக்காக ஜொலி, ஜொலித்துள்ளார்.
இவ்வளவு எதிர்பாராத சர்ப்பிரைஸ் இருந்தும் ரசிகர்களுக்கு ஒரே ஒரு குறை மட்டும் தானாம். லூஸ் ஹேர் ஸ்டைலுக்கு பதிலாக அழகாக பின்னல் போட்டு தலை நிறைய மல்லிகைப்பூவுடன் வந்திருந்தால் இன்னும் கலக்கலாக இருக்குமென கமெண்ட் செய்து வருகின்றனர்.