பெண்களை வைத்து தொழில் செய்யும் நாஞ்சில் விஜயன்..! வனிதா விஷயத்தில் சிக்கியது எப்படி? லாயர் அதிரடி!
வனிதாவின் லாயர் சூர்யா தேவியின் பின்னணியில் உள்ள பிரபல குறித்து பேசி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
வனிதா மூன்றாவது திருமணம் செய்து கொண்ட விஷயம் பல்வேறு விமர்சனங்களுக்கு ஆளாகி வரும் நிலையில், இந்த விஷயத்தில் புதிதாக சிக்கி இருப்பவர் பிரபல தனியார் தொலைக்காட்சி மூலம் காமெடியனாக அறியப்பட்ட நாஞ்சில் விஜயன்.
இவர் குறித்த புகார் வெளியான நிலையில், தனக்கும் இதுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என கூறினார் நாஞ்சில் விஜயன்.
இந்நிலையில் நாஞ்சில் விஜயன், சூர்யா தேவி குறித்த பல ஆதாரங்கள் தன்னிடம் உள்ளதாக கூறி, அதிர்ச்சி கொடுத்துள்ளார் வனிதாவின் லாயர் ஸ்ரீதர். இதுகுறித்து பிரபல ஊடகம் ஒன்றிற்கு கொடுத்துள்ள பேட்டியில்... கூறியுள்ளதாவது...
சூர்யா தேவி வனிதாவை பற்றி தேவையில்லாமல் விமர்சித்து பேசிய போது, இதன் பின்னணியில் யாரோ இருக்கிறார் என்பது பற்றி தங்களுக்கு சந்தேகம் வலுத்தது. அது நாஞ்சில் விஜயன் குரல் போலவே இருந்தது. அதே போல் சூர்யா தேவி வீடியோ வெளிட்ட உடனேயே அதனை நாஞ்சில் விஜயன் தன்னுடைய யுடியூப் சேனலில் போட்டார். இப்போது வனிதா, பரவலாக பேசப்பட்டு வருவதால் அதனை வைத்து TRP யை உயர்த்துவதே அவரின் நோக்கம்.
நாஞ்சில் விஜயன் குறித்து விசாரித்த போது, அவர் பெண்களை வைத்து தொழில் செய்பவர் என்பது தெரியவந்ததாகும். இதற்கான அணைத்து ஆதங்களும் தன்னிடம் உள்ளதாக வனிதாவின் லாயர் தெரிவித்துள்ளார். மேலும் சூர்யா தேவி கஞ்சா விற்பவர் என்று ஏற்கனவே ஒரு ஆடியோவை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.
அதே போல் சூர்யா தேவியிடம் பேசிய போது அவர் கஞ்சா விற்பனை செய்வதாக பேசினார். இவர்கள் இருவரிடமும் பேசியது ஒருவர் தான் என்றும், ஆனால் அந்த பிரபலம் குறித்து வெளியில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை என்பதையும் ஸ்ரீதர் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் தற்போது திரையுலகில் தீயாக பற்றி எரிந்து வருகிறது.