கேவலமாக விமர்சித்த நெட்டிசன்கள்..! உங்களுக்கு வெட்கமே இல்லையா? கிழி கிழினு கிழித்த ஷிவானி..!
சீரியல் நடிகை ஷிவானி நாராயணன் தினம் தோறும்... வெளியிடும் கவர்ச்சி புகைப்படங்களுக்கு ஏகப்பட்ட விமர்சனங்களும், ஆதரவுகளை கிடைத்து வரும் நிலையில், தன்னை கீழ்த்தனமாக விமர்சனம் செய்தவர்களுக்கு பதிலடி கொடுக்கும் விதத்தில் அதிரடியாக பதிவு ஒன்றை போட்டுள்ளார் ஷிவானி.
சீரியல் நடிகை ஷிவானி நாராயணன், வெள்ளித்திரை கனவோடு பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், தாறு மாறான கமெண்ட் ஒன்றை போட்டு விமர்சகர்களை கிறுகிறுக்க வைத்துள்ளார்.
இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் பதிவு செய்துள்ளதாவது, நான் பதிவிடும் புகைப்படங்களுக்கு மூன்றாம் தரமான, கருத்துக்களை தெரிவிக்கும் சிலருக்கு நான் ஒன்றை சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.
யுடியூப் மூலம் பணம் சம்பாதிக்கும் நோக்கத்துடன் ஒருசிலர் என்னைப்பற்றி கீழ்த்தனமாக விமர்சனம் செய்கின்றனர்.
இது போன்று ஒரு பெண்ணை விமர்சனம் செய்ய உங்களுக்கு வெட்கமாக இல்லையா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும் நான் எந்தமாதிரியான ஆடைகளை உடுத்த வேண்டும் என்பதை தேர்வு செய்யும் உரிமை எனக்கு உள்ளது.
எதை அணிய வேண்டும் எதை அணியக் கூடாது என்று எனக்கு தெரியும்.
என்னுடைய பெற்றோர்கள் என்னை நன்கு வளர்ந்து உள்ளார்கள். நான் எதையும் சுயமாக தேர்வு செய்ததற்கான சுதந்திரத்தை எனக்கு அவர்கள் கொடுத்துள்ளார்கள் .
நான் பதிவு செய்யும் புகைப்படங்கள், ஆடும் நடனங்கள் இவை அனைத்துமே யாரையும் கவர்ந்திழுக்கும் நோக்கத்திற்கு அல்ல. அதுபோன்ற அவசியமும் எனக்கு இல்லை.
என்னுடைய சுய விருப்பத்தினால் நான் அதை பதிவு செய்து வருகிறேன். எனவே மோசமான விமர்சனங்கள் செய்து என்னை காயப்படுத்த முயற்சிக்க வேண்டாம். அவ்வாறு முயற்சித்தால் நீங்கள் தோல்வி அடைவீர்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.
இத்தனை நாள் கவர்ச்சியை காட்டி எதையும் கண்டு கொள்ளாமல் இருந்த ஷிவானி, திடீர் என இப்படி பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.