அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி... சாலை விபத்தில் சிக்கிய பிரபாஸ் படக்குழுவினர்..!
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு தான், பாகுபலி நாயகன் நடித்து வரும், 'ஆதிபுருஷ்' படப்பிடிப்பு நடந்த செட்டில் தீ விபத்து நடந்த நிலையில், தற்போது 'சலார்' படக்குழுவினர் சாலை விபத்தில் சிக்கியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நடிகர் பிரபாஸ் நடிப்பில் கடந்த ஆண்டு ஒரு படம் கூட வெளிவராத நிலையில், தற்போது மூன்று படங்களில் ஓய்வில்லாமல் 'ராதே ஷியாம்', 'ஆதிபுருஷ்', மற்றும் 'சலார்' ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
சமீபத்தில் தான் மும்பையில் இவர், நடித்து வரும் 'ஆதிபுருஷ்' படத்தின் செட் அமைத்துள்ள ஸ்டுடியோவில் மிகப்பெரிய தீ விபத்து ஏற்பட்டது.
தீவிபத்து நடந்த நேரத்தில் எந்த படப்பிடிப்பும் நடைபெறாததால் பல லட்சம் பொருள் சேதம் மட்டுமே ஏற்பட்டதாக கூறப்பட்டது.
இதை தொடர்ந்து தற்போது பிரபாஸ், 'சலார்' படப்பிடிப்பில் கலந்து கொண்டு நடித்து வந்தார், இந்த படத்தின் படப்பிடிப்பு ஆந்திரா மற்றும் மும்பையில் நடைபெற்று வந்தது.
இந்நிலையில் 'சலார்' படக்குழுவினர், படப்பிடிப்பு முடிந்து தாங்கள் தங்கி இருக்கும் ஹோட்டலுக்கு சென்ற போது, இவர்கள் வந்த வேன், லாரி ஒன்றில் மோதி விபத்திற்குள்ளது.
இதில் காயமடைந்த படக்குழுவினர் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
படப்பிடிப்பு நடந்து ஸ்டுடியோவில் தீ விபத்து ஏற்பட்ட அதிர்ச்சி, அடங்குவதற்குள் பிரபாஸ் நடித்து வரும் படத்தின் படக்குழுவினர் சாலை விபத்தில் சிக்கியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.